பாதுகாப்பு செய்திகள்
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையின் செவி, மூக்கு, தொண்டை சிகிச்சைப்பிரிவு அண்மையில் கோக்லியர் இம்ப்லாண்டேஷன் திட்டத்தை தொடங்கியது.
அதன்படி, அவர்கள் ஒரு வருடமும் ஒன்பது மாதங்களுமான இயற்கையாகவே காது கேளாத குழந்தைக்கு முதல் கோக்லியர் உள்வைப்பு சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.
சர்வதேச பாதுகாப்பு தொழில்முறைக் கண்காட்சி - 2021ல் துருக்கி தேசிய பாதுகாப்பு அமைச்சருடன் பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற 15 வது சர்வதேச பாதுகாப்பு தொழில்முறைக் கண்காட்சி - 2021இன் போது இலங்கை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) துருக்கி குடியரசின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஹுலூசி அகாரை வியாழக்கிழமையன்று (ஒகஸ்ட்,19) சந்தித்தார்.
ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
திருகோணமலை, குச்சவெளி, ஜயாநகர் பிரதேசத்தில் நேற்று (ஓகஸ்ட்,21) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது கடற்படையினரால் சுமார் ஒரு மில்லியன் ரூபாவிற்கு பெறுமதியான கஞ்சா கைப்பற்றப்பட்டது.
உயிர்களை காப்பாற்ற படையினர் இரத்த தானம்
நாட்டில் நிலவும் தொற்றுநோய் சூழ்நிலையில் பொமக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை விமானப்படை ஆகியவை அண்மையில் யாழ்ப்பாணம் மற்றும் ஹிங்குராகொடவில் இரத்த தான வழங்கும் நிகழ்வினை ஏற்பாடு செய்தன.
சந்தஹிருசேய தூபியின் புனித வஸ்த்துக்கள் சமய கிரிகைகளுக்காக களுத்துறை போதி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது
பெளத்த சமய அனுஷ்டானங்களுக்காக கடந்த சில நாட்களாக நாட்டின் சில பாகங்களிலில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட சந்தஹிருசேய தூபியின் சூடாமாணிக்கம் மற்றும் கோபுர கலசம் என்பவற்றை ஏந்திய வாகன பவனி, நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காரணமாக களுத்துறை போதி வளாகத்தில் சமய கிரிகைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.
சந்தஹிருசேய தூபியின் புனித வஸ்த்துக்கள் இன்று பாணந்துரை ரங்கொத் விஹாரையை சென்றடையும்
சந்தஹிருசேய தூபியின் புனித வஸ்துக்களை ஏந்திய வாகன பவனி இன்றையதினம் (ஓகஸ்ட், 20) பாணந்துரை ரங்கொத் விஹாரையை சென்றடையவுள்ளது.
பெரும்போக நெற் செய்கைக்காக 3,600 மெட்ரிக் தொன் சேதனப் பசளை இராணுவத்தினரால் உற்பத்தி
2021 பெரும்போக நெற்செய்கைக்காக தேவைப்படும் சுமார் 3,600 மெட்ரிக் தொன் சேதனப் பசளையை இராணுவத்தினர் உற்பத்தி செய்யவுள்ளனர்.
சந்தஹிருசேய தூபியின் புனித வஸ்த்துக்கள் இன்று ஹொரண குருந்துவத்த விஹாரையை சென்றடையும்
சந்தஹிருசேய தூபியின் புனித வஸ்துக்களை ஏந்திய வாகன பவனி இன்று (ஓகஸ்ட், 19) மாலை ஹொரண குருந்துவத்த மஹா விஹாரையை சென்றடையவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உயிர் நீத்த இந்திய போர் வீரர்களுக்கு இந்திய சுதந்திர தினத்தன்று அஞ்சலி
விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட “பவன்” நடவடிக்கை மற்றும் 1987 தொடக்கம் 1990 ஆம் ஆண்டு வரையில் இந்திய அமைதிகாக்கும் படையினரால் மேற்கொள்ளப்பட்ட விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிரான ஏனைய நடவடிக்கைகளின் போது உயிர்நீத்த இந்திய போர் வீரர்களின் நினைவுத் தூபியில் இந்தியாவின் 75 வது சுதந்திரமான 15 ஓகஸ்ட் 2021 அன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.