ஜனாதிபதி செய்தி
பரஸ்பர புரிந்துணர்வுடன் நாட்டில் சமாதானத்தை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். – ஜனாதிபதி
இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்வதனால் நாடு அழிவை நோக்கி பயணிக்கும் என்பதனால் சகோதரத்துவத்துடனும் பரஸ்பர புரிந்துணர்வுடனும் நாட்டில் சமாதானத்தைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
சிவில் பாதுகாப்புப் படையினரின் நலன்புரி கோரிக்கைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு
சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் 20 வருடகால சேவையை பூர்த்தி செய்த 50 வயது நிரம்பிய பெண் உறுப்பினர்களையும் 22 வருடகால சேவையை பூர்த்தி செய்த 50 வயது நிரம்பிய சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளையும் ஓய்வூதியத்துடன் ஓய்வு பெறுவதற்கு அனுமதி வழங்குதல் தொடர்பில் நிதி அமைச்சுடன் கலந்துரையாடியதன் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” நிகழ்ச்சித்திட்டத்தின் நான்காவது நிகழ்வு நாளை முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆரம்பம்
“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” நிகழ்ச்சித்திட்டத்தின் நான்காவது நிகழ்வு நாளை (03) முல்லைத்தீவு மாவட்டத்தை மையப்படுத்தி ஆரம்பிக்கப்படவுள்ளது.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாட்டு இராணுவத்தினரை நாட்டுக்கு கொண்டு வர இடமளிக்கப்பட மாட்டாது – ஜனாதிபதி
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு நாட்டினதும் வெளிநாட்டு இராணுவத்தினரை நாட்டுக்கு கொண்டுவர தான் ஜனாதிபதி பதவியில் இருக்கும் வரை இடமளிக்க போவதில்லை என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.
Tamil
ஜனாதிபதி இந்திய பிரதமரை சந்தித்தார்.
எதிர்காலத்தில் இலங்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளதாக இரண்டாவது தடவையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
புதிய விமானாப்படைத் தளபதி நியமனம்
இலங்கை விமானப்படையின் தளபதியாக எயார் மார்ஷல் டிஎல் சுமங்கல டயஸ் அவர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று காலை (மே,29) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற வைபவத்தின் போது ஜனாதிபதியிடமிருந்து தமது நியமன கடிதத்தை பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி வெளிநாட்டு தூதுவர்களுடன் சந்திப்பு
ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் வெளிநாட்டுத் தூதுவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (27) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவிப்பு
இந்திய பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியை அடைந்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
30 வருட கால யுத்த வெற்றியின் அபிமானத்தை எதிர்கால தலைமுறையினரும் உலகத்தினரும் அறிந்துகொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் - ஜனாதிபதி
இராணுவ வீரர்களின் போர்த்திறமை, தேசப்பற்று மற்றும் உன்னத மனித நேயம் தொடர்பில் எதிர்கால சந்ததியினர் வாசித்து தெரிந்துகொள்ளக்கூடிய வகையில் 30 ஆண்டு கால யுத்த வெற்றியின் வீரச் சரித்திரத்தை நூலாக தொகுக்க வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாக உள்ளதென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
விசிஷ்ட சேவா விபூஷண பதக்கம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்
இராணுவம், கப்பற்படை மற்றும் விமானப் படைகளின் நிரந்தர படையணிகளின் சிரேஷ்ட அதிகாரிகளினால் நிறைவேற்றப்படும் விசேட சேவைகளைப் பாராட்டும் முகமாக வழங்கப்படும் விசிஷ்ட சேவா விபூஷண பதக்கம் (சிறப்பான சேவைக்கான பதக்கம்) வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (22) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இராணுவ வீரர்களின் சிறப்பும் அர்ப்பணிப்பும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தாய் நாட்டை பாதுகாத்துள்ளது – ஜனாதிபதி
இராணுவ வீரர்களின் சிறப்பும் அர்ப்பணிப்பும் உயிர் தியாகமுமே அனைத்து சந்தர்ப்பங்களிலும் தாய் நாட்டை பாதுகாத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சீனாவுக்கான விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து ஜனாதிபதி நாடு திரும்பினார்
இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கும் அபிவிருத்திக்குமான ஒத்துழைப்பை மேம்படுத்தி நாட்டுக்கு பல்வேறு நன்மைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தனது விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து இன்று (16) காலை நாடு திரும்பினார்.
ஜனாதிபதி – சீன பிரதமர் சந்திப்பு
ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மற்றும் சீன பிரதமர் Li Keqiang ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (15) பிற்பகல் பீஜிங் நகரில் இடம்பெற்றது.
இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை வேரறுப்பதற்கு அனைத்து உதவிகளையும் வழங்க தயார் – சீன ஜனாதிபதி தெரிவிப்பு
ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கமைய 150 கோடி ரூபா பெறுமதியான 100 ஜீப் வண்டிகள் உள்ளிட்ட வசதிகள் இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு
நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் முயற்சிகளுக்குள் சிக்கிக்கொள்ள வேண்டாம் – ஜனாதிபதி வேண்டுகோள்
நாட்டின் தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலை திருப்திகரமாக உள்ளதாகவும் மக்களை பதற்றத்தில் ஆழ்த்தும் போலியான பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் தத்தமது அன்றாட நடவடிக்கைகளை சுமுகமாக முன்னெடுத்துச் செல்லுமாறும் ஜனாதிபதி அவர்கள் அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Tamil
பயங்கரவாதிகளின் மிலேச்சத்தனமான நோக்கங்களினால் இலங்கையர்களிடையே பிரிவினையை ஏற்படுத்த இடமளிக்காதிருப்போம்– ஜனாதிபதி
பயங்கரவாதம் உலகில் எங்குமே வெற்றிபெற்றதில்லை என்றும் அடிப்படைவாத பயங்கரவாதத்தின் மிலேச்சத்தனமான நோக்கங்களுக்கு இலங்கையரிடையே பிரிவினையை ஏற்படுத்துவதற்கு இடமளிக்க கூடாதென்றும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் குறிப்பிட்டார்.
பன்முக சமூகத்தின் நல்லிணக்கத்தை பேணிப் பாதுகாப்பதன் பொறுப்பு மதத் தலைவர்களையே சாரும்
மிலேட்சத்தனமான பயங்கரவாதத்தை குறுகிய காலத்திற்குள் இலங்கையிலிருந்து முற்றாக ஒழிப்பதற்கு எமது இராணுவம் நடவடிக்கை எடுக்கும் என்றும் நாட்டு மக்களிடையே காணப்படும் நம்பிக்கைக்கு பங்கம் ஏற்படாத வகையில் அனைத்து இனங்களுக்கிடையேயும் புரிந்துணர்வையும் சகோதரத்துவத்தையும் கட்டியெழுப்புவதற்கான பொறுப்பு மதத் தலைவர்களையே சாரும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
நாட்டின் சில இடங்களில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் பற்றி கண்டறிவதற்கு ஜனாதிபதியினால் விசேட குழு நியமனம்
நேற்றைய தினம் (2019 ஏப்ரல் 21) நாட்டின் சில இடங்களில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக கண்டறிவதற்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மூவர் கொண்ட விசேட விசாரணை குழுவொன்றை நியமித்துள்ளார்.
ஜனாதிபதி பேராயருடன் சந்திப்பு
இதுபோன்ற கொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது என்று ஜனாதிபதி தெரிவிப்பு
ஜனாதிபதி கட்டுவாபிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயத்திற்கு கண்காணிப்பு விஜயம்…
அண்மையில் குண்டுத்தாக்குதலுக்குள்ளான நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயத்தின் நிலைமைகளை கண்டறிவதற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (23) முற்பகல் தேவாலயத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
பயங்கரவாதத்தை ஒழித்து விரைவில் இயல்பு நிலையை மீளக்கொண்டுவர முடியுமென ஜனாதிபதி நம்பிக்கை தெரிவிப்பு…
இலங்கையில் தலைதூக்கியிருக்கும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக வெளிநாட்டுத் தூதுவர்களும் சர்வதேச முகவர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் ஏகமனதாக உறுதியளித்துள்ளனர்.
Tamil