--> -->
செய்தி   ஜனாதிபதி செய்தி

ஜனாதிபதி செய்தி


பாதுகாப்பு செய்திகள் | Defense News

கடற்படை வீரர்களின் வெளியேறல் நிகழ்வில் ஜனாதிபதி அவர்கள் பங்கேற்பு

திருகோணமலையில் உள்ள கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியில் (NMA) நேற்று (ஜுன், 22) இடம்பெற்ற கடற்படை வீரர்களின் வெளியேறல் நிகழ்வில் முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.


பாதுகாப்பு செய்திகள் | Defense News

கடற்படையின் 4வது அதிவிரைவு தாக்குதல் படகிற்கு ஜனாதிபதியினால் அதிகாரமளிப்பு

இலங்கை கடற்படையின் 4வது அதிவிரைவு தாக்குதல் படகிற்கு, முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் 4வது அதிவிரைவு ப்லோடில்லா என அதிகாரமளிக்கப்பட்டது. குறித்த படகிற்கு அதிகாரமளிக்கும் நிகழ்வு நேற்று மாலை (ஜுன், 22) திருகோணமலை கடற்படை தளத்தில் இடம்பெற்றது.


பாதுகாப்பு செய்திகள் | Defense News

ஐ.நா சமாதான படையணிகளின் பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு

ஐ.நா அமைதிகாக்கும் பணிக்காக பொலிஸ் மற்றும் முப்படை அதிகாரிகளை விடுவிக்கின்றபோது மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும்  தடை நீக்க நடவடிக்கைகள் தாமதமடைவதன் காரணமாக ஏற்படும் பிரச்சினைகள் பற்றி ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் கவனம் செலுத்தியுள்ளார்.


பாதுகாப்பு செய்திகள் | Defense News

ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பகத்தன்மையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் பற்றிய மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி தஜிகிஸ்தான் பயணம்

ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பகத்தன்மையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் பற்றிய மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி தஜிகிஸ்தான் பயணம்ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பகத்தன்மையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள்...


பாதுகாப்பு செய்திகள் | Defense News

ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

2019 ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் சில இடங்களில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிவதற்காக ஜனாதிபதி அவர்களினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய விசேட விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கை இன்று (10) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் கையளிக்கப்பட்டது.


பாதுகாப்பு செய்திகள் | Defense News

ஜனாதிபதியுடன் இந்திய பிரதமர் சந்திப்பு

பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையின் அடிப்படையில் இருநாட்டு தொடர்புகளை வலுவடையச் செய்வதற்கு அரச தலைவர்கள் இணக்கம்



பாதுகாப்பு செய்திகள் | Defense News

இலங்கை கடற்படையின் புதிய கப்பலுக்கு ஜனாதிபதியால் அதிகாரமளிப்பு

அமெரிக்க அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட இலங்கை கடற்படையின் மிக நீளமான ஆழ்கடல் ரோந்து கப்பலான P 626 கப்பலுக்கு முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் எஸ் எல் என் எஸ் 'கஜபாகு' என அதிகாரமளித்து வைக்கப்பட்டது.


பாதுகாப்பு செய்திகள் | Defense News

சிவில் பாதுகாப்பு படை திணைக்கள தலைமையக கட்டிடம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு

மொறட்டுவ, கட்டுபெத்த பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிவில் பாதுகாப்பு படை திணைக்கள தலைமையக கட்டிடம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் கடந்த செவ்வாய்க்கிழமையன்று திறந்து வைக்கப்பட்டது.


பாதுகாப்பு செய்திகள் | Defense News

பரஸ்பர புரிந்துணர்வுடன் நாட்டில் சமாதானத்தை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். – ஜனாதிபதி

இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்வதனால் நாடு அழிவை நோக்கி பயணிக்கும் என்பதனால் சகோதரத்துவத்துடனும் பரஸ்பர புரிந்துணர்வுடனும் நாட்டில் சமாதானத்தைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.


பாதுகாப்பு செய்திகள் | Defense News

சிவில் பாதுகாப்புப் படையினரின் நலன்புரி கோரிக்கைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் 20 வருடகால சேவையை பூர்த்தி செய்த 50 வயது நிரம்பிய பெண் உறுப்பினர்களையும் 22 வருடகால சேவையை பூர்த்தி செய்த 50 வயது நிரம்பிய சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளையும் ஓய்வூதியத்துடன் ஓய்வு பெறுவதற்கு அனுமதி வழங்குதல் தொடர்பில் நிதி அமைச்சுடன் கலந்துரையாடியதன் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.


பாதுகாப்பு செய்திகள் | Defense News

“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” நிகழ்ச்சித்திட்டத்தின் நான்காவது நிகழ்வு நாளை முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆரம்பம்

“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” நிகழ்ச்சித்திட்டத்தின் நான்காவது நிகழ்வு நாளை (03) முல்லைத்தீவு மாவட்டத்தை மையப்படுத்தி ஆரம்பிக்கப்படவுள்ளது.


பாதுகாப்பு செய்திகள் | Defense News

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாட்டு இராணுவத்தினரை நாட்டுக்கு கொண்டு வர இடமளிக்கப்பட மாட்டாது – ஜனாதிபதி

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு நாட்டினதும் வெளிநாட்டு இராணுவத்தினரை நாட்டுக்கு கொண்டுவர தான் ஜனாதிபதி பதவியில் இருக்கும் வரை இடமளிக்க போவதில்லை என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.



பாதுகாப்பு செய்திகள் | Defense News

ஜனாதிபதி இந்திய பிரதமரை சந்தித்தார்.

எதிர்காலத்தில் இலங்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளதாக இரண்டாவது தடவையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.


பாதுகாப்பு செய்திகள் | Defense News

புதிய விமானாப்படைத் தளபதி நியமனம்

இலங்கை விமானப்படையின் தளபதியாக எயார் மார்ஷல் டிஎல் சுமங்கல டயஸ் அவர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று காலை (மே,29) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற வைபவத்தின் போது ஜனாதிபதியிடமிருந்து தமது நியமன கடிதத்தை பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.


பாதுகாப்பு செய்திகள் | Defense News

ஜனாதிபதி வெளிநாட்டு தூதுவர்களுடன் சந்திப்பு

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் வெளிநாட்டுத் தூதுவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (27) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.


பாதுகாப்பு செய்திகள் | Defense News

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவிப்பு

இந்திய பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியை அடைந்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


பாதுகாப்பு செய்திகள் | Defense News

30 வருட கால யுத்த வெற்றியின் அபிமானத்தை எதிர்கால தலைமுறையினரும் உலகத்தினரும் அறிந்துகொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் - ஜனாதிபதி

இராணுவ வீரர்களின் போர்த்திறமை, தேசப்பற்று மற்றும் உன்னத மனித நேயம் தொடர்பில் எதிர்கால சந்ததியினர் வாசித்து தெரிந்துகொள்ளக்கூடிய வகையில் 30 ஆண்டு கால யுத்த வெற்றியின் வீரச் சரித்திரத்தை நூலாக தொகுக்க வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாக உள்ளதென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.


பாதுகாப்பு செய்திகள் | Defense News

விசிஷ்ட சேவா விபூஷண பதக்கம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

இராணுவம், கப்பற்படை மற்றும் விமானப் படைகளின் நிரந்தர படையணிகளின் சிரேஷ்ட அதிகாரிகளினால் நிறைவேற்றப்படும் விசேட சேவைகளைப் பாராட்டும் முகமாக வழங்கப்படும் விசிஷ்ட சேவா விபூஷண பதக்கம் (சிறப்பான சேவைக்கான பதக்கம்) வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (22) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.


பாதுகாப்பு செய்திகள் | Defense News

இராணுவ வீரர்களின் சிறப்பும் அர்ப்பணிப்பும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தாய் நாட்டை பாதுகாத்துள்ளது – ஜனாதிபதி

இராணுவ வீரர்களின் சிறப்பும் அர்ப்பணிப்பும் உயிர் தியாகமுமே அனைத்து சந்தர்ப்பங்களிலும் தாய் நாட்டை பாதுகாத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.


பாதுகாப்பு செய்திகள் | Defense News

சீனாவுக்கான விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து ஜனாதிபதி நாடு திரும்பினார்

இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கும் அபிவிருத்திக்குமான ஒத்துழைப்பை மேம்படுத்தி நாட்டுக்கு பல்வேறு நன்மைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தனது விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து இன்று (16) காலை நாடு திரும்பினார்.


பாதுகாப்பு செய்திகள் | Defense News

ஜனாதிபதி – சீன பிரதமர் சந்திப்பு

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மற்றும் சீன பிரதமர் Li Keqiang ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (15) பிற்பகல் பீஜிங் நகரில் இடம்பெற்றது.


பாதுகாப்பு செய்திகள் | Defense News

இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை வேரறுப்பதற்கு அனைத்து உதவிகளையும் வழங்க தயார் – சீன ஜனாதிபதி தெரிவிப்பு

ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கமைய 150 கோடி ரூபா பெறுமதியான 100 ஜீப் வண்டிகள் உள்ளிட்ட வசதிகள் இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு