--> -->

வெலிகட சிறைச்சாலைக்கு ஹெரோயின் போதைப் பொருளை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட பூனை சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவினரால் பிடிக்கப்பட்டது

ஆகஸ்ட் 02, 2020

ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் சிம் அட்டைகளை வெலிக்கடை மெகசின் சிறைச்சாலைக்குள் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட பூனை ஒன்று சிறைச்சாலை அதிகாரிகளினால் நேற்றைய தினம் பிடிக்கப்பட்டது.    

பிடிக்கப்பட்ட பூனையின் கழுத்தில் ஒன்று மற்றும் இரண்டு கிராம் ஹீரோயினை கொண்ட சிறிய பக்கெட், இரண்டு சிம் கார்டுகள் மற்றும் ஒரு மெமரி சிப் என்பனவற்றை உள்ளடக்கிய பொலித்தீன் பை ஒன்று காணப்பட்டதாக நிர்வாகத்திற்கு பொறுப்பான சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான சந்தன ஏகனாயக்க தெரிவித்தார்.   

சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளினால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய குறித்த பூனை பிடிக்கப்பட்டது.   

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொரல்ல பொலிஸ் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.