பதில் பாதுகாப்பு அமைச்சர் SERRIC நிலையத்திற்கு விஜயம்
ஜூன் 12, 2025பதில் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) இன்று (ஜூன் 12) இலங்கை இராணுவ செனஹச கல்வி, வள, ஆராய்ச்சி மற்றும் தகவல் மையத்திற்கு (SERRIC) விஜயம் செய்தார். வருகை தந்த பதில் பாதுகாப்பு அமைச்சரை நிலையத்தின் கட்டளை தளபதி மற்றும் பணியாளர்கள் அன்புடன் வரவேற்றனர்.
இதன் போது SERRIC-ன் கட்டளை தளபதி பிரிகேடியர் உபேந்திர கருணாரத்னவின் நிலையத்தின் செயட்பாடுகள் குறித்து விளக்கமளித்தார். அதன் பின் பதில் அமைச்சர் வகுப்பறைகளை ஆய்வு செய்தார். இது மையத்தின் கல்விச் சூழலையும் உள்ளடக்கிய கற்றல் முறைகளை செயல்படுத்துவதையும் அவர் அவதானித்தார்.
நிகழ்ச்சியின் சிறப்பம்சமான ஒரு ஆவணப்படம் மற்றும் குழந்தைகளால் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளும் குழந்தை மேம்பாடு மற்றும் சிறப்புக் கல்விக்கான மையத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தின. இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், நிலையத்தில் கற்கும் குழந்தைகள் ஒரு நினைவுப் பரிசை பதில் அமைச்சருக்கு வழங்கினர்.
மேலும், மையத்தின் தற்போதைய தேவைகள் மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கு அரசாங்கத்தின் முழு ஆதரவையும் பதில் அமைச்சர் உறுதியளித்தார். விசேட அதிதிகள் புத்தகத்தில் குறிப்புகளை பதிவிட்டதன பின்னர் அவர் மாணவர்களுடன் ஒரு புகைப்படத்துக்கும் சமூகமளித்தார்.
இந்த நிகழ்வில், பாதுகாப்பு சேவைகள் மேலதிக செயலாளர் திரு. சமன் திசாநாயக்க, ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் மற்றும் SERRIC ஊழியர்கள் உள்ளிட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இது, சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகளுக்கு கல்வி மற்றும் பராமரிப்பை வழங்குவதில் தொடர்புடைய அதிகாரசபையின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.