--> -->

கொழும்பின் ஐந்து பிரதேசங்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிப்பு

ஒக்டோபர் 22, 2020

கொழும்பு மாவட்டத்தில் உள்ள மட்டக்குளி, முகத்துவாரம், வெல்லம்பிட்டிய, ப்ளூமென்டல் மற்றும் கிராண்பாஸ் ஆகிய பொலிஸ் பிரதேசங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சற்று முன்னர் தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடரவுள்ளது.

ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள மேற்குறிப்பிட்ட பகுதிகளினூடாக வாகனங்களில் நிறுத்தாமல் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் ஊழியர்கள் தமது சேவை அடையாள அட்டையை  ஊரடங்குச் சட்ட அனுமதி பத்திரமாக பயன்படுத்த முடியும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.