இலங்கைக்கு ரஷ்யா மனிதாபிமான உதவிகளை வழங்கியது
டிசம்பர் 10, 2025இலங்கைக்கு ரஷ்யாவின் மனிதாபிமான உதவி அன்பளிப்பு இன்று (டிசம்பர் 10) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) நடைபெற்ற நிகழ்வொன்றில் கையளிக்கப்பட்டது.
இலங்கைக்கான ரஷ்ய கூட்டமைப்பின் தூதுவர் அதிமேதகு Levan S. Dzhagaryan, கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது இதை உத்தியோகபூர்வமாக கையளித்தார். இங்கு உரையாற்றிய ரஷ்ய தூதுவர், இந்த சவாலான காலகட்டத்தில் இலங்கை மக்களுடன் ரஷ்யாவின் ஒத்துழைப்பை இந்த உதவி குறிக்கிறது என்று தெரிவித்தார்.
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கௌரவ அனுர கருணாதிலக்க, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), விமான நிலைய மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் (AASL) நிறுவனத்தின் தலைவர் எயார் சீஃப் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம (ஓய்வு) மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் (DMC) பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட (ஓய்வு) ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ரஷ்ய தூதரகம், பாதுகாப்பு அமைச்சு, வெளியுறவு அமைச்சு, அனர்த்த முகாமைத்துவ நிலையம், கடற்படை, விமானப்படை, இலங்கை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.