பாதுகாப்பு செய்திகள்
விமானப் படையின் புதுப்பிக்கப்பட்ட ஆளில்லா பறக்கும் விமான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி திட்டம் அங்குரார்ப்பணம்
கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் முப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவினால் விமானப்படையின் புதுப்பிக்கப்பட்ட ஆளில்லா பறக்கும் விமான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி திட்டம் அண்மையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இரத்த தானம் வழங்கும் நிகழ்வு படைவீரர்களினால் முன்னெடுப்பு
நாட்டில் நிலவும் தொற்றுநோய் சூழ்நிலையில் இரத்த மாதிரிகளுக்கு ஏற்பட்டுள்ள தேவையை பூர்த்தி செய்வதற்காக விமானப்படை சேவா வனிதா பிரிவினால் நேற்றையதினம் (ஆகஸ்ட் 05) கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் தேசிய இரத்த மாற்று சேவையுடன் இணைந்து இரத்த தான நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டது.
சந்தஹிரு சேய தூபியின் ‘சூடா மாணிக்கம்’ மற்றும் 'கோபுரம்' என்பன தரிசிப்புக்காக இன்று முதல் கங்காராமவில் காட்சிக்கு
மகா சங்கத்தினரின் மத ஆசிர்வாதங்களுடன் சந்தஹிரு சேய தூபியின் ‘சூடா மாணிக்கம்’ மற்றும் 'கோபுரம் ' என்பன பொதுமக்கள் வழிபாட்டிற்காக கொழும்பு, கங்காராம விஹாரையில் இன்று (ஆகஸ்ட், 05) வைக்கப்பட்டது.
கற்பிட்டியில் 820 கிலோ கிராம் கடல் அட்டைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
கற்பிட்டி, கீரிமுந்தலம் கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது 16 மில்லியன் ரூபா பெறுமதியான சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 820 கிலோ கிராம் கடலட்டையுடன் சந்தேகநபர்கள் ஏழு பேர் கடற் படையினரால் கைது செய்யப்பட்டனர். குறித்த சந்தேக நபர்கள் பயன்படுத்திய இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பை மேலும் ஊக்குவிக்கும் கொழும்பு பாதுகாப்பு மாநாடு
கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான ஐந்தாவது தேசிய பிரதி பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு கூட்டம், இந்தியா, இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளது உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளுக்கிடையே இராணுவ தலைமையகத்தில் நேற்று (ஓகஸ்ட், 04) இடம்பெற்றது.
விமானப்படையினரால் தயாரிக்கப்பட்ட ஒக்ஸிஜன் தெரபி உபகரணங்கள் சுகாதார அதிகாரிகளிடம் கையளிப்பு
கொவிட் -19 நோயாளிகளின் பயன்பாட்டிற்கென இரண்டு ஒக்ஸிஜன் தெரபி உபகரணங்கள் தெல்தெனிய ஆதார வைத்தியசாலை மற்றும் பேராதனை போதனா வைத்தியசாலை ஆகியவற்றிற்கு இலங்கை விமானப்படை கையளித்துள்ளது.
முல்லேரியா வைத்தியசாலையில் புதிய வார்டு வளாகம் விமானப்படையினரால் நிர்மாணம்
இலங்கை விமானப்படை முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் புதிய வார்டு வளாகத்தின் நிர்மாண பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு சுகாதார அமைச்சர் கெளரவ. பவித்ராதேவி வன்னியாராச்சியிடம் நேற்று (ஆகஸ்ட் 3) கையளிக்கப்பட்டது.
இராணுவ தலைமையகத்திற்கு ஜனாதிபதி விஜயம்
அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று (ஆகஸ்ட் 3) ஸ்ரீ ஜெயவர்த்தனபுர, கோட்டே பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை- வளிமண்டலவியல் திணைக்களம்
அந்தமான் தீவுகளுக்கு அருகில் 6.5 ரிச்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்டு தீ அணைக்கப்பட்டது
உலர்நிலையுடன் கூடிய வானிலை காரணமாக பதுளை பம்பரகலகந்த பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ 112வது பிரிகேட்டின் படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
கடற்படையினரால் பாடசாலை அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுப்பு
மண்டைதீவு ரோமன் கத்தோலிக்க கல்லூரியில் இலங்கை கடற்படையின் அனுசரணையுடன் கட்டப்பட்ட பாடசாலை கட்டிடம் கல்லூரி அதிகாரிகளிடம் நேற்று (ஆகஸ்ட், 01) கையளிக்கப்பட்டது.
யாழில் 109 கிலோகிராம் கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
யாழ் தொண்டமானாறு முதல் மண்முனை வரையான கரையோர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 109.15கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் இதற்கென பயன்படுத்திய படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
படையினரைதொழில்முயற்சியாளர்களாக மாற்றியமைத்தமைக்கு பாதுகாப்புச் செயலாளர் பாராட்டு
படைவீரர் ஒருவர் தனக்கு வழங்கப்படும் எந்தவொரு பணிகளையும் செய்யத் தயார் நிலையில் உள்ளதால் அவர்களால் செய்ய முடியாது என்று ஒன்றுமில்லை என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) இன்று (ஆகஸ்ட் 1) தெரிவித்தார்.
கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் கல்வி இராணுவமயமாக்கப்பட்டுள்ளதாக சமூகத்தில் பரப்பப்ட்டுள்ள விடயம் முற்றிலும் தவறானது - பாதுகாப்பு செயலாளர்
மனித மூலதனம், வளங்கள் மற்றும் அறிவு என்பவற்றின் அதிகபட்ச பயன்பாடு கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மூலம் பயன்படுத்தப்படும்