பாதுகாப்பு செய்திகள்
ஜப்பானிய கடற்படை கப்பல்கள் இரண்டு கொழும்பு துறைமுகத்துக்கு வருகை
ஜப்பானிய கடற் படைக்கு சொந்தமான இரண்டு போர் கப்பல்கள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. ஜப்பானிய கடற் படையின் 'யுரகா' மற்றும் 'ஹிராடோ' ஆகிய கப்பல்களே இவ்வாறு வருகை தந்துள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை விமானப்படை தனது 71வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது
இலங்கை விமானப்படை இன்று (மார்ச் 03) தனது 71வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரனவின் தலைமையில் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் தனது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடுகிறது.
ஐ.நா அமைதிகாக்கும் பணிகளுக்கான இரண்டாவது குழு லெபனான் பயணம்
லெபனானில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் பணிகளுக்காக இலங்கை இராணுவத்தின் இரண்டாவது குழு லெபனான் நோக்கி பயணமானது. இதற்கமைய, இலங்கை இராணுவத்தின் 2 அதிகாரிகள் மற்றும் 48 படைவீரர்கள் அடங்கிய 13 ஆவது பாதுகாப்பு குழு அமைதி காக்கும் பணிக்காக ஞாயிற்றுக்கிழமை (27) லெபனானுக்கு புறப்பட்டது.
இந்திய கடற்படை கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை
இந்திய கடற்படையின் சுழியோடல் ஆதரவுக் கப்பலான "ஐஎன்எஸ் நிரீக்ஷக்" திங்கள்கிழமை (பெப்ரவரி, 28) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது. வருகை தந்த கப்பலுக்கு கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்பு அளிக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக தொழில்துறை பங்காண்மைக்குள் நுழைவு
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை ஆகியன இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பெப்ரவரி 23ம் திகதி ரத்மலானையில் உள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தலைமை அலுவலகத்தில் கைச்சாத்திடப்பட்டன.
இலங்கை -பாகிஸ்தான் கடற்படைத் தளபதிகள் சந்திப்பு
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பாகிஸ்தானுக்குச் சென்றுள்ள இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெதென்ன, பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் எம் அம்ஜத் கான் நியாசியை கடந்த பெப்ரவரி 22 ஆம் திகதி பாகிஸ்தான் கடற்படைத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.
போர் வீரர்களுக்கு மேலும் மின்சார மோட்டார் சைக்கிள்கள் வழங்கிவைப்பு
வடமேல் மாகாணத்தில் வாழும் போர்வீரர்களின் நாளாந்த பணிகளை இலகுபடுத்தும் வகையில் ஆறு மின்சார மோட்டார் சைக்கிள்கள் மற்றும் அங்கவீனமுற்றோருக்கான உதவிக் கருவிகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் குருநாகல் லிச்சவி மண்டபத்தில் ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர (ஓய்வு) தலைமையில் நடைபெற்றது.
ஆசிரியர்கள் சமூகத்தை உருவாக்குபவர்கள் – பாதுகாப்பு செயலாளர்
தேசத்தை கட்டியெழுப்பும் செயற்பாட்டிற்காக அறிவார்ந்த மற்றும் கீழ்ப்படிதலுள்ள எதிர்கால மாணவர் சந்ததியை உருவாக்குவதில் பாடசாலை ஆசிரியர்கள் பெரும் பங்களிப்பை வழங்குவதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
சர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தின் “டே ரன் – 2022” நிகழ்வு
இலங்கை விமானப்படையால் இம்முறை ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தின் “டே ரன் – 2022” ஓட்ட நிகழ்வு இன்று ( பெப்ரவரி, 20) காலை கொழும்பு ரைபிள் கிரீன் மைதானத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவினால் கொடியசைத்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.