--> -->

இலங்கை கடற்படை வெள்ள நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில்

ஆகஸ்ட் 02, 2022

திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  உடனடி நிவாரண நடவடிக்கைகளை வழங்குவதற்காக 48 வெள்ள நிவாரணக் குழுக்கள் தற்போது தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக  இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

அவசரகால சூழ்நிலைகளுக்கு முகங்கொடுக்கும் வகையில் நிவாரண குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மேற்கு, தெற்கு மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளைகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கடற்படையினர் இரண்டு வெள்ள நிவாரண குழுக்களை இரத்தினபுரி புதிய நகரில் நிலைநிறுத்தியுள்ளதுடன், மேலதிக குழுவொன்றை இரத்தினபுரி முவாகம பகுதிக்கு நேற்று மாலை (ஆகஸ்ட் 1) அனுப்பி வைத்துள்ளனர்.

தயார் நிலையிலுள்ள கடற்படை குழுக்கள் அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் ஒருங்கிணைப்பில் செயல்படும் என்று கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.