பாதுகாப்பு செய்திகள்
முலங்காவிலில் தேவையுடைய குடும்பத்திற்கு ஒரு புதிய வீடு கையளிப்பு
இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட ஒரு புதிய வீடு வெள்ளாங்குளம், முலங்காவில் பிரதேசத்தில் வசிக்கும் தேவையுடைய குடும்பமான திருமதி. முத்து குமார் யஸீதா குடும்பத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவில் நோயாளிகளுக்கு இராணுவத்தினரால் இரத்ததானம்
முல்லைத்தீவில் கடமையாற்றும் படையினர் கிளிநொச்சி இராணுவ வைத்தியசாலையில் அண்மையில் இரத்ததான வழங்கும் நிகழ்வினை மேற்கொண்டனர்.
அலங்கார மீன்களை வளர்ப்பு திட்டம் இராணுவத்தினரால் ஆரம்பிப்பு
அரசாங்கத்தின் நன்னீர் மீன் வளர்ப்புக்கு ஊக்கமளிக்கும் வகையில், கந்தகாடு இராணுவப் பண்ணையில் ‘திலப்பியா’ மீன் குஞ்சுகள் மற்றும் அலங்கார மீன்களை வளர்க்கும் முயற்சியில் இலங்கை இராணுவம் ஈடுபட்டுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
பானமவில் கடற்படையினரால் நீர் சறுக்கல் விளையாட்டு கிளப் திறந்து வைப்பு
இலங்கை கடற்படை அண்மையில் பானமவில் ஒரு புதிய நீர் சறுக்கல் விளையாட்ட கிளப்பை நிறுவியுள்ளது.
ஜனாதிபதிக்கு முதலாவது பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது…
இலங்கை முன்னாள் பாதுகாப்புப் பணியாளர் சங்கம் வருடாந்தம் ஏற்பாடு செய்யும் இராணுவ வீரர்களை நினைவுகூரும் பொப்பி மலர் தின நிகழ்வின் முதலாவது பொப்பி மலர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு அணிவிக்கப்பட்டது.
பிரான்ஸில் நடைபெரும் உலக இராணுவ ஜூடோ போட்டிகளில் பங்கேற்க என்பது இராணுவ ஜூடோ வீரர்கள் பயணம்
இந்த மாதம் 28ம் திகதி முதல் நவம்பர் 04ம் திகதி வரை பிரான்சின் பாரிஸ் நகரில் நடைபெறவுள்ள 2021 உலக இராணுவ ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை இராணுவத்தின் சார்பில் ஒன்பது வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
வவுனியா போகஸ்வெவ மகா வித்தியாலயத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கடற்படையினரால் ஸ்தாபிப்பு
இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக நலத் திட்டங்களின் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் வவுனியா போகஸ்வெவ மகா வித்தியாலயத்தில் ஸ்தாபிக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் நேற்றைய தினம் (ஒக்டோபர் 25) பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
உலக இராணுவ விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விமானப்படை ஜூடோ வீரர்கள் பயணம்
இந்த மாதம் பிரான்சின் பாரிஸ் நகரில் நடைபெறவுள்ள 40 வது உலக இராணுவ ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக இலங்கை சர்வதேச ஜூடோ நடுவரான சார்ஜன்ட் நுவான் அத்தநாயக்க மற்றும் விமானப்படையைச் சேர்ந்த தேர்வு செய்யப்பட்ட பத்து ஜூடோ வீரர்கள் இம்மாதம் 27ம் திகதி பயணமாகவுள்ளனர்.
இலங்கை கடற்படை கப்பல் 'சமுத்ரா' எச்எம்எஸ் 'கென்ட்' கப்பலுடன் கூட்டுப்பயிற்சியில் பங்கேற்பு
எரிபொருள் நிரப்பும் தேவைகளுக்காக கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்திருந்த ரோயல் கடற்படை படைக்குச் சொந்தமான வகை 23 ரக ஹேர் மெஜஸ்டிஸ் 'கென்ட்' போர்க்கப்பல், இலங்கை கடற்படையினருடன் இணைந்து மேற்கொண்ட பயிற்சிகளின் பின்னர் நேற்றைய தினம் (ஒக்டோபர் 24) கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது.
இந்திய கடற்படை கப்பல்கள் இலங்கை கடற்படையுடன் இணைந்து இருதரப்பு கடற்படை கூட்டுப் பயிற்சியினை தொடங்குகிறது
இந்திய கடற்படையைச் சேர்ந்த 01வது பயிற்சிப் படைக் கப்பல்கள் இலங்கை கடற்படையினருடன் இணைந்து இருதரப்பு கடற்படை கூட்டுப் பயிற்சியினை முன்னெடுப்பதற்காக நேற்றைய தினம் (ஒக்டோபர்,24) இலங்கை வந்தடைந்தன.
வடிடுவாக் முதல் கொக்கிலாய் வரையான கடற்கரைப் பிரதேசம் படையினரால் தூய்மையாக்கம்
தூய்மையான மற்றும் பாதுகாப்பான கடற்கரை சூழலை உருவாக்கும் நோக்கில் இராணுவ வீரர்களினால் வடிடுவாக் முதல் கொக்கிலாய் வரையான கடற்கரையோர பகுதியை சுத்தம் செய்யும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவில் மேலும் நான்கு வீடுகள் தேவையுடைய குடும்பங்களுக்கு இராணுவத்தினரால் கையளிப்பு
முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் உள்ள படைவீரர்களினால் வீடற்ற பொதுமக்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ் இந்த பிராந்தியத்தின் வெவ்வேறு பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட நான்கு புதிய வீடுகள் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டன.
கிழக்கு பிராந்தியத்தில் இராணுவத்தினரால் மருத மரக்கன்றுகள் நடுகை
கிழக்கு பாதுகாப்புப் படை தலைமையகத்தின் கீழ் உள்ள படையினர் கிழக்கு தலைமையக வளாகத்தில் பிரதேசத்தின் நீரேந்து பிரதேசங்களின் நீரேந்து திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக்கொண்டு 1600 மருத மரக்கன்றுகளை நடுகை செய்தனர்.
உடுப்பிட்டியில் தேவையுடைய குடும்பத்திற்கு ஒரு புதிய வீடு கையளிப்பு
யாழ் பாதுகாப்புப் படை தலைமையகத்தின் கீழ் உள்ள படைவீரர்களின் ஆளணி மற்றும் தொழிநுட்ப திறன் மூலம் நிர்மாணிக்கப்பட்ட ஒரு புதிய வீடு உடுப்பிட்டி, இமயயானன் பிரதேசத்தில் வசிக்கும் தேவையுடைய குடும்பத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது.
யாழில் உள்ள சதுப்புநில பகுதியில் கடற்படையினரால் 5,000 கண்டல் தாவரங்கள் நடுகை
யாழ் குடாநாட்டில் 5,000 கண்டல் தாவரங்களை நடுகை செய்ய கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டிருந்த திட்டம் அண்மையில் பொன்னாலை சதுப்புநிலப் பகுதியில் வெற்றிகரமாக நிறைவுபெற்றது.