--> -->

கடற்படையினரால் ரூ. 39 மில்லியன் பெறுமதியான கஞ்சா கைப்பற்றப்பட்டது

மே 23, 2021

யாழ் தொண்டமானாறு பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 39 மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட பெறுமதியுடைய கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது  பொதியிடப்பட்டிருந்த 131.8 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது. இவை அனைத்தும் கடத்தல்காரர்களினால் வேறு பிரதேசங்களுக்கு கொண்டுசெல்வதற்காக வகையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வேளையில் அப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு தேடுதல் நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடவடிக்கைகள் அனைத்தும் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.