NCC தலைமையகத்திற்கு பதில் பாதுகாப்பு அமைச்சர் விஜயம்

ஜூன் 13, 2025

பதில் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), இன்று (ஜூன் 13) கொழும்பு பாமன்கடையில் உள்ள தேசிய மாணவர் படையணி (NCC) தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார். இவ்விஜயம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கையின் பிரதான இளைஞர் மேம்பாட்டு நிறுவனங்களில் ஒன்றான NCC உடனான குறிப்பிடத்தக்க ஈடுபாட்டைக் எடுத்துக்காட்டுகிறது.

NCC, இலங்கையில் ஒரு முன்னணி இளைஞர் மேம்பாட்டு அமைப்பாகும். பாடசாலை மாணவர்களுக்கிடையே ஒழுக்கம், தலைமைத்துவம் மற்றும் தேசிய சேவை உணர்வை வளர்க்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்ட NCC, பொறுப்பான மற்றும் சிறந்த எதிர்கால குடிமக்களை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

NCC தலைமையகத்திற்கு வருகை தந்த பதில் அமைச்சருக்கு வாகன மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது. அங்கு சமூகமளித்திருந்த மாணவ படையணியினருடன் அமைச்சர் புகைப்படம் ஒன்றிட்கு பங்குபற்றியதுடன் அவர்களுடன் கதைக்கவும் நேரமெடுத்துக்கொண்டார். அதன் பின்னர் NCC யின் இயக்குனர் பிரிகேடியர் ரஜித பிரேமதிலக NCC இன் நோக்கம், செயல்பாடுகள், பயிற்சி முயற்சிகள் மற்றும் இலங்கை இளைஞர்களிடையே தலைமைத்துவம் மற்றும் ஒழுக்கத்தை வளர்ப்பதில் அதன் முக்கிய பங்கு தொடர்பில் விளக்கமளித்தார்.

அதனைத் தொடர்ந்து, பதில் அமைச்சர், NCC சிரேஷ்ட அதிகாரிகளுடன் ஒரு கலந்துரையாடளில் ஈடுபட்டார். NCC யின் தேவைகளை கேட்டறிந்த அவர் அதன் எதிர்கால வளர்ச்சிக்கு அரசாங்கத்தின் முழு ஆதரவையும் உறுதியளித்தார். தனது விஜயத்தை குறிக்குமுகமாக பார்வையாளர் புத்தகத்தில் குறிப்புகளையும் பதிவிட்டார்.

இளைஞர்களை மையமாகக் கொண்ட பாதுகாப்பு முயற்சிகளை ஆதரிப்பதில் அமைச்சசின் உறுதிப்பாட்டை இந்த வருகை அடிக்கோடிட்டுக் காட்டுவதுடன் தேசிய ஒற்றுமை, தலைமைத்துவம் மற்றும் பொறுப்பு தொடர்பில் NCC யின் பங்களிப்பையும் இவ்விஜயம் எடுத்துக்காட்டுவதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.