--> -->

தேசிய பாதுகாப்பு கல்லூரி அதிகாரிகளுக்கான செயலமர்வில் பாதுகாப்பு செயலாளரினால் விஷேட சொற்பொழிவு

நவம்பர் 10, 2023

பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவினால் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் இன்று (நவம்பர் 10) விரிவுரை நிகழ்த்தப்பட்டது. ‘இலங்கையில் தேசிய பாதுகாப்பு மூலோபாய தீர்மானங்களை உருவாக்கும் கட்டமைப்பு’ எனும் தலைப்பில் இந்த விரிவுரை இடம் பெற்றது.

இந்த விரிவுரையானது பங்கேற்பாளர்களுக்கு தேசிய பாதுகாப்பின் பல்வேறு அம்சங்களில் அவர்களின் அறிவினை விரிவுபடுத்த உதவியது.

பாதுகாப்பு கல்லூரிக்கு வருகை தந்த பாதுகாப்பு செயலாளரை இலங்கை தேசிய பாதுகாப்பு கல்லூரியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா வரவேற்றார்.

தேசிய பாதுகாப்பு கல்லூரி 2021இல் இலங்கையின் முதன்மையான மூலோபாய கல்வி நிறுவனமாக ஸ்தாபிக்கப்பட்டது. இது கூட்டு அறிவுசார் திறன் மூலம் நாட்டின் தேசிய பாதுகாப்பு பொறிமுறையினை வலுப்படுத்துவதற்காக ஆட்சி முறை, இராஜதந்திரம் மற்றும் சர்வதேச பாதுகாப்பு ஆகிய துறைகளில் எதிர்கால கொள்கை வகுப்பாளர்களை உருவாக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விரிவுரையையடுத்து பாதுகாப்புச் செயலாளர் அவர்களுக்கு தேசிய பாதுகாப்பு கல்லூரி கட்டளைத் தளபதி அவர்களினால் நினைவுச் சின்னம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.