--> -->
Tamil
நாட்டின் தென்மேற்கு பகுதியில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை தொடரும் சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படையின் நீரியல் ஆய்வு சேவையகத்தினால் இயக்கப்பட்ட தேசிய நீர்வாழ் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்குமான முகவர் நிலையத்தின் ஆய்வுக் கப்பல் மூலம் அண்மையில் தீ விபத்துக்குள்ளான கப்பலின் கடல் பகுதியில் இருந்து நீர் மற்றும் வண்டல் மாதிரிகளை சேகரித்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் இன்று (ஜூன் 3) ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோருடன் இணைந்து இராணுவமும் நாட்டின் தென் பகுதியின் நியமிக்கப்பட்ட பகுதிகளில் அரசின் தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கு அமைவாக நேற்று தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
தீ காரணமாக சேதமடைந்த கப்பலிலிருந்து வெளியாகி கடற்கரையோரங்களில் தேங்கியிருந்த சுமார் 5,000 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கழிவு பொருட்கள் இலங்கை கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் சேகரிக்கப்பட்டு அப்புறப் படுத்தப் பட்டுள்ளது.
கொவிட் - 19 பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள பயண தடையை மீறி செயல்படும் நபர்களை கண்டறிய பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸாருக்கு உதவும் வகையில் இலங்கை இராணுவத்தின் ரைடர்ஸ் அணியில் உள்ள இராணுவ வீர, வீராங்கனைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
படையினர் தீ அனர்த்தத்திற்குள்ளான கப்பலில் இருந்து கரை ஒதுங்கியிருக்கும் கழிவுப்பொருட்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதுடன் கடலோர பாதுகாப்புக்கான ஏற்பாட்டை மேற்கொண்டது.
இலங்கை கடற்படை மற்றும் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை என்பன தீ விபத்தில் சிக்கிய கப்பலில் இருந்து கரை ஒதுங்கியிருக்கும் கழிவுப்பொருட்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதுடன் இலங்கை கடலோர பாதுகாப்பு படையுடன் இணைந்து பாதுகாப்பு ஏற்பாட்டை மேற்கொண்டது.
சேதமடைந்துள்ள எம்வி எக்ஸ்- பிரஸ் போர்ள் கப்பலினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பினை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு படைகள், கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் பிற பொறுப்பான அரச நிறுவனங்களுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவ அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கை விமானப்படையின் பெல் 212 ஹெலிகாப்டர்கள் 425 கிலோ தீயணைப்புகாக பயன்படுத்தப்படும் உலர் இரசாயனக் கலவைகளை இன்று காலை 'எக்ஸ்-பிரஸ் பெர்ல்' கப்பலில் மீது தூவியதாக விமானப்படை பேச்சாளர் குரூப் கேப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்தார்.
புத்த பெருமானின் பிறப்பு, ஞானம்பெறுதல், பரிநிர்வாணமடைதல் ஆகிய மூன்று உன்னதமான நிகழ்வுகளை நினைவுகூரும் வெசக் நோன்மதி தினம் பௌத்தர்களான எமது அதி உன்னத சமய பண்டிகையாகும். உலகெங்கிலும் வாழும் பௌத்த மக்கள் இந்த புனித நாளில், புத்த பெருமான் மீதான பக்தியுடனும் பற்றுறுதியுடனும் புண்ணிய கிரியைகளில் ஈடுபடுகின்றனர்.
பயணக் கட்டுப்பாடுகளின் போது செயல்பட்டு வரும் அத்தியாவசிய சேவைகள் குறித்து பொதுமக்கள் தகவல்களை அறிந்து கொள்ள '1965' என்ற விஷேட ஹொட்லைன் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஜூன் மாதம் 7ம் திகதி வரை பயணக் கட்டுப்பாட்டை அமுல்படுத்தும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அனர்த்தங்கள் ஏற்படுமாயின் அது தொடர்பில் விரைவாக செயற்பட விமானப்படையின் அனர்த்த மீட்பு குழு மற்றும் விமானங்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன பணிப்புரை விடுத்துள்ளார்.
தென் மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நான்கு வெள்ள நிவாரண குழுக்களை கடற்படை இன்று (மே 23) அனுப்பியுள்ளது.