--> -->

ஓமந்தை மரையிலுப்பைக்குளத்தில் ஏற்பட்ட உடைப்பு இராணுவத்தினரால் சீரமைப்பு

மார்ச் 29, 2021

ஓமந்தை, இலைமறந்தான் குளம் பிரதேசத்தில் உள்ள மரையிலுப்பைக் குளத்தில் ஏற்பட்ட நீர்க்கசிவினை  தடுத்து நிறுத்த இராணுவத்தினர் விரைந்து நடவடிக்கை எடுத்தனர். நீர்கசிவு காரணமாக குளக்கட்டு உடைப்பெடுப்பதை தவிர்க்கும் வகையில் இராணுவத்தினரால் மக்கள் நலன் கருதி இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

இதற்கமைய, வன்னி பாதுகாப்பு படை கட்டளையகத்தின் கீழ் உள்ள 21வது  சிங்க ரெஜிமெண்ட் படைவீரர்கள்  இந்த நீர்க்கசிவினை  தடுத்து நிறுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.

வவுனியா மாவட்ட செயலாளரும், நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகளும் இராணுவத்தினருடன் இணைந்து முன்னெடுத்த இந்த நடவடிக்கைக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்கினர்.

இந்த குளத்தில் மூலம்  96 ஏக்கருக்கும் மேற்பட்ட நெல் வயல்கள் காணிகள்  மற்றும் காய்கறி செய்கைகளுக்கு நீர்ப்பாசனம் வழங்குவதற்கான  தண்ணீர் வசதி உள்ளமை குறிப்பிடத்தக்கது.