பாதுகாப்பு செய்திகள்
இலங்கை, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு இராஜதந்திர உறவுகள் வலுவடைந்துள்ளது - பாதுகாப்பு செயலாளர்
இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கிடையில் கல்வி, கலாச்சார, பொருளாதார மற்றும் அரசியல் விவகாரங்களில் பரஸ்பர நம்பிக்கை கட்டியெழுப்பப்பட்டதன் காரணமாக இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு இராஜதந்திர உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு என்பன நாளுக்கு நாள் வலுவடைந்து செல்வதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
மீனவ சமூகம் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புக்களில் காற்றின் வேகமானது மணிக்கு 40 - 50 கிலோ மீட்டர் வரை அதிகரிக்க கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையின்போது 1,630 சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது
பொலிசாரினால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 1,630 சந்தேகநபர்கள் இன்று (21) கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு கடற்படை கட்டளையகத்தினால் மரமுந்திரிகை நடும் திட்டம்
இலங்கை கடற்படையினர் இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்துடன் இணைந்து காங்கேசன்துறை துறைமுக வளாகத்தில் மரமுந்திரிகை நடும் திட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். இதன்பிரகாரம் வடக்கு கடற்படை கட்டளையக்த்தினால் முதல் கட்டமாக 100 மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளன.
வலஸ்முள்ள பகுதியில் ஆயுதங்கள் உட்பட இராணுவ சீருடைகள் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் மீட்பு
வலஸ்முள்ள பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் ஒரு தொகை இராணுவ சீருடைகள், ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கி ரவைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இலங்கை கடற்படை வீரர்கள் அனைவரும் பூரண குணமடைவு
வெலிசர கடற்படை முகாமில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த கடற்படை வீரர்கள் மூவரும் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான அனைத்து கடற்படை வீரர்களும் குணமடைந்துள்ளதாகவும் இதற்கமைய கடற்படைக்குள் காணப்பட்ட வைரஸ் தொற்று முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இலங்கை கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.
கட்டுநாயக்க மற்றும் இரத்மலானை விமான நிலையங்களில் பயணப்பொதிகளை பரீட்சிக்க நவீன சோதனை கருவிகள்
பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையம் மற்றும் இரத்மலானை விமான நிலையம் ஆகியவற்றில் பயணப்பொதிகளை பரீட்சிக்கும் வழிமுறைகள், நவீன தொழிநுட்பத்திற்கமைய மேம்படுத்தப்படவுள்ளதாக இலங்கை சிவில் விமானப்போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.
பாதாள உலக குற்றச் செயல்களுக்கெதிரான பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்கின்றன; கடந்த 48 மணித்தியாலங்களில் நால்வர் கைது
கடந்த 48 மணித்தியாலங்களில் குற்றத்தடுப்பு பொலிஸார் மற்றும் போதைபொருள் ஒழிப்பு பிரிவினர் இணைந்து நாடு தழுவிய சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இதன்போது பாரியளவிளான குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்த நான்கு பிரதான சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
ஆயுத பயிற்சி நடவடிக்கைகளுக்காக ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான மத்திய நிலையத்தினால் 'ப்ளூ கன்' தயாரிப்பு
மற்றுமொரு வெற்றிகரமான ஆராய்ச்சித் திட்டத்தை நிறைவு செய்துள்ள பாதுகாப்பு அமைச்சின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான மத்திய நிலையம் அண்மையில் இலங்கை இராணுவத்தின் விசேட படையணிக்காக 'ப்ளூ கன்' உற்பத்தி முறைமையை அறிமுகப்படுத்தியுள்ளது.
மழையுடன் கூடிய வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு
நாட்டின் வளிமண்டலத்தில் நிலவும் தாழமுக்கம் காரணமாக மேற்கு, சபரகமுவ, மத்திய, தெற்கு
மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை அடுத்த 24 மணி நேரத்திற்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தடையின்றிய தொடர்புகளுக்கு வீடியோ தொழிநுட்ப மாநாட்டு முறை ஹுவாவியினால் அறிமுகம்
ஹுவாவி டெக்னோலஜிஸ் லங்கா தனியார் நிறுவனம் வீடியோ தொழிநுட்ப மாநாட்டு முறை ஒன்றினை மேற்கொள்வதற்கான உபகரணங்களை பாதுகாப்பு அமைச்சுக்கு அன்பளிப்பு செய்துள்ளது.
ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் கேகாலை ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையினை விடுத்துள்ளது.
‘சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் புலமைச் சொத்துக்கள் விசாரணை பிரிவு’ விரைவில் அமைக்கும் பொலிஸ்
குற்றச்செயல்களில் ஈடுபடுவோரினால் சட்டவிரோதமாக பெறப்பட்ட சொத்துக்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு ‘சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் புலமைச் சொத்துக்கள் விசாரணை பிரிவு’ எனும் பெயரரில் விஷேட பிரிவொன்று, கொழும்பு 1, சத்தம் வீதியில் அமைந்திருக்கும் சென்றல் பொயின்ட் எனும் இடத்தில் வெகு விரைவில் நிறுவப்படவுள்ளது.
போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிசாரினால் கைது
பாரிய போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 34 வயதான சந்தேகநபரை 1 கிராம் மற்றும் 170 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பேலியகொடை பொலிஸார் கைது செய்தனர்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 3 கடற்படை வீரர்களே வைத்தியசாலையில்
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெரும்பாலான கடற்படை வீரர்கள் சிகிச்சையின் பின் வெளியேறியுள்ளனர். இதற்கேற்ப வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த வீரர்களில் மூவர் மாத்திரமே தற்பொழுது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தேடுதல் நடவடிக்கையின்போது 1,563 சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது
மேல் மாகாணத்தில் நேற்றைய தினம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 1,563 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.