--> -->

“யாஸ்” சூறாவளி தொடர்பான அறிவுறுத்தல்

மே 24, 2021

கிழக்கு - மத்தியவங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கமானது “யாஸ்” (“YAAS”) என்ற ஒருசூறாவளியாக வலுவடைந்து இன்று,மே 24ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வட அகலாங்கு 16.3N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 89.7E இற்கும் இடையில் மையம் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


அத்துடன் இந்த தாழமுக்கம் மேலும் வலுவடைந்து மே 25ஆம் திகதியளவில் சூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், தொடர்ந்து வரும் 24 மணித்தியாலங்களில் ஒரு மிகப் பாரிய சூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இத் தொகுதியானது வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மே 26ஆம் திகதி மாலையளவில் மேற்கு வங்காள கரையை அடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

எனவே, கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் நாட்டைச் சூழவுள்ள ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளிலும் வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.