MOD சேவா வனிதா பிரிவினால் ஏட்பாடு செய்யப்பட்ட இரத்த தான முகாமில் அதிகளவு ஊழியர்கள் பங்கெடுப்பு

ஜூன் 18, 2025

பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு (SVU) இன்று (ஜூன் 18) ஏற்பாடு செய்த இரத்ததான முகாமில், அதிகளவான பாதுகாப்பு அமைச்சின் ஊழியர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். சர்வதேச இரத்த தானம் தினத்தையொட்டி SVU இன் தலைவர் Dr (திருமதி) ருவினி ரசிக்கா பெரேராவின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி இன்று காலை அமைச்சு வளாகத்தில் நடைபெற்றது.

பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவும் (ஓய்வு) இதன் போது சமூகமளித்திருந்தார்.

இந்த இரத்த தான முகாமில் அமைச்சில் சேவையாற்றும் ஏராளமான முப்படை வீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் கலந்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையின் (UHKDU) குழு ஒன்று மருத்துவ உதவியை வழங்கியது.

இந்நிகழ்ச்சி மக்கள் நலன் மற்றும் மனிதாபிமான சேவை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.