பாதுகாப்பு செய்திகள்
இலங்கை மற்றும் இந்திய இராணுவங்களுக்கிடையிலான 'மித்ர சக்தி' கூட்டுப்பயிற்சி
எட்டாவது முறையாக இடம்பெறவுள்ள 'மித்ர சக்தி' கூட்டுப்பயிற்சியில் இந்திய இராணுவத்தின் சார்பில் பங்கேற்கவுள்ள 120 இராணுவ வீரர்கள் அண்மையில் மத்தளை சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். இலங்கை மற்றும் இந்திய இராணுவங்களுக்கிடையிலான வருடாந்த கூட்டுப்பயிற்சி இம்மாதம் 03ம் திகதி முதல் 17ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
வழிபாடுகளுக்காக சந்தஹிருசேய புனித வஸ்த்துக்களை ஏந்திய வாகன பவனி
சந்தஹிருசேய தூபியின் சூடாமாணிக்கம் மற்றும் கோபுர கலசத்தை ஏந்திய வாகன பவனி நாளை (ஒக்டோபர், 05) கதிர்காமம் பிரதேசத்தில் அமைந்துள்ள புராதன கிரி வெஹெரவை சென்றடையவுள்ளது.
அரச புலனாய்வு சேவை தனது 80 வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது
அரச புலனாய்வு சேவை தனது 80வது ஆண்டு நிறைவு விழாவை ஒக்டோபர் மாதம் 01ம் திகதியன்று மிக எளிமையான முறையில் கொண்டாடியது.
கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகம் அதன் கல்விதுறைகளை விஸ்தரிக்கிறது
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகம், பாகிஸ்தானின் காம்சாட்ஸ் பல்கலைக்கழகத்துடனான புரிந்துணர்வு ஆவணத்தில் அண்மையில் கையெழுத்திட்டது.
ஜப்பானிய கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை
ஜப்பானிய கடற்படைக்கு சொந்தமான ககா, முரசமே மற்றும் பியுசுகி ஆகிய 3 நாசகாரி கப்பல்கள் இன்றைய தினம் (ஒக்டோபர் 02) நாட்டிற்கு வருகை தந்துள்ளன. இதற்கமைய, ஜப்பானிய கடற்படைக்கு சொந்தமான குறித்த கப்பல்கள் நல்லெண்ணெ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்புத் துறைமுகத்தை வந்த அடைந்துள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெற்கு சூடானில் அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபட்டு நாடு திரும்பவுள்ள படையினருக்கு பதக்கங்கள் அணிவிப்பு
தெற்கு சூடானில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபட்டு நாடு திரும்பவுள்ள இலங்கை இராணுவ வீரர்களுக்கு அண்மையில் தெற்கு சூடானை தளமாகக் கொண்ட வைத்தியசாலை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வின்போது பதக்கங்கள் அணிவிக்கப்பட்டன.
12 வருடங்களுக்கு பின்னர் கவசப் படையணியின் களத் துப்பாக்கிச் சுடும் பயிற்சி அமர்வுகள் ஆரம்பம்
கற்பிட்டியிலுள்ள இலங்கை விமானப் படையின் துப்பாக்கிச் சுடும் களப் பயிற்சி தளத்தில், இரண்டு நாள் (செப்டம்பர் 21-22) இளம் கவச படையணி அதிகாரிகளுக்கான பாடநெறி, போர்க்கள கவச வாகன செலுத்துனர்களுக்கான பாடநெறி, துப்பாக்கி பிரயோகம் தொடர்பிலான பாடநெறி ஆகியவற்றை தொடரும் வாய்ப்பு 15 அதிகாரிகள் மற்றும் 130 சிப்பாய்களுக்கு 12 வருடங்களுக்கு பின்னர் மீட்டும் கிடைக்கப்பெற்றுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் சிறுவர் தின வாழ்த்துச் செய்தி
தற்காலத்தில் உலகம் முகங்கொடுத்திருக்கும் தொற்றுப் பரவலுக்கு மத்தியில், அனைத்துச் சிறுவர் சமுதாயத்தினதும் எதிர்பார்ப்புகளுடன் கூடிய சிறுவர் உலகத்துக்கான வரையறைகள் அதிகரித்துள்ளன. பாடசாலை வகுப்பறைகள், விளையாட்டு மைதானங்கள் என்பன, இன்னமும் எமது பிள்ளைகளுக்குத் தொலைதூரமாகியுள்ளன.
சிறைச்சாலை அதிகாரிகளுக்கான செயலமர்வில் பாதுகாப்பு செயலாளரினால் விஷேட சொற்பொழிவு
சிறையில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களும் பாதாள உலக கோஸ்டிகளும் தங்களது வலையமைப்பின் செயற்பாடுகளை சிறைகளுக்குள் இருந்தவாறு தொடர்ந்து முன்னெடுக்க அனுமதித்தல் அல்லது அவர்களின் அனைத்து சட்டவிரோத செயல்களையும் தடுத்து நிறுத்தல் என்பது சிறைச்சாலை அதிகாரிகளின் நடத்தையில் தங்கியுள்ளது.
ஊடக அறிக்கை
இலங்கையில் தேவாலயங்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என சமூக ஊடகங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் பரவி வரும் செய்தி பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டதோ அல்லது உறுதிப்படுத்தப்பட்டதோ அல்ல.
ரஷ்யாவில் நடைபெற்ற 58 வது உலக இராணுவ குத்துச்சண்டை போட்டியில் இலங்கை இரண்டு வெண்கலப் பதக்கங்கள்
ரஷ்யாவில் நடைபெற்ற 58 வது உலக இராணுவ குத்துச்சண்டை போட்டியில் இலங்கை இரண்டு வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இணைந்து கொண்டது. இலங்கை இராணுவத்தின் லான்ஸ் காேர்ப்ரல் சஜீவா நுவான் மற்றும் இலங்கை விமானப்படையின் லீடிங் எயார் கிராப்ட் வுமன் கயானி களுஆராச்சி ஆகிய இருவரும் மாெஸ்கோவில் உள்ள தேசபக்தி கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் இம்மாதம் 19ம் திகதி முதல் 26ம் திகதி வரை இடம்பெற்ற சர்வதேச போட்டியில் தங்களின் எடை பிரிவில் வெண்கலப் பதக்கத்தினை சுவீகரித்தனர்.
கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படையின் உதவியுடன் காயமுற்ற மீனவர் கரைக்கு கொண்டு வரப்பட்டார்
இலங்கை கடற்படை, ஜூலை 26ம் திகதி பலநாள் மீன்பிடிக்காக சென்றிருந்தபோது காயமடைந்த மீனவரை கரைக்கு கொண்டு வந்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தது.