செய்திகள்
டாக்காவில் நடைபெற்ற நான்காவது தெற்காசிய செபக் டக்ரா போட்டியில்
இராணுவ வீரர்கள் 5 வெண்கலப் பதக்கங்களை வென்றனர்
அண்மையில் பங்களாதேஷின் டாக்கா நகரில் நடைபெற்ற 4வது தெற்காசிய செபக் டக்ரா போட்டியில் இலங்கை தேசிய செபக் டக்ரா குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை இராணுவ வீரர்கள் கலந்து கொண்டு 5 வெண்கலப் பதக்கங்களை வெற்றி பெற்றனர்.
அனர்த்த முகாமைத்துவ பிரிவின் இணையதளம் ஆரம்பித்து வைக்கப்பட்டது
பாதுகாப்பு அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கான www.disastermin.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன் அவர்களினால் கொழும்பிலுள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இன்று (ஜன. 02) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
Tamil
இராணுவத்தினர் கும்புறுப்பிட்டி கிராமத்தில் புதிய நீர்
சுத்திகரிப்பு இயந்திரம் அமைத்தனர்
கிழக்கு (SFHQ-E) பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள இலங்கை இராணுவத்தின் 17 ஆவது இலங்கை தேசிய காவலர் (SLNG) படையினர்களினால் அண்மையில் கும்புறுப்பிட்டியில் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டது.
புதிய கடற்படைத் தளபதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
புதிதாக நியமிக்கப்பட்ட கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரெமித பண்டார தென்னகோனை இன்று (டிசம்பர் 30) சந்தித்தார்.
Tamil
Tamil
Tamil
Tamil
இராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகைகள்
இராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு கல்விப் புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றது.
Tamil
Tamil
2004 சுனாமியினால் உயிரிழந்தவர்கள் நினைவு கூறப்பட்டனர்
2004 ஆம் ஆண்டு 35,000 க்கும் அதிகமான மக்களின் உயிரைக் காவுக்கொண்ட அதிர்ச்சியூட்டும் சுனாமி பேரலையின் 18 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், 'தேசிய பாதுகாப்பு நாள்' நிகழ்வு இன்று (டிசம்பர் 26) காலை 8.45 மணியளவில் காலி தெல்வத்தையிலுள்ள பெரலிய சுனாமி நினைவிடத்தில் நடைபெற்றது.
நத்தார் தினச் செய்தி
இருளை நீக்கி மனிதர்களிடத்தே சுபீட்சத்தை ஏற்படுத்தும் உண்மையான ஒளியின் வருகையையே நத்தார் பண்டிகைக் குறிக்கின்றது.
பாதுகாப்பு செயலாளர் தேசிய மாணவர் படையணி தலைமையகத்திற்கு விஜயம்
பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன இன்று (டிசம்பர் 23) பாமன்கடயில் உள்ள தேசிய மாணவர் படையணி தலைமையகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டார்.
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக ஜெனரல் கோட்டேகொட நியமிக்கப்பட்டுள்ளார்
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக ஓய்வுபெற்ற ஜெனரல் எஸ்.எச்.எஸ். கோட்டேகொடவை கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நியமித்துள்ளார்.
ஐ.நா.வின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் தலைமையிலான
பிரதிநிதிகள் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு
ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்திய பணியகத்தின் பணிப்பாளர் திரு. இந்திரிக்க ரத்வத்தை தலைமையிலான பிரதிநிதிகள் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களை சந்தித்தனர்.
Tamil
தேசிய மாணவர் படையணிக்கு சீனா 5 மில்லியன் ரூபா நன்கொடை
இலங்கைக்கான சீன தூதரகம் தேசிய மாணவர் படையணியின் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக 5 மில்லியன் ரூபாவை நன்கொடையாக பாதுகாப்பு அமைச்சிற்கு வழங்கியுள்ளது.
கண்டியில் ஏற்பட்ட தீயை இராணுவத்தினர் அணைத்தனர்
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 11வது படைப்பிரிவின் 111வது பிரிகேட் படையினரால் அண்மையில் கண்டி ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் உள்ள மூன்று மாடி வீடொன்றில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டது.
இரங்கல் செய்தி
மோசமான வானிலை காரணமாக எச்.ரி.எம்.எஸ் சுகோதாய் எனும் கப்பல் மூழ்கியதில் ஏற்பட்ட அனர்த்தம் குறித்து இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளதுடன் காணாமல் போனவர்களின் குடும்பத்தாருக்கும் தாய்லாந்து கடற்படைக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது.
புதிய கடற்படைத் தளபதி பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு
புதிதாக நியமிக்கப்பட்ட கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
கொமாண்டோ படைப்பிரிவின் புதிய தலைமையக கட்டிடம்
பாதுகாப்பு செயலாளரால் திறந்து வைக்கப்பட்டது
இலங்கை இராணுவ கொமாண்டோ படைப்பிரிவின் புதிய தலைமையக கட்டிடம் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவினால் இன்று (டிசம்பர் 19) கணேமுல்லையில் உள்ள கொமாண்டோ படைப்பிரிவின் தலைமையகத்தில் திறந்து வைக்கப்பட்டது.