செய்திகள்
ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஜப்பானின் ஓபர்லின் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து
ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் ஜப்பான் டோக்கியோவிளுள்ள J. F. ஓபர்லின் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இடையே கல்வி ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று நேற்று (ஆகஸ்ட் 30) கையெழுத்திடப்பட்டது.
Tamil
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்த்தினால் விடுக்கப்பட்டுள்ள நிலை 1 நிலச்சரிவு எச்சரிக்கை
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) களுத்துறை, மாத்தளை, கண்டி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு முதல் நிலை (மஞ்சள்) மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது, இது இன்று (ஆகஸ்ட் 31) இரவு 0830 மணி வரை செல்லுபடியாகும்.
நன்கொடையாளர்களின் ஆதரவுடன் இராணுவத்தால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு யாழ்ப்பாண முன்னாள் போராளிகளுக்கு அன்பளிப்பு
இலங்கை இராணுவத்தினரால், திரு. விஷ் நடராஜா அவர்களின் அனுசரணையுடன் யாழ்ப்பாணம் புலோலியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடொன்று முன்னாள் போராளி குடும்பம் ஒன்றிற்கு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் கலந்துக்கொண்ட நிகழ்வொன்றின் போது நேற்று (ஆகஸ்ட் 27) கையளிக்கப்பட்டது.
விமானப்படை கலர்ஸ் நைட் நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிப்பு
எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரனவின் அழைப்பின் பேரில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன நேற்று (ஆகஸ்ட் 27) ரத்மலானை, அத்திடிய, ஈகிள்ஸ் லகூன் பேங்க்வெட் மண்டபத்தில் இடம்பெற்ற இலங்கை விமானப்படை கலர்ஸ் நைட் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
விமானப்படை மற்றும் கடற்படையினர் தீ அணைப்பு
இலங்கை விமானப்படை (SLAF) மற்றும் இலங்கை கடற்படை (SLN) கெரவலப்பிட்டியவில் உள்ள முத்துராஜவெல சதுப்பு நிலம் மற்றும் வத்தளை, புபுதுகம ஆகிய இடங்களில் ஏட்பட்ட தீயை அணைப்பதற்கு உதவி வழங்கினர்.
இலங்கை விமானப்படை கட்டுநாயக்க தளத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை ஆரம்பிக்கிறது
இலங்கை விமானப்படை கட்டுநாயக்கா தளத்தில் 5kW சூரிய சக்தி அமைப்பை நிறுவி அதன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தின் முதல் கட்டத்தை உத்தியோகபூர்வமாக அண்மையில் ஆரம்பித்து வைத்தது.
Tamil
சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு பாதுகாப்பு அமைச்சினால் ஏற்பாடு
பாதுகாப்பு அமைச்சினது ஊழியர்களின் இணைய பாதுகாப்பு விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில்தொழில்நுட்பப் பிரிவின் மேலதிக செயலாளர் பொறியியலாளர் திருமதி செனவிரத்னவினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (ஆகஸ்ட் 24) நடைபெற்றது.
Tamil
Tamil
Tamil
கழிவு நீர் அடைப்பை அகற்ற இராணுவம் உதவி
இலங்கை இராணுவம் (SLA) நகர சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் ஏனைய ஊழியர்களுடன் இணைந்து அண்மையில் நாவலப்பிட்டி நகரில் கழிவுநீர் வடிகால் அமைப்பில் ஏற்பட்ட அடைப்பை சீர் செய்ய உதவியது.
கிளிநொச்சி மாணவர்கள் மத்தியில் பூப்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும் இராணுவம்
இலங்கை இராணுவம் (SLA) கிளிநொச்சியில் உள்ள பாடசாலை இளைஞர்களின் பூப்பந்து திறனை மேம்படுத்தும் வகையில் அண்மையில் வட மாகாண விளையாட்டு வளாகத்தில் உள்ள உள்ளக விளையாட்டரங்கில் பூப்பந்து போட்டியை ஏற்பாடு செய்தது.
Tamil
பாதுகாப்பு உயர் அதிகாரிகள் ஜனாதிபதியை சந்தித்தனர்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் பாதுகாப்புப் பிரிவின் பிரதானிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (19) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
Tamil
கடலில் தத்தளித்த மீனவர்கள் மீட்பு
தென்பகுதி கடலில் மீன்பிடி நடவைக்கைகளுக்குச் சென்ற மீன்பிடி இழுவை படகொன்றிலிருந்த ஆறு (06) மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
இலங்கையிலுள்ள 'சேவ் தி சைல்ட்' பிரதிநிதிகள் தேசிய ஆட்கடத்தல் தடுப்பு பணிக்குழுவுடன் (NAHTTF) சந்திப்பு
ஆட்கடத்தளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அதிக தாக்கத்தை உருவாக்குவதற்கும் நோக்கத்துடன் அரசு மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் திறனை வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக 'சேவ் தி சைல்ட்' அமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்புடன் தேசிய ஆட்கடத்தல் தடுப்பு பணிக்குழுவின் (NAHTTF) கூட்டம் ஒன்று நேற்று மாலை (ஆகஸ்ட் 17) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கணனி கற்கைகள் பீடத்தின் புதிய சஞ்சிகை வெளியீடு
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கணனி கற்கைகள் பீடம் அதன் கணனியறிவு தொடர்பான சர்வதேச சஞ்சிகையின் (IJRC) தொகுதி 01ன், இதழ் 02 ஐ சமீபத்தில் வெளியிட்டது.
Tamil
பயங்கரவாதத்திற்கு நிதியுதவியளித்தல் தொடர்பில் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட நபர்கள் மற்றும் அமைப்புகள் தொடர்பில்
ஐக்கிய நாடுகள் சபையின் 2012 ஆம் ஆண்டு விதிமுறைகள் எண். 01 இன் பிரகாரம் பயங்கரவாதத்திற்கு நிதியுதவியளித்தல் தொடர்பில் 577 நபர்கள் மற்றும் 18 அமைப்புகள் 2021 ஆம் ஆண்டில் கருப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
புதிய பணிப்பாளர் நாயகம் - திட்டமிடல் நியமனம்
பாதுகாப்பு அமைச்சின் புதிய திட்டமிடல் பணிப்பாளர் நாயகமாக திரு. அனுர ரணசிங்க இன்று (ஆகஸ்ட் 15) நியமிக்கப்பட்டுள்ளார்.
பாக்கிஸ்தான் கடற்படை கப்பல் கொழும்பு வருகை
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்திற்கு இன்று (ஆகஸ்ட் 12) வருகை தந்த பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் தைமூர், இலங்கை கடற்படையினால் கடற்படை சம்பிரதாய முறைப்படி வரவேற்கப்பட்டது.
நல்லதண்ணி – மஸ்கெலியா வீதியை இராணுவத்தினர் சுத்தம் செய்தனர்
அண்மையில் பெய்த அடை மழையை அடுத்து நல்லதண்ணி - மஸ்கெலியா பிரதான வீதியில் பொது மக்கள் மற்றும் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மண் மேட்டை இலங்கை இராணுவப் படையினர் அகற்றி போக்குவரத்தை சீர்செய்ய நடவடிக்கை எடுத்தனர்.