பாதுகாப்பு செய்திகள்
நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையின்போது 1,824சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது
பொலிசாரினால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 1,824 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவ சீருடை மற்றும் வெடிபொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது
இராணுவ சீருடைகள், ஐந்து கிராம் ஹெரோயின், இரண்டு துப்பாக்கி ரவைகள், நான்கு வெற்று மெகசின்கள், சட்ட விரோதமான இரண்டு கூர்மையான கத்திகள் மற்றும் முச்சக்கர வண்டியுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்றைய தினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
ராஜாங்கனையைச் சேர்ந்த 12 வயது சிறுவனுக்கு மட்டுமே வைரஸ் தொற்று உறுதி
ராஜாங்கனை பிரதேசத்தில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட 139 பேருக்கான பிசிஆர் பரிசோதனையில் 12 வயது சிறுவன் ஒருவனுக்கு மட்டுமே வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அணில் ஜாசிங்க தெரிவித்தார்.
அனுமதிக்கப்படாத வாகன தரிப்பிடங்களில் நிறுத்தப்படும் வாகனங்கள் தொடர்பில் பொலிஸார் தீவிர கண்காணிப்பு
அனுமதிக்கப்படாத தரிப்பிடங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதற்கு எதிராக கடுமையான சட்டத்தை இன்று (ஜூலை,17) முதல் அமுல்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறைச்சாலை அதிகாரிகளினால் 53 தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டது
வெலிக்கடை, கொழும்பு மற்றும் களுத்துறை சிறைச்சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சிறைச்சாலை அதிகாரிகளினால் 53 கையடக்க தொலைபேசிகள் அவற்றுக்கு பயன்படுத்தப்படும் பெட்டரிகள் மற்றும் சிம் காட்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.
கந்தக்காட்டிற்கு விஜயம் செய்த 114 பார்வையாளர்களுக்கு தொற்று ஏற்படவில்லையென உறுதி
கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்வையிடச் சென்ற குடும்ப உறுப்பினர்கள் 114 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போது அவர்களுக்கு தொற்று ஏற்பட வில்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையின்போது 1,642 சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது
பொலிசாரினால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 1,642 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பணயக்கைதிகள் தொடர்பான பேச்சுவார்த்தை அதிகாரிகளாக 9 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் நியமனம்
ஒன்பது சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பணயக்கைதிகள் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய கடற்படைத் தளபதி பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு
புதிதாக நியமிக்கப்பட்ட கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மற்றும் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவுக்குமிடையிலான சம்பிரதாயபூர்வமான சந்திப்பு, பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்றது.
தனிமைப்படுத்தப்பட்டோர்களுக்காக விஷேட வாக்கெடுப்பு நிலையங்கள் - தேர்தல் ஆணைக்குழு
தனிமைபடுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் அல்லது சுய தனிமைப்படுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளோர் தமது வாக்குகளை அளிக்கும் வகையில் நடமாடும் வாக்களிப்பு நிலையங்கள் அல்லது விஷேட வாக்களிப்பு நிலையங்கள் அமைப்பது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு ஆராய்ந்து வருகின்றது.
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் சவாலை வெற்றிகொள்வதாக ஜனாதிபதி உறுதியளிப்பு
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நாட்டில் உள்ள அனைத்து மக்களும் பாதுகாக்கப்படுவர் என உறுதியளித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,இதற்கு தேவையான அனைக்கு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பொறுப்பை இலங்கை இராணுவம் ஏற்பு
அடுத்த வருடம் முதல் சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பொறுப்பை இலங்கை இராணுவம் ஏற்றுள்ளது.
இந்திய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரியாவிடை சந்திப்பு
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் அஷோக் ராவோ பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று சந்தித்தார். தனது பதவிக்காலம் நிறைவடைந்து நாடு திரும்பவுள்ள பாதுகாப்பு ஆலோசகர் மரியாதை நிமித்தமாக குறித்த சந்திப்பை மேற்கொண்டார்.
24வது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கடமை ஏற்பு
இலங்கை கடற்படையின் 24வது கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மூன்று நட்சத்திர தரத்தைக் கொண்ட வைஸ் அட்மிரலாக தரம் உயர்த்தப்பட்ட அவர், இலங்கை கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் கொரோனா வைரஸ் தொடர்பாக பதிவிடும் தவறான தகவல்களை அரசு மறுக்கிறது
கொரோனா வைரஸ் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு போலியான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகவும் இது தொடர்பில் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுமாறு அரசாங்கம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.