--> -->

பாதுகாப்பு செய்திகள்

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஏனைய நாடுகளிடமிருந்து இராணுவ உதவி பெற வேண்டிய அவசியம் கிடையாது - பாதுகாப்புச் செயலாளர்

இலங்கையில் கொரோன வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மற்ற நாடுகளிடமிருந்து இராணுவ உதவி பெற எந்த ஒரு அவசியமும் கிடையாது என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல்(ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் விரைவில் அரசினால் சட்டத்தின் முன் கொண்டு வரப்படுவார்கள்- பாதுகாப்பு செயலாளர்

சுமார் 270 க்கும் அதிகமானோரின் உயிரிழப்புக்கும் 500க்கும் அதிகமானனோரின் படுகாயத்திற்கும் காரணமான உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலை,  திட்டமிட்டு, நிதியுதவியளித்து, ஆதரவளித்த அனைத்து குற்றவாளிகளையும் அரசாங்கம் வெளிக்கொண்டுவரும் என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு)கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வீடுகளில் இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு ஞாபகார்த்த தின நிகழ்வுகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான பொது நினைவு நாள் நிகழ்வுகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள கொழும்பு பேராயர் அதியுத்தம கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, அனைத்து நினைவு நாள் நிகழ்வுகளையும் பொதுமக்கள் பங்கேற்பின்றி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களுக்கு உதவும் வெளியுறவு அமைச்சு

உலர் உணவு விநியோகத்தை அதிகரிக்கவும், நாட்டுக்கு திரும்பி வரமுடியாத நிலையில் வெளிநாட்டில் வசிப்போரின் பிரச்சினைகள் தொடர்பாக முறையான செயற்பாடுகளை முன்னெடுக்கவும் திரைசேரியிலிருந்து கூடுதல் நிதி ஒதுக்கீட்டை வெளிவிவகார அமைச்சு கோரியுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் ரிஷாத்தின் சகோதரர் கைது

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டிருந்ததன் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவர் புத்தளத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய செனரத்ன தெரிவித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடல் மார்க்கமாக நுழையும் சட்டவிரோத குடியேற்றகாரர்களை கண்டறிய இலங்கை விமானப்படையினரார் வான்வழி கண்காணிப்பு

உலகளாவிய கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலைகளை சாதகமாக பயன்படுத்தி நாட்டுக்குள் பிரவேசிக்கும் சட்ட விரோத குடியேற்றக்காரர்களை கண்காணிக்கும் இலங்கை கடற்படையினரின் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் இலங்கை விமானப் படை, வான்வழி கண்காணிப்பினை ஆரம்பித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பரந்துபட்ட திட்டமிடல் காரணமாக இலங்கை கடற்படையினரால் போதைப்பொருள் கடத்தலை வெற்றிகரமாக முறியடிக்க முடிந்தது - கடற்படை தளபதி

நவீன தொழில்நுட்ப பயன்பாடு, சர்வதேச ஒத்துழைப்புகள் மற்றும் கடற்படை உளவுத்துறை செயற்பாடு உள்ளிட்ட ஒன்றிணைக்கப்பட்ட திட்டமிடல் நடவடிக்கைகளே, ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தலை வெற்றிகரமாக முறியடிக்க காரணம் என இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா தெரிவித்துள்ளார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸ் பரவல் இருந்து நாட்டை பாதுகாக்க இராணுவ வீரர்கள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் - இராணுவத் தளபதி

கொரோனா வைரஸ் பரவல் இருந்து நாட்டை பாதுகாக்க இராணுவத்தினர் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் எனவும் அவர்கள் முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க குடும்ப உறுப்பினர்களுடன் புத்தாண்டை கொண்டாடுமாறு ஜனாதிபதி வேண்டுகோள்

நாட்டினையும் நாட்டு மக்களினையும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்க அரசாங்கத்தின் வழிகாட்டுதலுக்கு அமைய செயற்படுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்துள்ள சிங்கள தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிர் இழந்த சடலங்களின் தகன கிரியைகள் தொடர்பாக புதிய விதிமுறைகள் வெளியீடு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த நபரின் சடலம் 800 முதல் 1,200° செல்சியஸ் வெப்பநிலையில் 45 நிமிடங்கள் முதல் ஒரு மணித்தியாலம் வரை முழுமையாக தகனம் செய்யப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் தாமரை கோபுரம் ஒளிர்விப்பு

கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் இன்று மாலை 6 45 மணியளவில் தாமரை கோபுரம் ஒளிர்விக்கப்படவுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடற்படையினரால் ரூ. 3270 மில்லியன் பெறுமதியான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படையினரால் ரூபா 3270 மில்லியன் பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கையின் தென்மேற்கு கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கை போது குறித்த போதைப் பொருட்கள் நேற்றய தினம் காலை வேளையில் கைப்பற்றப்பட்டன.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

யாழ்பானத்தில் சுமார் 150,000க்கும் அதிகமான மக்களுக்கு நிவாரணத்தை விநியோகிக்க படையினர் உதவி

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையிலும் நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக யாழ் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களுக்கான நிவாரண பொருட்களை விநியோகிப்பதற்கு யாழ் மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் அதிகாரிகளுக்கு யாழ் பாதுகாப்புப்படை தலைமையகத்தில் உள்ள படையினர்  உதவி அளித்தனர்.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட அகதிகள் இலங்கைக்குள் அத்துமீறி நுழைய இடமளிக்கப்படமாட்டாது - கடற்படை தளபதி

இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து கொரோனா அச்சம் காரணமாக இலங்கைக்குள் அகதிகளாக அத்துமீறி நுளைய முயற்சிப்பவர்களை தடுக்கும் வகையில் இலங்கையின் கடல் பிராந்தியங்கள் மற்றும் கடலோரப் பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் தமது துறைசார் அறிவைப் பகிர்ந்து கொள்ள இலங்கை புத்திஜீவிகள் முன்வருகை

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான பொறிமுறையைக் கண்டறியும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், புத்திஜீவிகள் மற்றும் பல்கலைக்கழக கல்வியாளர்கள் உள்ளடங்கிய நிபுணத்துவ குழு ஒன்று, துறைசார் அறிவு மற்றும் தொழில்நுட்ப உள்ளீடுகளைப் பகிர்ந்து கொள்ள முன்வந்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸ் நோயாளிகளைக் கையாள கடற்படையினரால் உருவாக்கப்பட்டுள்ள 'மெடி மேட்' ஸ்மார்ட் உபகரணம்

இலங்கை கடற்படையினர், டொக்டர் நெவில் பெனாண்டோ போதனா வைத்தியசாலைக்கு தொலைவிலிருந்து இயக்கக்கூடிய 'மெடி -மேட்' எனும் ஸ்மார்ட் உபகரணத்தை நேற்று (ஏப்ரல்,08)கையளித்தனர்.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

முல்லேரியா வைத்தியசாலை வார்டுகளில் இலங்கை விமானப்படையினரால் கண்காணிப்பு கேமரா தொகுதி நிறுவல்

முல்லேரியா தள வைத்தியசாலையில் பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்களை வழங்கும் ஒலிபெருக்கி சிஸ்டம் மற்றும் 4 வார்டுகளுக்கான வை-பை மூலம் இணைக்கப்பட்ட கண்காணிப்பு கெமரா தொகுதி என்பன இரத்மலானை விமானப்படை தள இலத்திரனியல் மற்றும் தொலைதொடர்பு பொறியியல் பிரிவின் தொழில்நுட்ப குழுவினால் நிறுவப்பட்டது.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வரையறுக்கப்பட்ட'பெயார் பெர்ஸ்ட்' காப்புறுதி நிறுவனத்தினால் 'கொரோனா வைரஸ் பாதுகாப்பு நிதியத்திற்கு' ரூ. 10 மில்லியன் நன்கொடை

பெயார்பக்ஸ் குளோபல் குழுமத்தின் இணை நிறுவனங்களில் ஒன்றான வரையறுக்கப்பட்ட'பெயார் பெர்ஸ்ட்' காப்புறுதி நிறுவனத்தினால் 'கொரோனா வைரஸ் ஒழிப்பு நிதியத்திற்கு' ரூ. 10 மில்லியன் நன்கொடையளிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் அரசாங்கத்தின் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் இந் நிதி வழங்கப்பட்டுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சமூக வலைத்தளத்தில் வதந்திகளை பரப்பிய நபர்கள் பொலிஸாரினால் கைது

கொரோனா வைரஸ் தொடர்பில் போலியான காணொளிகளை சமூக ஊடகங்கள் ஊடாக பதிவேற்றிக் கொண்டிருந்த கெலனியமுல்லவில் வசிக்கும் ஒருவர் நேற்றைய தினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இன்று அதிக எண்ணிக்கையிலான ஊரடங்கு சட்ட மீறல்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிப்பு

இன்று (08) அதிகாலை 6.00 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தினுள் அதிக எண்ணிக்கையிலான ஊரடங்கு சட்ட மீறல்கள் மூலம்  சுமார் 1,800 கைதுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கைவிடப்பட்ட வீஒஏ கட்டிடத்தை புதியதொரு தனிமைப்படுத்தும் வைத்தியசாலையாக இராணுவத்தினர் மாற்றியுள்ளனர்

40 கட்டில்களுடனான  படுக்கை வசதிகளைக்கொண்டதும்,  மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பபு கருதியும் தன்னியக்க பைலட் வாகனங்கள் மற்றும் ரோபோ தொழிநுட்பம் கொண்ட தனிமைப்படுத்தும் வைத்தியசாலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

 




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் நாயகமாக சட்ட வல்லுநர் ராஜா குணரத்ன நியமனம்

மனிதாபிமான சட்ட வல்லுநர் ராஜா குணரத்ன,  அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் நாயகமாக  நியமிக்கப்பட்டுள்ளார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பொலிஸ் நிலையங்களில் தேவையற்ற வரிசைகளை குறைப்பதற்காக ஊரடங்கு விதத்தில் புதிய சுற்றறிக்கை வெளியீடு

ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கான புதிய முறைமையொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப பொலிஸ் தலைமை அலுவலகம், மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம், பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி அலுவலகம் மற்றும் பொலிஸ் நிலையங்கள் ஆகியவற்றின் ஊடாக 4 முறைகளைக் கொண்ட புதிய நடைமுறையின் கீழ் ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.