--> -->

உலர்ந்த மஞ்சள் மற்றும் பீடி இலைகளுடன் சந்தேகநபர் கடற்படையினரால் கைது

ஜூன் 09, 2021

மன்னார் வங்காலை கடற்பரப்பில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 70 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மற்றும் 514 கிலோகிராம் பீடி இலைகள் என்பவற்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கடற்படையில் வடக்கு கட்டளையகத்தினால் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட இந்த உலர்ந்த மஞ்சளும், பீடி இலைகளும் கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் 17 பொலித்தீன் பைகளில் பொதியிடப்பட்டிருந்த அதேவேளை, இரண்டு பொலித்தீன் பைகளில் உலர்ந்த மஞ்சள் பொதியிடப்பட்டு கடல் மார்க்கமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் கடற் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கை சுகாதார வழி முறைகளுக்கு அமைய மேற்கொள்ளப்பட்டதாக கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட எருக்கலம்பிட்டிபவை சேர்ந்த 41 வயதுடைய சந்தேகநபர், கைப்பற்றப்பட்ட சட்டவிரோத பொருட்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வங்காலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.