பாதுகாப்பு செய்திகள்
இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின்
ஐந்தாவது வருடாந்த கல்வி அமர்வு
இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின் ஐந்தாவது வருடாந்த கல்வி அமர்வின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (பெப்ரவரி, 10) அத்திடிய ஈகிள்ஸ் லேக்சைட் மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.
கிளிநொச்சி ஆதரவற்ற குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு
கிளிநொச்சியில் உள்ள படையினர் பிராந்தியத்தில் உள்ள ஆதரவற்ற குடும்பங்களுக்கு அண்மையில் உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர். கிளிநொச்சியில் வசிக்கும் தகுதியுடைய 42 குடும்பங்களுக்கு வாரயிறுதியில் (பெப்ரவரி, 05) கண்ணன் தேவாலய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்ய தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் அதிமேதகு யூரி மேட்டேரி, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை இன்று (பெப்ரவரி, 09) சந்தித்தார்.
யாழில் பாதுகாப்பு படையினரால் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை
சுகாதார அதிகாரிகளின் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைய யாழ்ப்பாணத்தில் உள்ள பாதுகாப்பு படையினர், ஆகையால் நகரம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் டெங்கு ஒழிப்பு பிரச்சாரம் மற்றும் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் என்பவற்றை முன்னெடுத்தனர்.
கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகம் MATLAB மென்பொருளின் வளாக அளவிலான அனுமதிப்பத்திரத்தை செயல்படுத்துகிறது
ஜெனரல் சேர் ஜாேன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம், மாணவர்களின் கற்கைக்கு உதவுவதற்கும், உயர்நிலை ஆராய்ச்சித் திட்டங்களுக்கு மேம்பட்ட உருவகப்படுத்துதல்களை மேற்கொள்வதற்கும் உதவும் வகையில் MATLAB மென்பொருள் வளாகம், குறித்த மென்பொருளின் முழுமையான பயன்பாடுகளை பெற்றுக்கொள்வதற்கான உரிமத்தை தனதாக்கியுள்ளது.
மன்னாரில் கடற்படையினரால் ஐஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது
மன்னார், எருக்கலம்பிட்டி பிரதேசத்தில் கடற்படையினர் பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சுமார் 01 கிலோ மற்றும் 76 கிராம் ஐஸ் ரக போதை பொருளை கைப்பற்றினர்.
யாழ் போதனா வைத்தியசாலையில் படையினரால் இரத்த தானம்
யாழ் போதனா வைத்தியசாலையில் ஏற்பட்ட இரத்த இருப்பின் குறைவினையடுத்து விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க
யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 55 ஆவது படைப் பிரிவு படையினரால் இரத்த தானம் வழங்கப்பட்டது.
‘சவால்களை வெற்றி கொண்ட வளமான நாளையும் சுபீட்சமான தாய்நாடும்” என்ற தொனிப் பொருளில் 74 ஆவது சுதந்திர தினம் இன்று (பெப்ரவரி, 04) கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் கொண்டாடப்பட்டது.
‘சவால்களை வெற்றி கொண்ட வளமான நாளையும் சுபீட்சமான தாய்நாடும்” என்ற தொனிப் பொருளில் 74 ஆவது சுதந்திர தினம் இன்று (பெப்ரவரி, 04) கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் கொண்டாடப்பட்டது.
அங்கவீனமுற்ற படைவீரர்களுக்கு 10 மில்லியன் ரூபா பெறுமதியான மின்சார மோட்டார் சைக்கிள்கள் கையளிப்பு
74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முப்படையினரைச் சேர்ந்த அங்கவீனமுற்ற படை வீரர்களுக்கு 50 மின்சார மோட்டார் வண்டிகள் கையளிக்கப்பட்டன.
நைஜீரிய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
இலங்கைக்கான நைஜீரிய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கொமடோர் அந்தோணி விக்டர் குஜோ,பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை இன்று (பெப்ரவரி, o2) சந்தித்தார்.
சுதந்திர தின நிகழ்வுகளின் ஒத்திகையை பாதுகாப்பு செயலாளர் மேற்பார்வை
கொழும்பு, சுதந்திர சதுக்கத்தில் எதிர்வரும் 4ம் திகதி இடம்பெறவுள்ள சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்வுகளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளருமான ஜெனரல் கமல் குணரத்ன இன்று (பெப்ரவரி, 02) மேற்பார்வை செய்தார்.
துருக்கி பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
இலங்கைக்கான துருக்கி தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் கேன் கோக்சென் கொக்காயா, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை இன்று (பெப்ரவரி, 02) சந்தித்தார்.
இராணுவத்தினரால் அதிநவீன கண்ணி வெடி எதிர்ப்பு யுனிகோப் வாகனம் தயாரிப்பு
இலங்கை இராணுவம், டீசல் எரிபொருளில் இயங்கக்கூடிய ஆறு சிலிண்டர் எஞ்சின்கள் கொண்ட அதிநவீன கண்ணி வெடி எதிர்ப்பு யுனிகோப் வாகனத்தை யாரித்துள்ளது.









_suspects_P02.jpg)














