--> -->

பாதுகாப்பு செய்திகள்


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவ போர் வீரர்களுக்கு ஸ்கூபா-சுழியோடல் பயிற்சி

இலங்கை இராணுவத்தின் மாற்றுத்திறனாளிகளான போர்வீரர்கள் அண்மையில் ஹிக்கடு சர்வதேச சுழியோடல் பயிற்சி பாடசாலையில் விஷேட ஸ்கூபா-சுழியோடல் பயிற்சியை பெற்றுக் கொண்டனர்.






செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தென் சூடான் அமைதி காக்கும் படையினரால் மருத்துவ பயிற்சி

இலங்கை இராணுவ படைகுழுவினரால் நிர்வகிக்கப்படும் தென் சூடானை தளமாகக் கொண்ட நிலை II வைத்தியசாலையில் பணி புரியும் படை குழுவினரால் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளே பராமரித்தல் தொடர்பான மருத்துவ பயிற்சி அண்மையில் நடாத்தப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சட்டவிரோத உலர்ந்த மஞ்சள் கடத்தல் நடவடிக்கை கடற்படையினரால் முறியடிப்பு

வடமேற்கு மற்றும் மேற்கு கடற்பரப்பினூடாக இம்மாதம் 17ம் திகதி முதல் 20ம் திகதி வரை நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 1263 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளினை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடற்படையினரால் 350 தலசீமியா நோய்க்கான சிகிச்சை கருவிகள் சுகாதார அமைச்சிடம் கையளிப்பு

இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமுதாய நல பணிகளின் ஒரு பகுதியாக தலசீமியா நோய்க்கான 350 சிகிச்சைக் கருவிகள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் சுகாதார அமைச்சிடம் கடற்படைத் தலைமையகத்தில் வைத்து நேற்று (ஏப்ரல், 21) கையளிக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத்தினரால் ரூ. 55.7 மில்லியன் பெறுமதியான கஞ்சா கைப்பற்றப்பட்டது

பூணேரி, பள்ளிக்குடா கடற்கரைக்கு அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 185.575 கிலோகிராம் கேரள கஞ்சா 54வது பிரவில் கடமைபுரியும் படைவீரர்களினால் கைப்பற்றப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாட்டின் குறைந்த வசதிகள் கொண்ட 08 பாடசாலைகள் இலங்கை கடற்படையின் சமூக சேவை திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படுகிறது

இலங்கை கடற்படையின் 70 ஆவது ஆண்டு நிறைவையொட்டி, நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட குறைந்த வசதிகள் கொண்ட பாடசாலைகளை 2021 ஆம் ஆண்டில் அபிவிருத்தி செய்து நாட்டின் உயிர்நாடியாக இருக்கும் குழந்தைகளின் கல்விக்கு மிகவும் உகந்த சூழலையாக உருவாக்கும் கடற்படை சமூக சேவை திட்டம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மேற்கு, கிழக்கு, வட மத்திய, வட மேற்கு, தென்கிழக்கு, தெற்கு மற்றும் வடக்கு ஆகிய கடற்படை கட்டளைகளில் 2021 ஏப்ரல் 19 ஆம் திகதி தொடங்கப்பட்டது. இந்த சமூக சேவை திட்டத்திற்கான நிதி பங்களிப்பு அனைத்து கடற்படை அதிகாரிகளும் மாலுமிகளும் தங்கள் மாத சம்பளத்தை தானாக முன்வந்து வழங்குகிறார்கள், மேலும் இந்த கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மனிதவளத்தையும் கடற்படை வழங்குகிறது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஐ.நா அமைதிகாக்கும் பணிகளுக்காக பயணமாகும் படைக் குழுவினர் வழியனுப்பி வைப்பு

ஐக்கிய நாடுகள்  அமைதிகாக்கும் பணிகளுக்காக மாலி நோக்கி பயணமாகும்  படைக் குழுவினர் வான நிலையத்தில் வைத்து இன்றைய தினம் (ஏப்ரல், 21) வழி அனுப்பி வைக்கப்பட்டனர். அமைதிகாக்கும் பணிகளுக்காக விஷேடமாக தொழில்முறை ரீதியாக பயிற்சிபெற்ற இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 243 படை வீரர்களே இவ்வாறு வாழ்த்தி வழி அனுப்பி வைக்கப்பட்டனர்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வெலு ஓயாவில் காணாமல் போனதாகக் கூறப்படும் இருவரின் உடல்கள் படையினரால் மீட்பு

ஹல்டும்முல்லவில் உள்ள வெலு ஓயாவில் குளித்துக் கொண்டிருந்த வேளை நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படும் தந்தை மற்றும் அவரது மகனின்
உடல்கள் படையினரால் இன்று (ஏப்ரல் 16) காலை மீட்கப்பட்டுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ரொஷான் அபேசுந்தர அடுத்த நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டார்

விமானப்படை வீரரான ரொஷான் அபேசுந்தர கோப்ரல் நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளார். விமானப் படைத் தளபதி ஏயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரனவினால் நேற்றைய தினம் (ஏப்ரல்,15) அவர் கோப்ரலாக தரம் உயர்த்தப் பட்டார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இந்திய கடற்படைக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை

இந்திய கடற்படைக்கு சொந்தமான 'ரன்விஜய் 'மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை நேற்று (ஏப்ரல்,14) வந்தடைந்தது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

யாழில் உள்ள குடும்பத்திற்கு இராணுவத்தினரால் புதிய வீடு கையளிப்பு

யாழ் கிராண்ட் பஸார் பகுதியில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு இந்து சமய சம்பிரதாயங்களுக்கு அமைய இடம்பெற்ற சிறிய வைபவத்தின் பின்னர் குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டது.







செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பணயக்கைதிகள் மீட்புப் பணிகள் தொடர்பாக இராணுவத்தினருக்கு பயிற்சியளிப்பு

பணயக்கைதிகளை மீட்டல் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்கொள்ளல் பாடநெறி மற்றும் போர் நடவடிக்கைகளில் மோப்ப நாய்களை பயன்படுத்தல் தொடர்பான உயர் தர பாடநெறிகளை வெற்றிகரமாத பூர்த்தி செய்த இலங்கை இராணுவ கொமாண்டோ படையணியின் அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் நேற்று (ஏப்ரல் 7) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தங்களுக்கான அடையாள சின்னத்ததைப் பெற்றுக்கொண்டனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சட்டவிரோத குடியேற்றகாரர்கள் கடற்படையினரால் கைது

சிலாவத்துறை, கொண்டச்சிகுடா தெரு மேற்கொள்ளப்பட்டு விசேட தேடுதல் நடவடிக்கையின்போது சட்டவிரோதமாக நாட்டிலிருந்து புறப்பட தயாராக இருந்த சட்டவிரோத குடியேற்றகாரர்கள் 20 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.