யுத்த வீரர்களின் நலனுக்கான பொது தின நிகழ்ச்சி
பாதுகாப்பு செயலாளர் தலைமையில் நடந்தது

ஒக்டோபர் 14, 2025

யுத்த வீரர்கள் மற்றும் மறைந்த வீரர்களின் குடும்பங்களின் நலனுக்கான பாதுகாப்பு அமைச்சின் உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், மற்றுமொரு பொது தின நிகழ்ச்சி, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் இன்று (அக்டோபர் 14) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.

ஓய்வுபெற்ற மற்றும் ஊனமுற்ற வீரர்களுக்கும், மறைந்த வீரர்களின் குடும்பங்களுக்கும் அவர்களின் குறைகள் மற்றும் கவலைகளை நிவர்த்தி செய்வதன் மூலம் உதவி வழங்குவதற்கான ஒரு முக்கிய தளமாக இந்த நிகழ்ச்சி செயல்பட்டது.

இதன் போது, பங்கேற்பாளர்களின் வேண்டுகோள்களை பாதுகாப்பு செயலாளர் கவனமாகக் கேட்டு, எழுப்பப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணித்தார். மேலும் அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்த திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வதன் முக்கியத்துவத் தையும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

யுத்த வீரர்கள் மற்றும் தேசத்திற்காக உயர்ந்த தியாகம் செய்தவர்களின் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் அமைச்சின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை இந்த நிகழ்வு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.