பாதுகாப்பு செய்திகள்
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக தொழில்துறை பங்காண்மைக்குள் நுழைவு
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை ஆகியன இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பெப்ரவரி 23ம் திகதி ரத்மலானையில் உள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தலைமை அலுவலகத்தில் கைச்சாத்திடப்பட்டன.
இலங்கை -பாகிஸ்தான் கடற்படைத் தளபதிகள் சந்திப்பு
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பாகிஸ்தானுக்குச் சென்றுள்ள இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெதென்ன, பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் எம் அம்ஜத் கான் நியாசியை கடந்த பெப்ரவரி 22 ஆம் திகதி பாகிஸ்தான் கடற்படைத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.
போர் வீரர்களுக்கு மேலும் மின்சார மோட்டார் சைக்கிள்கள் வழங்கிவைப்பு
வடமேல் மாகாணத்தில் வாழும் போர்வீரர்களின் நாளாந்த பணிகளை இலகுபடுத்தும் வகையில் ஆறு மின்சார மோட்டார் சைக்கிள்கள் மற்றும் அங்கவீனமுற்றோருக்கான உதவிக் கருவிகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் குருநாகல் லிச்சவி மண்டபத்தில் ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர (ஓய்வு) தலைமையில் நடைபெற்றது.
ஆசிரியர்கள் சமூகத்தை உருவாக்குபவர்கள் – பாதுகாப்பு செயலாளர்
தேசத்தை கட்டியெழுப்பும் செயற்பாட்டிற்காக அறிவார்ந்த மற்றும் கீழ்ப்படிதலுள்ள எதிர்கால மாணவர் சந்ததியை உருவாக்குவதில் பாடசாலை ஆசிரியர்கள் பெரும் பங்களிப்பை வழங்குவதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
சர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தின் “டே ரன் – 2022” நிகழ்வு
இலங்கை விமானப்படையால் இம்முறை ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தின் “டே ரன் – 2022” ஓட்ட நிகழ்வு இன்று ( பெப்ரவரி, 20) காலை கொழும்பு ரைபிள் கிரீன் மைதானத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவினால் கொடியசைத்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பிராந்திய விடயங்கள் தொடர்பாக இலங்கை அவுஸ்திரேலிய ஆராய்வு
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலிய பாதுகாப்பு திணைக்களத்தின் உலக விவகாரப் பிரிவின் உதவி செயலாளர் டொம் மெனடு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இராணுவ வைத்தியசாலைகளில் 50 புதிய இராணுவ தாதியர்கள் சேவை தொடங்க உள்ளனர்
அனுராதபுரம் இராணுவ தாதியர் பாடசாலையில் பொது தாதியியலில் மூன்று வருட நிபுணத்துவ டிப்ளோமா பயிற்சி நெறியை பூர்த்தி செய்த 50 தாதியர்கள் தமது சேவை அடையாளமன தாதி தொப்பியினை பெற்றுக்கொண்டனர்.
நான்காவது கொழும்பு கடற்படைப் பயிற்சி நிறைவு
இலங்கை கடற்படையினரால் நடத்தப்பட்ட நான்காவது கொழும்பு கடற்படை பயிற்சி – 2022 திங்கட்கிழமை (பெப்ரவரி, 14) வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த கடற்படை பயிற்சி இம்மாதம் 12ஆம் திகதி ஆரம்பமானது.
பல்கலைக்கழக வைத்தியசாலையில் புற்றுநோயியல் மற்றும் கண் சிகிச்சை நோயாளிகளுக்கான உள்ளக வார்டு திறப்பு
வேரஹெர கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில் புற்றுநோயியல் மற்றும் கண் மருத்துவ நோயாளிகளுக்கான உள்ளக வார்டு வசதி அப் பல்கலைக்கழக உபவேந்தர் ஜெனரல் மிலிந்த பீரிஸினால் 2022 பெப்ரவரி 15ம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
6.5 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கடந்படையினரால் கைது
பருத்தித்துறை நெல்லியடி பிரதேசத்தில் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 817 கிராம் ஐஸ் ரக போதைப்பொருளுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
குறைந்த வருமானம் பெறும் விவசாயிகளுக்கு விமானப்படையினரால் குறைந்த செலவில் நெல் அறுவடைத் திட்டம்
இலங்கை விமானப்படை, குறைந்த வருமானம் பெறும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் அறுவடைச் செலவைக் குறைக்கும் நெல் அறுவடைத் திட்டத்தை அண்மையில் ஆரம்பித்துள்ளது.