பாதுகாப்பு செய்திகள்
மஹா ஓயா தாழ்நில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மஹா ஓயாவின் தாழ்நிலப் பகுதிகளில் அடுத்த சில மணித்தியாலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவசர நடவடிக்கைகளின்போது உதவ கடற்படையின் வெள்ள நிவாரண குழுக்கள் தயார் நிலையில்
நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர உதவி நடவடிக்கைகளை முன்னெடுக்க இலங்கை கடற்படையின் நிவாரண குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
புற்று நோய் சிகிச்சை இயந்திரம் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கி வைப்பு
புற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ‘ஹைபர்தெர்மிக் இன்ட்ராபெரிடோனியல் கீமோதெரபி (HIPEC) இயந்திரம் ஒன்று கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தினால் அரச நிறுவனங்களுக்கு புதிய கண்டுபிடிப்புகள் கையளிப்பு
பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களில் ஒன்றான பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தினால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்புகள் சில பாதுகாப்பு மற்றும் அரச திணைக்களங்களிடம் வைபவ ரீதியாக பாதுகாப்பு செயலாளரும், தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளருமான ஜெனரல் கமல் குணரத்னவினால் (ஓய்வு) கையளிக்கப்பட்டது.
சந்தஹிருசேய தூபி இம்மாதம் 18ம் திகதி பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறந்து வைக்கப்படவுள்ளது - பாதுகாப்பு செயலாளர்
சந்தஹிருசேய தூபி வணக்கத்துக்குரிய மகா சங்கத்தினரால் இம்மாதம் 18ம் திறந்த வைக்கப்பட்டு பொதுமக்கள் வழிபாட்டுக்காக வழங்கப் படவுள்ளதென பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன (ஓய்வு) இன்று (நவம்பர், 07) தெரிவித்தார்
புத்தக வெளியீட்டு விழாவில் பாதுகாப்புச் செயலாளர் கலந்து சிறப்பிப்பு
பனாகொட இராணுவப் பாசறையில் உள்ள இலங்கை காலாட்படை கேட்போர் கூடத்தில் இன்று (நவம்பர், 06) நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) கலந்து கொண்டார்.
பாதுகாப்பு செயலாளருக்கு 'பொப்பி மலர் ' அணிவிப்பு
இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்ற போர்வீரர்கள் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் உபுல் பெரேராவினால் (ஒய்வு), பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவிற்கு (ஒய்வு) 'பொப்பி மலர்’ அணிவிக்கும் நிகழ்வு பாதுகாப்பு அமைச்சில் இன்று (நவம்பர்,01) இடம் பெற்றது.
கடற்படையின் கயன்திகா அபேரத்ன புதிய இலங்கை சாதனைகளை படைத்தார்
சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் ஒக்டோபர் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் நடைபெற்ற 99 ஆவது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை கடற்படை வீராங்கனை கயன்திகா அபேரத்ன, மகளிருக்கான 1500 மீற்றர் மற்றும் 5000 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் இரண்டு புதிய இலங்கை சாதனைகளை படைத்தார்.
முலங்காவிலில் தேவையுடைய குடும்பத்திற்கு ஒரு புதிய வீடு கையளிப்பு
இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட ஒரு புதிய வீடு வெள்ளாங்குளம், முலங்காவில் பிரதேசத்தில் வசிக்கும் தேவையுடைய குடும்பமான திருமதி. முத்து குமார் யஸீதா குடும்பத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது.