பாதுகாப்பு செய்திகள்
‘குவன் மிதுதம்’ திட்டத்தின் கீழ் விமானப்படையினரால் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி
கொத்மலை, புடலு ஓயாவிலுள்ள சுமங்கல ஆரம்பப் பாடசாலை மற்றும் வவுனியா சின்னத்தம்பனை ஸ்ரீ கிருஷ்ண வித்தியாலயத்தில் விமானப்படையினரால் பூர்த்தி செய்யப்பட்ட பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் அண்மையில் மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டன.
இராணுவத்தினரால் இரு முன்னாள் போராளி குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணம்
விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் அல்லது அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் இலங்கை இராணுவத்தின் மனிதாபிமான உதவியின் ஒரு பகுதியாக, யாழ் குடாநாட்டில் அல்வாய் மற்றும் தும்பளை ஆகிய இடங்களில் மேலும் இரண்டு வீடுகளை நிர்மாணிப்பதற்கு யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினால் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோதனைகளுக்காக பயன்படுத்தும் எக்ஸ்ரே இயந்திரங்கள் கடற்படைக்கு கையளிப்பு
ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதித் தலைவர் தோர்ஸ்டன் பார்க்ப்ரெட் மற்றும் ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றத்தடுப்பு அலுவலகத்தின் பிரதிநிதிகள் இணைந்து சோதனைகளுக்காக பயன்படுத்தும் நான்கு எக்ஸ்ரே இயந்திரங்களை கடற்படையிடம் நேற்று (நவம்பர் 30) கையளித்தனர்.
உலக இராணுவ மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இலங்கை 'பெயார் பிளே' விருதை சுவீகரித்தது
இலங்கை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த மல்யுத்த வீரர்களைக் கொண்ட இலங்கை அணி, ஈரானின் தெஹ்ரான் நகரில் அண்மையில் நடைபெற்ற 35வது உலக இராணுவ மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் "பெயார் பிளே விருது" வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
கிழக்கில் உள்ள தொல்பொருள் பாரம்பரியங்களை முகாமைத்துவம் செய்யும் ஜனாதிபதி செயலணிக்கு மேலும் மூன்று புதிய உறுப்பினர்கள் நியமனம்
கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் பாரம்பரியங்களை முகாமைத்துவம் செய்யும் ஜனாதிபதி செயலணிக்கு மேலும் மூன்று புதிய உறுப்பினர்கள் நேற்று (நவம்பர் 29, 2021) வெளியிடப்பட்ட விஷேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விமானப்படை தேடல் மற்றும் மீட்புப் பயிற்சியில் வெளிநாட்டு படையீனரும் பங்கேற்பு
இலங்கை விமானப்படையினரால் நடத்தப்பட்ட தேடல் மற்றும் மீட்புப் பயிற்சிப் பயிற்சியாளர்களில் பல வெளிநாட்டு படைவீரர்களும் பங்கேற்றனர்.
இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு வீடுகள் தேவையுடைய குடும்பங்களுக்கு கையளிப்பு
காரைநகர் மற்றும் புத்தூர் பகுதிகளில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட மேலும் இரண்டு புதிய வீடுகள் தேவையுடைய இரண்டு குடும்பங்களுக்கு அன்மையில் இராணுவத்தினரால் கையளிக்கப்பட்டது.
கடலோர பாதுகாப்பு படையின் சர்வதேச கூட்டுப் பயிற்சி நிகழ்வு நிறைவு
எதிரிக் கப்பல்கள், கடற்கொள்ளை, மற்றும் கடத்தல், மற்றும் சுங்க நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படைவீரர்களுக்கான பாடநெறிகளை உள்ளடக்கிய பயிற்சிகள் மற்றும் அதன் மேம்பட்ட பயிற்சி நெறிகள் என்பன அண்மையில் நிறைவடைந்தது.
கடலோர பாதுகாப்பு படையினரால் போதைப் பொருள் கடத்தலை கட்டுப்படுத்தும் ஒருங்கிணைப்பு கூட்டம் முன்னெடுப்பு
இலங்கை மற்றும் பங்களாதேஷ் கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தலை தடுத்தல் தொடர்பான ஒரு ஒருங்கிணைப்பு கூட்டத்தை நடத்தும் நோக்கில், ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றத் தடுப்பு அலுவலகம் மற்றும் பங்களாதேஷ் நாட்டு பிரதிநிதிகள் மிரிஸ்ஸாவில் உள்ள கடலோர பாதுகாப்பு படை தலைமையகத்திற்கு அண்மையில் விஜயம் செய்தனர்.
கொழும்பு மாநாடு 2021: தேசிய பாதுகாப்பு மீதான சர்வதேச பரிமாணங்கள்
பாதுகாப்பு அமைச்சின் கீழ் நிறுவப்பட்ட தேசிய பாதுகாப்பு தொடர்பான முதன்மையான சிந்தனைக் குழுவான தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனம் , அதன் இரண்டாவது தேசிய மாநாடான “கொழும்பு மாநாடு -2021” இம்மாதம் 24ம் திகதி காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை பத்தரமுல்ல வாட்டர்ஸ் எட்ஜில் நடாத்தியது. இந்த மாநாடு “தேசிய பாதுகாப்பு மீதான சர்வதேச பரிமாணங்கள்” எனும் தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்றது.
57 வது இராணுவ படையணிகளுக்கிடையிலான தடகள போட்டி 2020-2021 நிறைவு
இராணுவ விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்திய இராணுவ விளையாட்டு நாட்காட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஊக்கமளிக்கும் நிகழ்வான 57 வது இராணுவப் படையணிகளுக்கிடையிலான தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் 2020-2021 26 ம் திகதி மாலை கொழும்பு சுகததாச மைதானத்தில் எதிர்காலத்தில் தேசிய மற்றும் சர்வதேச வெற்றி எதிர்பார்ப்புகளுடன் நிறைவுபெற்றது.
‘ஐக்கிய நாடுகள் சபை எப்போதும் இலங்கையுடன் நெருக்கமாகச் செயற்படுகின்றது…
ஐக்கிய நாடுகள் சபை, எப்போதும் இலங்கையுடன் நெருக்கமாகவே செயற்படுகின்றது என, அதன் அரசியல் அலுவல்கள், அமைதியைக் கட்டியெழுப்பல் மற்றும் அமைதிச் செயற்பாடுகள் தொடர்பான உதவிப் பொதுச் செயலாளர் கலீட் கியாரி (Khaled Khiari) தெரிவித்தார்.
பாராளுமன்ற வளாகத்தின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி வைப்பு
பாராளுமன்ற வளாகத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தினால் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை இன்றைய தினம் பாராளுமன்றத்திற்கு கையளிக்கப்பட்டது.
விமானப்படையின் விதை தூவலின் ஆறாவது அலை ஆரம்பம்
சியாம்பலாண்டுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட வத்தேகம கெபிலித்த அரச வனப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (நவம்பர், 23) சுமார் 65,000 விதைகளை தூவுவதற்கு இலங்கை விமானப்படையின் எம்ஐ-17 ரக ஹெலிகொப்டர் பயன்படுத்தப்பட்டது.
ரஷ்ய பாதுகாப்பு சபை செயலாளருக்கு பாதுகாப்பு செயலாளர் பிரியாவிடையளிப்பு
ங்கட்கிழமை இலங்கைக்கு வருகை தந்த ரஷ்ய பாதுகாப்புச் சபையின் செயலாளர் நிகோலாய் பட்ருஷேவ் இன்று (நவம்பர், 24) நாட்டை விட்டு புறப்பட்டுச் சென்றார்.