பாதுகாப்பு செய்திகள்
வருடாந்த பிரியாவிடை மற்றும் புலமைப்பரிசில் வழங்கும் வைபவம்
இடமாற்றம் பெற்றுச்செல்லும் மற்றும் பணியில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் பாதுகாப்பு அமைச்சில் சேவையாற்றிய உத்தியோகத்தர்கள் மற்றும் அவர்களது பிள்ளைகளுக்கு பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன இன்று (28) இடம்பெற்ற நிகழ்வில் பரிசில்களை வழங்கி வைத்தார்.
பொதுமக்களிடமிருந்து தகவல்களை பெற பொலிஸாரினால் அவசர தொலைபேசி இலக்கம், தொலைநகல் மற்றும் மின்னஞ்சல் முகவரி என்பன அறிமுகம்
பொதுமக்கள் பொலிசாருக்கு இலகுவாக தகவல்களை வழங்குவதற்காக துரித அழைப்பு தொலைபேசி இலக்கங்கள், மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் தொலைநகல் இலக்கம் என்பனவற்றை பொலிசார் அறிமுகப்படுத்தியுள்ளனர். இதற்கமைய "1997" மற்றும் "1917" ஆகிய இரண்டு துரித அழைப்பு தொலைபேசி இலக்கங்கள், இதனோடிணைந்த மின்னஞ்சல் முகவரிகள் இரண்டு மற்றும் ஒரு தொலைநகல் இலக்கம் என்பன அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
இலங்கை மற்றும் மாலை தீவு நாடுகளுக்கான ரஷ்ய தூதுவர் யூரி மாதரி பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்னவை இன்று (ஜுலை, 28) இன்று சந்திதித்தார்.
இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன். விகாஸ் சூட் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்னவை இன்று சந்தித்தார். ( ஜுலை 28 )
யாழில் ‘நல்லிணக்க மையம்’ கோலாகலமாக திறந்து வைப்பு
அண்மையில் (ஜூலை 25) யாழ் சித்தங்கேணிப்பகுதியில் ‘நல்லிணக்க மையம்’ ஒன்று கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் மோசடியாளர்களுக்கு உதவிய சிறைச்சாலை சார்ஜன் கைது
போதைப்பொருள் மோசடியாளர்களுக்கு உதவியமை தொடர்பில் கொழும்பு சிறைச்சாலையில் பணிபுரியும் சார்ஜன் ஒருவர் பொலிஸாரினால் நேற்று (ஜூலை 27) கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறார்களுக்கு பாதுகாப்பான சூழல் அவசியம் - பாதுகாப்புச் செயலாளர்
"அனைத்து விதமான துஷ்பிரயோகங்களில் இருந்தும் சிறுவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்கு தேவையான பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டியது அவசியமாகும்" என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
பண மோசடியில் ஈடுபட்ட ஐந்து சந்தேக நபர்கள் கைது
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் மோசடி செய்த சந்தேக நபர்கள் ஐவரை நேற்று (ஜூலை 26) கிருலப்பனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையின்போது 2,057 சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது
பொலிசாரினால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 2, 057 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கரையோரப்பகுதிகளில் வெள்ளம் ஏற்பட சாத்தியம் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு
புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்தை அண்டிய பகுதிகளில் உயர் அலைகள் காரணமாக கடல் அலைகள் கரையை அண்டிய நிலப்பகுதிகளுக்கு வரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
ருவன்வெல்ல பகுதியில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்
பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியா தகவலுக்கு அமைய ருவன்வெல்ல, இம்புலான பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விஷேட தேடுதல் நடவடிக்கைகளின்போது ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று (ஜூலை 25) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பீ சீ ஆர் பரிசோதனைகளுக்காக கொவிட் -19 நிதியத்திலிருந்து 36 மில்லியன் ரூபா
பீ சீ ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக சுகாதார, சமூக, பாதுகாப்பு நிதியத்தியிலிருந்து 35,605,812.00 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
தொல்பொருள் கட்டளைச் சட்டத்தை திருத்துவது குறித்து ஜனாதிபதி கவனம்
தொல்பொருள்களை பாதுகாத்து தேசிய மரபுரிமைகளை உறுதி செய்வதற்கு தொல்பொருள் கட்டளைச் சட்டத்தை திருத்துவது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
ஆழ்கடலில் தத்தளித்த கென்ய நாட்டு கப்பலுக்கு இலங்கை கடற்படை உதவி
மின்தடை காரணமாக ஆழ்கடலில் தத்தளித்து கொண்டிருந்த கென்ய நாட்டு கப்பல் ஒன்றை இலங்கை கடற்படையின் சிந்துறல கப்பல் இன்று (24) மீட்டுள்ளது. இக்கப்பல் இலங்கையின் காலி கடற்பரப்பிலிருந்து சுமார் 170 கடல் மைல் தொலைவில் (306 கிலோமீட்டர்) வைத்து மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையின் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.
2,094 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடுதிரும்பயுள்ளனர்
இறுதியாக 17 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியதை அடுத்து, குணமடைந்து வீடு திரும்பியோரின் மொத்த எண்ணிக்கை 2094 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயாளர் பிரிவினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம் தெரிவிக்கப்படுகிறது.