பாதுகாப்பு செய்திகள்
நான்கு கடற்படை வீரர்களுக்கு சர்வதேச கடல்சார் நிறுவனத்தினால் அங்கீகாரமளிப்பு
நான்கு கடற்படை வீரர்களுக்கு 2021ஆம் ஆண்டிற்கான கடலில் சாகசம் மிகுந்த துணிச்சலுக்கான ஐஎம்ஓ விருது வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்ற விசேட நிகழ்வின் போது, கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் இந்த பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கப்பட்டது. கடற்படை வீரர்களின் துணிச்சலைக் கருத்தில் கொண்டு சர்வதேச கடல்சார் அமைப்பான ஐஎம்ஓ வினால் இந்த பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தனியார் பாதுகாப்புத்துறை ஒரு வளர்ந்து வரும் தொழில்துறையாகும் – பாதுகாப்புச் செயலாளர்
தனியார் பாதுகாப்புத் தொழிற்துறை, வளர்ந்து வரும் ஒரு துறையாகும், தேசிய பாதுகாப்பிற்கு பங்களிப்பு செய்வதால் இவர்களினால் நாட்டிற்கு வழங்கப்படும் சேவை அளப்பரியது என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
ஐநா அமைதிகாக்கும் பணிகளுக்காக இராணுவத்தின் 8வது குழுமத்தின் முதற்குழு தென் சூடான் நோக்கி பயணம்
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் பணிகளுக்காக தென்சூடானில் நிறுவப்பட்டுள்ள 2ம் நிலை இராணுவ பராமரிப்பு வைத்திசாலையான சிறிமெட் வைத்தியாலையில் பணியாற்றுவதற்காக தயாராகவுள்ள இலங்கை இராணுவ மருத்துவ படையணியின் 8 வது இராணுவ படைக் குழுவின் முதலாவது குழுவினர் இன்று (டிசம்பர், 29) அதிகாலை தென்சூடான் நோக்கி பயணமானார்கள்.
இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு தேவையான குடும்பத்திற்கு கையளிப்பு
இலங்கை இராணுவத்தால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு, மட்டக்களப்பு, கெவிலியா மடு, மங்களகமவில் உள்ள திருமதி ஏ.எம்.நந்தினி குடும்பத்திற்கு வழங்கி வைக்கப்பட்டது. இதற்கமைய அண்மையில் இடம்பெற்ற புதுமனை குடிபுகு விழாவின் போது இந்த வீட்டின் சாவி கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் லால் சந்திரசிறியால் கையளிக்கப்பட்டது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு முன்னெடுப்புகளை கடற்படை தொடர்கிறது
சுற்றுச்சூழல் பாதுகாப்பு முன்னெடுப்புக்களின் ஒரு பகுதியாக கடற்படையினரால் பானம மற்றும் அதனை அண்டியுள்ள சதுப்பு நிலப் பரப்புக்களில் கண்டல் தாவரங்கள் உட்பட 1200 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த மர நடுகை திட்டம் நேற்றையதினம் (டிசம்பர், 27) முன்னெடுக்கப்பட்டது.
குட்டிகலவில் 200 ஏக்கர் பரப்பளவில் இராணுவத்தினரால் தென்னைப் பயிர்ச்செய்கை
குட்டிகலவில் உள்ள இராணுவ பொது சேவைப் படைப்பிரிவினால் தென்னைப் பயிர்ச்செய்கை திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த தென்னைப் பயிர்ச்செய்கை திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் தென்னம் மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டுள்ளன.
ருவாண்டா மற்றும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் வழங்கும் பட்டப்படிப்பு திட்டங்களில் தகுதிவாய்ந்த ருவண்டா மாணவர்களை அனுமதிக்ககோரும் பல்கலைக்கழகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ருவாண்டா குடியரசு புதுப்பித்துள்ளது.
நத்தார் தின வாழ்த்துச் செய்தி
இயேசு கிறிஸ்துவின் பிறப்புடன் தொடர்புடைய நத்தார் பண்டிகையானது, இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களால் மாத்திரமன்றி முழு மானிட சமூகத்துக்கிடையில் பிரிக்க முடியாத தொடர்புகளைப் பலப்படுத்துகின்ற மகிழ்ச்சிகரமான ஒரு நன்நாளாகும்.
ஆட்கடத்தலுக்கு எதிராக பாதுகாப்பு அமைச்சின் தலைமையின் கீழ் அரசாங்கத்தினால்
கடுமையான மற்றும் உடனடி நடவடிக்கை
ஆட்கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு புலனாய்வு அதிகாரிகள் மற்றும் புலனாய்வு சேவைகளுடன் ஒருங்கிணைந்த உயர் ரக நிறுவன பொறிமுறையை நிறுவும் நோக்கில், அமைச்சரவையினால் இவ்வாண்டு ஜூலை மாதம் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய ஆட்கடத்தலுக்கு எதிரான தேசிய செயலணியின் தலைமைத்துவனது, நீதி அமைச்சிலிருந்து பாதுகாப்பு அமைச்சிற்கு மாற்றப்பட்டது.
ஊடக அறிக்கை
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து பங்களாதேஷுக்கான கடல் பயணத்தின் போது திடீரென ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அவசரநிலையை எதிர்கொண்ட பாரிய படகு ஒன்று சில நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பு கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் நங்கூரமிட்டிருந்தது. இந்நிலையில் குறித்த படகு அகழ்வுப்பணிகளில் ஈடுபட்டுள்ளதாக சில சமூக ஊடகங்களில் வெளியிடப் பட்டுள்ள உண்மைக்குப் புறம்பான தகவல்களை பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது.
தலசீமியா நோய்க்கான சிகிச்சை கருவிகள் கடற்படையினரால் சுகாதார அமைச்சிடம் கையளிப்பு
இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமுதாய நல பணிகளின் ஒரு பகுதியாக தலசீமியா நோய்க்கான 23 சிகிச்சைக் கருவிகள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் சுகாதார அமைச்சிடம் கடற்படைத் தலைமையகத்தில் வைத்து நேற்று (டிசம்பர், 15) கையளிக்கப்பட்டது.