--> -->

பாதுகாப்பு செய்திகள்

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தென் சூடான் அமைதி காக்கும் படையினரால் மருத்துவ பயிற்சி

இலங்கை இராணுவ படைகுழுவினரால் நிர்வகிக்கப்படும் தென் சூடானை தளமாகக் கொண்ட நிலை II வைத்தியசாலையில் பணி புரியும் படை குழுவினரால் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளே பராமரித்தல் தொடர்பான மருத்துவ பயிற்சி அண்மையில் நடாத்தப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சட்டவிரோத உலர்ந்த மஞ்சள் கடத்தல் நடவடிக்கை கடற்படையினரால் முறியடிப்பு

வடமேற்கு மற்றும் மேற்கு கடற்பரப்பினூடாக இம்மாதம் 17ம் திகதி முதல் 20ம் திகதி வரை நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 1263 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளினை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

போதைப்பொருள் கடத்தல் வளையம் முடக்கம் - பாதுகாப்பு செயலாளர்

நாட்டில் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு போன்ற துயர சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க புலனாய்வுத்துறையை மறுசீரமைத்துள்ளோம் என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) நேற்று மாலை (ஏப்ரல், 20) தெரிவித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடற்படையினரால் 350 தலசீமியா நோய்க்கான சிகிச்சை கருவிகள் சுகாதார அமைச்சிடம் கையளிப்பு

இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமுதாய நல பணிகளின் ஒரு பகுதியாக தலசீமியா நோய்க்கான 350 சிகிச்சைக் கருவிகள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் சுகாதார அமைச்சிடம் கடற்படைத் தலைமையகத்தில் வைத்து நேற்று (ஏப்ரல், 21) கையளிக்கப்பட்டது.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத்தினரால் ரூ. 55.7 மில்லியன் பெறுமதியான கஞ்சா கைப்பற்றப்பட்டது

பூணேரி, பள்ளிக்குடா கடற்கரைக்கு அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 185.575 கிலோகிராம் கேரள கஞ்சா 54வது பிரவில் கடமைபுரியும் படைவீரர்களினால் கைப்பற்றப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாட்டின் குறைந்த வசதிகள் கொண்ட 08 பாடசாலைகள் இலங்கை கடற்படையின் சமூக சேவை திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படுகிறது

இலங்கை கடற்படையின் 70 ஆவது ஆண்டு நிறைவையொட்டி, நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட குறைந்த வசதிகள் கொண்ட பாடசாலைகளை 2021 ஆம் ஆண்டில் அபிவிருத்தி செய்து நாட்டின் உயிர்நாடியாக இருக்கும் குழந்தைகளின் கல்விக்கு மிகவும் உகந்த சூழலையாக உருவாக்கும் கடற்படை சமூக சேவை திட்டம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மேற்கு, கிழக்கு, வட மத்திய, வட மேற்கு, தென்கிழக்கு, தெற்கு மற்றும் வடக்கு ஆகிய கடற்படை கட்டளைகளில் 2021 ஏப்ரல் 19 ஆம் திகதி தொடங்கப்பட்டது. இந்த சமூக சேவை திட்டத்திற்கான நிதி பங்களிப்பு அனைத்து கடற்படை அதிகாரிகளும் மாலுமிகளும் தங்கள் மாத சம்பளத்தை தானாக முன்வந்து வழங்குகிறார்கள், மேலும் இந்த கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மனிதவளத்தையும் கடற்படை வழங்குகிறது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஐ.நா அமைதிகாக்கும் பணிகளுக்காக பயணமாகும் படைக் குழுவினர் வழியனுப்பி வைப்பு

ஐக்கிய நாடுகள்  அமைதிகாக்கும் பணிகளுக்காக மாலி நோக்கி பயணமாகும்  படைக் குழுவினர் வான நிலையத்தில் வைத்து இன்றைய தினம் (ஏப்ரல், 21) வழி அனுப்பி வைக்கப்பட்டனர். அமைதிகாக்கும் பணிகளுக்காக விஷேடமாக தொழில்முறை ரீதியாக பயிற்சிபெற்ற இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 243 படை வீரர்களே இவ்வாறு வாழ்த்தி வழி அனுப்பி வைக்கப்பட்டனர்.






செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

போர் வீரர்களுக்கு புதிய நம்பிக்கையளிக்கும் புத்தாண்டு

“சுபீட்சத்தின் நோக்கு” எனும் ஜனாதிபதியின் கொள்கை பிரகடனத்துக்கு அமைவாக தேசிய பாதுகாப்பை உறுதிசெய்யும் அதேசமயம், திறமையாக செயல்படுவதற்கும், அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாட்டில் எமது அதிகபட்ச பங்களிப்பை வழங்குவதற்கும் நாம் அனைவரும் உறுதிபூண வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார். தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சின் செயற்பாடுகளை சம்பிரதாய பூர்வமாக மீள ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.