செய்திகள்
மற்றொரு கஞ்சா கடத்தல் முயற்சி இலங்கை கடற்படையினால் முறியடிப்பு
யாழ்ப்பாணம், காரைநகர் பழைய கசுரினா கடற்கரைக்கு அப்பால் கடற்பகுதியில் நேற்று (ஜூலை 19) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது இரண்டு சந்தேக நபர்களுடன் சுமார் 172 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சாவை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
வெள்ளவாய பிரதேசத்தில் ஏட்பட்ட காட்டுத்தீயை அணைக்க இராணுவம் உதவி
அண்மையில் வெல்லவாய, மஹகொட யாய தேவகிரி மலைத்தொடரில் ஏட்பட்ட காட்டுத்தீயை அணைக்க அங்குள்ள இராணுவத்தினர் உதவினர்.
வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கஞ்சா மீட்பு
கச்சத்தீவு கடற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த சுமார் 30 கிலோ கஞ்சாவை இலங்கை கடற்படையினர் நேற்று (ஜூலை 18) விசேட நடவடிக்கையின் போது கைப்பற்றினர்.
வத்தலையில் ஏட்பட்ட தீயை அணைக்க கடற்படை உதவி
வத்தளை, ஹுனுப்பிட்டியில் பழைய உலோகங்கள் சேகரிக்கும் களஞ்சியமொன்றில் நேற்று மாலை (ஜூலை 16) ஏற்பட்ட தீயை இலங்கை கடற்படை தீயணைப்பு குழுவினர் அணைத்துள்ளனர்.
காயமடைந்த இராணுவத்தினரைப் பார்வையிட பதில் ஜனாதிபதி விக்கிரமசிங்க இராணுவ வைத்தியசாலைக்கு விஜயம்
கொழும்பு, நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலைக்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (ஜூலை, 15) விஜயம் செய்தார்.
பாராளுமன்ற வளாகத்திற்கு அருகில் காயமடைந்த இராணுவ வீரர்களை
பாதுகாப்பு செயலாளர் நேரில் சென்று நலம் விசாரிப்பு
பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன இன்று (ஜூலை 15) காலை கொழும்பு இராணுவ வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார். இதன்போது அவர் புதன்கிழமையன்று பாராளுமன்ற வளாகத்திற்கு அருகாமையில் கடமையாற்றும் போது ஆர்ப்பாட்டக்காரர்களின் மிலேச்சத்தனமான தாக்குதலினால் பலத்த காயங்களுக்குள்ளான படை வீரர்களை சந்தித்து அவர்களிடம் நலம் விசாரித்தார்.
போதைப்பொருளுடன் ஒருவரை கடலோர பாதுகாப்பு படையினர் கைது
பேருவளை கரையோர பாதுகாப்பு நிலையத்தின் படையினரும் மற்றும் பொலிசாரும் இணைந்து கடந்த 12 ஆம் திகதி (ஜூலை) பேருவளை மீன்பிடித்துறைமுகத்தில் வைத்து ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
வடினாகலை பிரதேசத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்க இராணுவத்தினர் உதவி
அண்மையில் வடினாகலை மலைத் தொடரின் ஒரு பகுதியில் வேகமாகப் பரவிய காட்டுத்தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அங்கு விரைந்த இராணுவ படையினர் உடனடி நடவடிக்கை எடுத்ததாக இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.
தியத்தலாவை பயிற்சிக் கல்லூரியில் பயிற்சியை முடித்து வெளியேறும் விமானப்படை பயிலுனர்கள்
தியத்தலாவை விமானப்படை பயிற்சிக் கல்லூரியில் பயிற்சியை முடித்து வெளியேறும் மரியாதை அணிவகுப்பு அண்மையில் விமானப்படை பிரதிப் பிரதம அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் எம்டி ரத்நாயக்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
Tamil
ஜப்பானிய பாதுகாப்பு ஆலோசகரின் சேவையை பாதுகாப்பு செயலாளர் பாராட்டினார்
இலங்கையிலுள்ள ஜப்பானிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் ககு ஃபுகௌரா, இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை இன்று (ஜூலை 07) பாதுகாப்பு அமைச்சில் வைத்து பிரியாவிடை நிமிர்த்தம் சந்தித்தார்.
இராணுவத்தினர் இரத்த தானம் செய்தனர்
மத்திய இரத்த வங்கியின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கை இராணுவ (SLA) துருப்புகள் அண்மையில் கொழும்பு விசாக்கா வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான முகாமில் இரத்த தானம் செய்தனர்.
கஞ்சா போதைப்பொருளை கடற்படையினர் கைப்பற்றினர்
இலங்கை கடற்படையினர் இன்று (ஜூலை 6) நுரைச்சோலை ல் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது ஒரு தொகை கஞ்சா போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர்.
கடற்படையினர் வடக்கு மாகாணத்தில் நீர் விளையாட்டுகளை ஊக்குவிப்பு
இலங்கை கடற்படை (SLN) அண்மையில் (ஜூலை 04) காரைநகர் கால்வாயில் ‘டிராகன் படகு சம்பியன்ஷிப்’போட்டி நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது.
உச்சக்கட்ட பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன
பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என புலனாய்வுத் தகவல் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளருக்கு பொலிஸ் மா அதிபர் அனுப்பிய கடிதம் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
உணவு பாதுகாப்பு திட்டத்திற்கு உதவி
யாழ்ப்பாணக் குடாநாட்டில் பல்வேறு வகையான வாழை, மரக்கறி மற்றும் நெற் பயிர்ச் செய்கை செய்வதன் மூலம் இலங்கை இராணுவத்தின் (SLA) வடக்கைத் தளமாகக் கொண்ட துருப்புக்கள் உணவுப் பாதுகாப்பு திட்டத்திற்கு தமது பங்களிப்பை செய்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் கோவிட்-19 தடுப்பூசி வழங்களுக்கு இலங்கை கடற்படை உதவி
திருகோணமலை பிரதேச பாடசாலை மாணவர்களுக்காக திட்டமிடப்பட்ட இரண்டு நாள் கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கு இலங்கை கடற்படை உதவியளித்தது.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மருந்து நிறுவனங்களுக்கு உயிர் சமநிலை ஆய்வுகளை வழங்குகிறது
ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் (KDU) மருந்து நிறுவனங்களுக்கு உயிர் சமநிலை (BE) ஆய்வு சேவைகளை வழங்குகிறது.
இலங்கை இராணுவத்தினரால் வடக்கு மாணவர்களுக்கு பூப்பந்தாட்ட பயிற்சி
கிளிநொச்சியில் உள்ள இலங்கை இராணுவ துருப்புக்கள் அண்மையில் (ஜூன் 28) கிளிநொச்சி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பூப்பந்து பயிற்சி பட்டறையை ஒன்றை நடாத்தினர்.
Tamil
யாழ் மாணவிகளுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வாய்ப்பு
இலங்கை இராணுவம் (SLA) யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள குறைந்த வருமானமுடைய பாடசாலை மாணவர்களுக்கு 22 துவிச்சக்கர வண்டிகளையும், 50 வரிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளையும் வழங்கிவைக்கும் நிகழ்வொன்றை அண்மையில் சாவகச்சேரி கலாச்சார மண்டபத்தில் நடத்தியது. கனடாவில் வதியும் திரு.ரஜிகரன் சண்முகரத்தினம் அவர்கள் இதற்கான அனுசரணையை வழங்கியுள்ளார்.
மிருசுவிலில் குழந்தைக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் இராணுவத்தினரால் விநியோகம்
நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் ஊக்குவிக்கும் நோக்குடன் அண்மையில் மிருசுவிலில் ஐம்பது கர்ப்பிணி தாய்மார்களுக்கு குழந்தைகளுக்கான அத்தியாவசியப் பொருட்களை இராணுவத்தினர் அன்பளிப்பாக வழங்கினர்.
நிராவிய சோளம் பயிரிடும் திட்டத்தின் முதல் கட்டம் இராணுவத்தினாரால் துவக்கி வைப்பு
இலங்கை இராணுவம் (SLA) அரசாங்கத்தின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்திற்கு அமைவாக முதல் கட்டத்தில் 100 ஏக்கர் நிலப்பரப்பில் சோளம் பயிரிடும் திட்டம் தம்புத்தேகம நிராவிய இராணுவப் பண்ணையில் நேற்று (ஜூன் 27) ஆரம்பிக்கப்பட்டது.
இலங்கை விமானப்படை யுத்த வீரர்கள் நினைவு கூறல் நிகழ்ச்சி
இலங்கை விமானப்படை தனது யுத்த வீரர்களை நினைவு கூறி “போர்வீரர்கள் நினைவேந்தல் விழா 2022” நிகழ்வை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரனவின் அனுசரணையின் கீழ் ஏக்கலையிலுள்ள அதன் பயிற்சி பாசறையில் விமானப்படை போர் வீரர் நினைவகத்தில் அண்மையில் நடாத்தியது.