Deputy Minister of Defence Graces IPSC Nationals 2025 Awarding Ceremony தேசிய IPSC 2025 துப்பாக்கி சுடும் போட்டியின் விருது வழங்கும் விழாவில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் கலந்து கொண்டார் Deputy Minister of Defence, Major General Aruna Jayasekara (Retd), attended the awarding ceremony of the Sri Lanka International Practical Shooting Confederation (IPSC) Pistol Caliber Carbine (PCC) and Handgun Level III Nationals – 2025 as the Chief Guest. He was warmly welcomed by the President of the National Rifle Association of Sri Lanka (NRASL), Air Vice Marshal Ruwan Chandima. The prestigious event took place at the Wave’n Lake Navy Banquet Hall, Welisara, on Sunday (June 22). இலங்கை சர்வதேச IPSCயின் தேசிய துப்பாக்கிச் சூட்டு சாம்பியன்ஷிப் போட்டியின் விருது வழங்கும் விழாவில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) பிரதம விருந்தினராக கலந்து கொண்டார், விழாவிற்கு வருகை தந்த பிரதி அமைச்சரை இலங்கை தேசிய துப்பாக்கிச் சங்கத்தின் தலைவர் எயார் வைஸ் மார்ஷல் ருவன் சந்திம அன்புடன் வரவேற்றார். இந்த விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) வெலிசர "வேவ்'ன் லேக்" கடற்படை மண்டபத்தில் நடைபெற்றது. The IPSC Nationals, held from June 18 to 22, drew the participation of 270 competitors representing 16 entities, including the tri forces, underscoring the event’s growing prominence in the national sporting calendar. ஜூன் 18 முதல் 22 வரை நடைபெற்ற IPSC தேசிய துப்பாக்கி சுடும் புத்தியில், முப்படைகள் உட்பட 16 கழகங்களை சேர்ந்த 270 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இது இப் போட்டியின் வளந்துவரும் முக

ஜூன் 23, 2025

இலங்கை சர்வதேச IPSCயின் தேசிய துப்பாக்கிச் சூட்டு சாம்பியன்ஷிப் போட்டியின் விருது வழங்கும் விழாவில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) பிரதம விருந்தினராக கலந்து கொண்டார், விழாவிற்கு வருகை தந்த பிரதி அமைச்சரை இலங்கை தேசிய துப்பாக்கிச் சங்கத்தின் தலைவர் எயார் வைஸ் மார்ஷல் ருவன் சந்திம அன்புடன் வரவேற்றார். இந்த விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) வெலிசர "வேவ்'ன் லேக்" கடற்படை மண்டபத்தில் நடைபெற்றது.

ஜூன் 18 முதல் 22 வரை நடைபெற்ற IPSC தேசிய துப்பாக்கி சுடும் புத்தியில், முப்படைகள் உட்பட 16 கழகங்களை சேர்ந்த 270 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இது இப் போட்டியின் வளந்துவரும் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

பிரதம விருந்தினரின் வருகையுடன் விழா ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து பாரம்பரிய எண்ணெய் விளக்கேற்றல் மற்றும் இலங்கை தேசிய துப்பாக்கி சங்கத்தின் தலைவரின் வரவேற்பு உரை நடைபெற்றது. பரிசு விநியோகம் இரண்டு கட்டங்களாக நடாத்தப்பட்டது. இரண்டாவது கட்டத்தில், போட்டியில் அதிக செயல்திறனை வெளிப்படுத்திய பன்னிரண்டு பரிசு வென்றவர்களுக்கு பிரதம விருந்தினரால் விருதுகள் வழங்கி வைக்கப்பட்டது.

போட்டி இயக்குநர் ரியர் அட்மிரல் மஞ்சுள திசாநாயக்க, விருதுகள் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் கென்னத் எடெமா (ஓய்வு), IPSC இலங்கை பிராந்திய இயக்குநர் மேனகா லியனகே, கூட்டமைப்பின் செயலாளர் இஜாஸ் மீசான் மற்றும் பொருளாளர் டென்சில் காவ் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.