கிடைக்கப்பெற்ற ஒரு தொகை பொருட்கள் கந்தளாய் ஆதார
வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டது

டிசம்பர் 13, 2025

பாதுகாப்பு அமைச்சினால் பெறப்பட்ட ஒரு தொகை உதவிப் பெருட்கள் இன்று (டிசம்பர் 13) கந்தளாய் ஆதார வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டது. 

ICU படுக்கைகள், சக்கர நாற்காலிகள் மற்றும் குழந்தை தொட்டிகள் உள்ளிட்ட பொருட்கள் இவற்றில் அடங்கும். இது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை, நோயாளிகளின் நடமாட்டம் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவ சேவைகளை மேட்கொள்ள மேலும் உதவும். 

இந் நன்கொடை பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவர் Dr. (திருமதி) ருவினி ரசிகா பெரேராவினால் வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரி - திட்டமிடல் Dr. டி.எம்.ஏ.வி.ஆர். முனசிங்க மற்றும் குழந்தை மருத்துவ விசேட வைத்தியர் Dr. கீதாஞ்சலி ஜயதிலக டி சில்வா ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.

 சமூகநலம் முன்னேற்றம் சார்ந்த திட்டங்கள் மூலம் மிகவும் பாதிக்கப்பட்ட சமூகங்களை ஆதரிப்பதில் அமைச்சின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த நன்கொடை அடையாளப்படுத்துகிறது. 

 பாதுகாப்பு அமைச்சு மற்றும் கந்தளாய் ஆதார மருத்துவமனையின் அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.