போர் வீரர்கள் மற்றும் போர் வீரர் குடும்பங்ககுகளின் நலன் தொடர்பில் பொது தினத்தில் பாதுகாப்பு அமைச்சின் ஆதரவு
மே 30, 2025போர் வீரர்கள் மற்றும் மறைந்த போர் வீரர் குடும்பங்களின் நலன்புரி விடயங்கள் தொடர்பில் அதன் அயராத அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் வகையில் அவர்கள் முகம் கொடுக்கும் நிர்வாக பிரச்சினைகள் மற்றும் நலன்புரி வசதிகள் தொடர்பில் தீர்வு வழங்க இன்று (மே 30) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற பொது தினத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. புதன்கிழமை (மே 28) நடைபெற்ற பொது தினத்தை தொடர்ந்து இன்று நடத்தப்பட்ட இந்நிகழ்வுகள் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் மற்றும் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றன.
இந்நிகழ்வுகள் ஓய்வுபெற்ற மற்றும் ஊனமுற்ற வீரர்கள் மற்றும் போரில் உயிர் நீத்த படைவீரர் குடும்பங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நடத்தப்பத்துடன் பாதுகாப்பு செயலாளர், அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் அவற்றிற்கு உடனடியாக தீர்க்கவும், நலன்புரி திட்டங்களை செயல்படுத்துவதை விரைவுபடுத்தவும் அமைச்சு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
இந்த திட்டங்கள், போர் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலன்புரி மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான அமைச்சின் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாக நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.