பாதுகாப்பு செய்திகள்
இலங்கை கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு
இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் சமூக நலன்புரி திட்டத்தின் ஒரு பகுதியாக திம்புலாகல கெகுலுவெல பிரதேசத்தில் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
எமது காலத்து போர் வீரர்........
இலங்கை இராணுவத்தின் 6வது சிங்க ரெஜிமென்ட் படைப்பிரிவில் சேவையாற்றிய ‘ஹஸலக காமினி’ என அறியப்படும் கோப்ரல் காமினி குலரத்ன, இருபத்தி ஒன்பது வருடங்களுக்கு முன்னர் தாய் நாட்டுக்காக தனதுயிரை தியாகம் செய்த பெருமைக்குரிய படைவீரராவார்.
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த ஜப்பான் நிதி உதவி
இலங்கை பொலிஸாரின் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை திறனை மேம்படுத்த ரூ. 340 மில்லியன் நிதி உதவி வழங்குவதற்கு ஜப்பானிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
ஓய்வுபெற்றுச்செல்லும் கடற்படை தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
சேவையிலிருந்து ஓய்வுபெற்றுச்செல்லும் கடற்படை தளபதி அட்மிரல் பியால் டீ சில்வா பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு ) கமல் குணரத்தனவை பாதுகாப்பு அமைச்சில் வைத்து இன்று (ஜூலை, 14) சந்தித்தார்.
வைரஸ் தொற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1981 ஆக அதிகரிப்பு : தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,646 ஆக உயர்வு
கொரோனா வைரஸ் தொற்று பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை 1,981 ஆக அதிகரித்துள்ளது.
பிரியாவிடை பெறும் கடற்படைத் தளபதி முன்மாதிரியான சேவைக்கான உதாரண புருஷர் - பாதுகாப்பு செயலாளர்
இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வலுவான தலைமைதத்துவத்தின் கீழ் நாட்டின் கடற்பிராந்தியத்தில் இடம்பெற்ற பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை முறியடிக்க முடிந்ததாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
2020 பொதுத்தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்
இவ்வருட பொதுத்தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (ஜூலை, 13) ஆரம்பிக்கப்பட்டு எதிர் வரும் 17ஆம் திகதிவரை இடம்பெற உள்ளது.
பாதாள உலக குழு உறுப்பினர்கள் பொலிஸாரால் கைது
அங்கொட பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபார நடவடிக்கைகளுடன் தொடர்புடைய இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீண்டும் தீவிரவாதத்திற்கு இடமில்லை – பாதுகாப்பு செயலாளர்
தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் பிரிவினைவாத கொள்கைகளை பிரச்சாரம் செய்து பயங்கரவாதத்தை மீள உருவாக்கமுயல்பவர்களுக்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
கொரோன வைரஸ் பாதிப்புக்குள்ளான மீனவர்கள் இலங்கைக்குள் நுழைவதை தடுக்க கடற்படை அவதானத்துடன்
இலங்கை கடற்படையினர் சுமார் 7.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான 52 கிலோ கேரளா கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர். வெற்றிலைக்கேணி உடுதுரை பகுதியில் இருந்து கிடைக்கபெற்ற தகவலுக்கமைய கைவிடப்பட்டு இருந்த டிங்கியிலிருந்தே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
இலங்கையர்களை வெளிநாடுகளில் இருந்து அழைத்துவருவது நிறுத்தப்பட்டுள்ளது
கொரோனா வரைஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை தாய்நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகளை ஜூலை 14ஆம் திகதியிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் (ஒய்வு) பேராசிரியர் ஜயந்த கொலம்பகே தெரிவித்துள்ளார்.
நடுநிலையான விசாரனைகளை முன்னெடுக்குமாறு அரச தகவல்கள் திணைக்கள பணிப்பாளர் கலுவெவ பொலிஸ் மா அதிபரிடம் வேண்டுகோள்
அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பதில் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளார். நீதிமன்றத்திற்கு வெளியே ஊடகவியலளர் ஒருவரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டு தொடர்பில் முழுமையானதும் நடுநிலையானதுமான ஒரு விசாரணையினை முன்னெடுக்குமாறே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இரு டீ -56 ரக துப்பாக்கியுடன் கான்ஸ்டபிள் ஒருவர் சீ ஐ டீ யினரால் கைது
குற்றப் புலனாய்வு துறை அதிகாரிகள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை இரண்டு டீ -56 ரக துப்பாக்கிகளுடன் கடந்த இரவு கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொரோனா வைரஸ் தொடர்பில் போலியான தகவல்களை பரப்புவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை
சமூக ஊடகங்களில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான பொய்யான மற்றும் உண்மைக்கு புறம்பான தகவல்கள் மற்றும் புள்ளிவிபரங்களை பரப்புவர்களுக்கு எதிராக பொலிஸார் கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.
தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த 100 பேர் வீடு திரும்பினர்
பலாலியில் இலங்கை விமானப்படையின் முகாமைத்துவத்தின் கீழ் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவுசெய்த 100 பேர் குணமடைந்து இன்று (ஜூலை 11) தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இங்கிலாந்தில் சிக்கித்தவித்த இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்
இங்கிலாந்தில் சிக்கித்தவித்த மேலும் 234 பேர் கொண்ட மற்றுமொரு குழுவினர் இலங்கை எயார்லைன்ஸ் விமானம் மூலம் இன்று (ஜூலை 11) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.