--> -->

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையின்போது 1,630 சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது

ஜூலை 21, 2020

பொலிசாரினால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 1,630 சந்தேகநபர்கள் இன்று (21) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, ரிப்பீட்டர் ரக துப்பாக்கி, மூன்று குறுந்தூர துப்பாக்கிகள், இரண்டு சட்டவிரோத கத்திகள் மற்றும் 123 துப்பாக்கி ரவைகள் வைத்திருந்த பத்து  சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் போதைப்பொருள் வினியோக நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 390 சந்தேகநபர்களும் சட்ட விரோத மதுபானம் பாவனையுடன் தொடர்புடைய 278 பேரும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 309  பேரும் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 641 பேரும் இந்த தேடுதல் நடவடிக்கையின்போது அந்தந்தப் பிரதேசத்துக்கு பொறுப்பான பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர்.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட இந்த தேடுதல் நடவடிக்கையின் போது 7,659 லீட்டர் சட்டவிரோத மதுபானம், 191கிராம் ஐஸ் ரக போதை பொருள் மற்றும் 148 கிராம் ஹெரோயின் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.