--> -->

சேவா வனிதா பிரிவினால் பாதுகாப்பு அமைச்சில்
“அவுருது பொல” விற்பனை கூடங்கள்

ஏப்ரல் 10, 2023

எதிர்வரும் தமிழ் சிங்கள புதுவருடத்தினை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சில் “அவுருது பொல” புதுவருட சந்தை இன்று (ஏப்ரல், 10) இடம்பெற்றது. பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட புதுவருட சந்தையினை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்கள் இன்று காலை வைபவரீதியாக திறந்துவைத்தார்.

இச்சந்தையில், காய்கறிகள், பழங்கள், உள்நாட்டு அரிசி வகைகள், மாவு மற்றும் பருப்புவகைகள், பண்ணை உற்பத்திப்பொருட்கள், தைத்த ஆடைகள், காலணிகள் மற்றும் ஏனைய மலிகை பொருட்கள் என்பன நியாயமான விலையில் விற்பனை செய்யப்பட்டன.

இந்த புதுவருட காலத்தில் பாதுகாப்பு அமைச்சின் ஊழியர்களுக்கு சலுகை விலையில் நல்ல தரமான பொருட்களை வழங்குவதற்காக ஒரு நலன்புரி நடவடிக்கையாக இந்த “அவுருது பொல” ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுவருட சந்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.