செய்திகள்
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட பீடம் சர்வதேச தரவரிசைப்படுத்தலில் உயர்வு
ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (KDU) சட்ட பீடம், 2022 ஆம் ஆண்டின் 'நிக்கா சட்டக்கல்லூரி தரவரிசைப்படுத்தல்' ல் இலங்கையில் 2 வது இடத்திலும், ஆசியாவில் 25 வது இடத்திலும், உலகில் 83 வது இடத்திலும் இடம் பெற்றுள்ளது.
நியூசிலாந்து உயர் உயர்ஸ்தானிகர் தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானியை சந்தித்தார்
இலங்கைக்கான நியூசிலாந்தின் உயர்ஸ்தானிகர் மைக்கேல் அப்பிள்டன் தலைமையிலான குழுவொன்று இன்று (செப் 21) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்புத் தலைமையக வளாகத்தில் தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்கவைச் சந்தித்தது.
Tamil
Tamil
Tamil
Tamil
Tamil
Tamil
Tamil
திருகோணமலையில் ‘’பவளப்பாறைகளை அடையாளம் காணுதல் மற்றும் பாறைகளை மறுசீரமைத்தல்’’ தொடர்பான செயலமர்வு
கடற்படை நீர்மூழ்கி வீரர்களின் நோக்கத்தை விரிவுபடுத்தும் நோக்கில் ‘’பவளப்பாறைகளை அடையாளம் காணுதல் மற்றும் பாறைகளை மறுசீரமைத்தல்’’ தொடர்பான செயலமர்வு அண்மையில் திருகோணமலை கடற்படை கப்பல்துறைமுகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
Tamil
புதிய அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளரைச் சந்தித்தார்
• இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தல்.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சுதந்திரமான கடற்பயணத்தை உறுதிப்படுத்துவதன் மூலம் இலங்கையை கடல்சார் வர்த்தகத்தின் மையமாக மாற்றுவோம் - ஜனாதிபதி
இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிசெய்து, உலகிற்குத் திறந்துவிடுவதன் மூலம் பலம்வாய்ந்த ஆசியாவை உருவாக்குவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.
அங்கவீனமுற்ற போர் வீரர்களை புதிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பார்வையிட்டார்
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கொளரவ பிரமித பண்டார தென்னகோன் அவர்கள்; இன்று (செப்.14) கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவிலுள்ள தேசிய போர் வீரர் நினைவுதூபிக்கு மலரஞ்சலி செலுத்தி தேசத்தின் போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.
ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு படைவீரர்கள் இரத்த தானம் அளிப்பு
மத்திய பாதுகாப்புப் படை தலைமையகத்தின் கீழ் உள்ள படைவீரர்களினால் அண்மையில் இரத்த தானம் வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. வைத்தியசாலை அதிகாரிகளினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, ஹம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கே இவ்வாறு இரத்ததானம் அளிக்கப்பட்டது.
விமானப்படைப் படையின் பிரதம அதிகாரி நியமனம்
இலங்கை விமானப்படையின் பிரதம அதிகாரியாக எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபகஷ கௌரவ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை விமானப்படை ஆயுர்வேத மருத்துவ நிலையம் திறந்து வைப்பு
Tamil
இராணுவத்தினரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண இளைஞர்களுக்கான உதைபந்தாட்ட போட்டி
இராணுவத்தினரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் இளைஞர் அணி மற்றும் கட்டைக்காடு இளைஞர் அணிகளுக்கிடையில் சிநேகபூர்வ உதைபந்தாட்டப் போட்டி ஒன்று அண்மையின் கட்டைக்காடு உதைபந்தாட்ட மைதானத்தில் நடைபெற்றது.
புல்மோட்டையில் தேவையுடையோருக்கு மூக்குக்கண்ணாடி கடற்படையின் ஆதரவுடன் வழங்கிவைப்பு
இலங்கை கடற்படையினரால் அண்மையில் புல்மோட்டை ஆதார வைத்தியசாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சின் போது புல்மோட்டையில் வசிக்கும் 125க்கும் மேற்பட்ட பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்பட்டன.
புதிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கடமைகளை பொறுப்பேற்பு
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன் கொழும்பில் உள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இன்று (செப். 12) இடம்பெற்ற எளிமையான நிகழ்வில் சமய ஆசிர்வாதங்களுக்கு மத்தியில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
Tamil
கண்ணிவெடி அகற்றல் பயிட்சி பெற்ற முதல் இராணுவ பெண்கள் குழுவுக்கு இராணுவ தளபதியினால் சான்றிதழ் வழங்கி வைப்பு
கண்ணிவெடி அகற்றல் பயிட்சி பெற்ற 54 பேர் அடங்கிய முதலாவது இராணுவ பெண்கள் குழுவுக்கு வியாழக்கிழமை (செப். 08) இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் இராணுவ தளபதியினால் திறமைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கடுவெல பிரதேசத்தில் இராணுவப் படையினர் வெல்ல நிவாரண நடவடிக்கைகளில்
களனி கங்கை பெருக்கெடுத்து கடுவெல, போமிரிய பிரதேசத்தில் ஏற்படவிருந்த பாரிய வெள்ள அனர்த்தம் இலங்கை இராணுவ துருப்பினரின் துரித நடவடிக்யினால் தடுக்கப்பட்டது. ஆற்றின் இருகரைகளலும் நூற்றுக்கணக்கான மணல் மூட்டைகளை அடுக்கி தாழ்வு பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுத்தனர்.
மன்னார் களப்பு இராணுவப் படையினரின் பங்களிப்புடன் சுத்தம் செய்யப்பட்டது
இலங்கை இராணுவத்தின் சமூக மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அண்மையில் சிரமதான நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் போது தள்ளடி முதல் மன்னார் பாலம் வரையான களப்பு பிரதேசம் இராணுவ துருப்பினரால் சுத்தம் செய்யப்பட்டது.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சட்ட சஞ்சிகைக்கு சர்வதேச அங்கீகாரம்
ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (KDU) ‘சட்ட சஞ்சிகை’ யின் 02 ஆம் தொகுதி இம்மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்று அப்பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.