பாதுகாப்பு செய்திகள்
லெபனானில் ஐ.நா. அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபட இராணுவத்தின் பெண் வீராங்கனைகள் அடங்கலான பாதுகாப்புக்குழு நாட்டிலிருந்து பயணம்
லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைக்கு செல்லும் 13 வது பாதுகாப்பு குழுவின் பிரியாவிடை அணிவகுப்பு மரியாதை , ஞாயிற்றுக்கிழமை (ஜனகரி, 30) பனாகொடை இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இலங்கை இராணுவ மகளிர் படையணி பெண் சிப்பாய்கள், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய இராணுவ மரியாதை வழங்கினர்.
இந்திய குடியரசு தினத்தன்று மறைந்த இந்திய அமைதி காக்கும் படை வீரர்களுக்கு நினைவஞ்சலியுடன் மரியாதை
இலங்கை இராணுவ படைகளுடன் கைகோர்த்து விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரிட்டு இலங்கையில் உயிர் நீத்த இந்திய அமைதி காக்கும் படை போர்வீரர்களின் நினைவு நாளை யாழ்ப்பாணம் பலாலி இந்திய அமைதி காக்கும் படையின் நினைவுத்தூபியில் இந்தியாவின் 73 வது குடியரசு தினமான புதன்கிழமை (26) நினைவுகூறப்பட்டது.
அன்னதானம் வழங்கும் வைபவத்துடன் ‘ஜெய பிரித்’ பாராயண நிகழ்வு நிறைவு
நாடு, நாட்டு மக்கள், உயிர்த் தியாகம் செய்த படை வீரர்கள் மற்றும் அங்கவீனமுற்ற படை வீரர்களுக்கு ஆசிர்வாதம் வழங்குவதற்காகவும், தொற்றுநோய் தாக்கத்திலிருந்து நாட்டை விடுவிப்பதற்காகவும் மகா நாயக்க மற்றும் அனுநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினரனால் ‘ஜெய பிரித்’ பாராயணம் செய்யும் நிகழ்வு புதன்கிழமை (26) மாலை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானதுடன் இன்று (27) காலை மகா சங்கத்தினருக்கு அன்னதானம் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து நிறைவு பெற்றது.
சிறைச்சாலைககளில் இடம்பெறும் ஊழல் மற்றும் முறைகேடுகளை முறியடிக்க இலங்கை சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படை' அறிமுகம் - பாதுகாப்பு செயலாளர்
சிறைச்சாலைகளில் ஊழல் மற்றும் முறைகேடுகளை முறியடிப்பதற்கும், இவற்றுடன் தொடர்புடைய பிரச்சினைகளை மிகவும் வெளிப்படையான அணுகுமுறையில் கட்டுப்படுத்துவதற்கும் 'இலங்கை சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படை' அறிமுகப்படுத்தப்பட்டதாக பாதுகாப்புச் செயலாளரும்,
கைப்பற்றப்பட்ட சட்டவிரோத போதைப்பொருட்களை விரைவாக அழிக்க திட்டம் - பாதுகாப்பு செயலாளர்
கைப்பற்றப்படும் சட்டவிரோத போதைப் பொருட்களில் விசாரணைக்கான ஒரு தொகையை மாத்திரம் வைத்துவிட்டு ஏனையவைகளை மஜிஸ்திரேட் முன்னிலையில் உடனடியாகை அழிப்பது தொடர்பில் தற்போது நடைமுறையிலுள்ள சட்டத்தில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுவதனால் அவை மறுசீரமைக்கப்பட்டு வெகுவிரைவில் புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன இன்று (ஜனவரி,25) தெரிவித்தார்.
10 மில்லியன் ரூபா பெறுமதியான செயற்கை கால்களை அங்கவீனமுற்ற 167 படை வீரர்களுக்கு வழங்க ஏற்பாடு
ரணவிரு சேவா அதிகார சபை அங்கவீனமுற்ற 167 படைவீரர்களுக்கு 10 மில்லியன் ரூபா செலவில் செயற்கை கால்களை வழங்கும் முதற்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
காலி கடற்கரையினை தூய்மைப்படுத்தும் பணிகளில் கடற்படையினர் ஈடுபாடு
காலி கடற்கரை பிரதேசத்தை தூய்மைப்படுத்தும் பணிகள் அண்மையில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டது.
வண. கொலமுன்னே சுமனவன்ச தேரர் பட்டமளிப்பு விழாவில் பாதுகாப்புச் செயலாளர் பங்கேற்பு
பிலியந்தலை, கொலமுன்னே ஸ்ரீ பிம்பராம விஹாரையில் இன்று (ஜனவரி 23)இடம் பெற்ற சமய வைபவத்தின் போது வண. கொலமுன்னே சுமணவன்ச தேரருக்கு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, விஜினிபாதத்தை (பாரம்பரிய விசிறி ) வழங்கினார்.
மிஹிந்தலை அனுலாதேவி சைத்தியவிற்கு பாதுகாப்புச் செயலாளர் விஜயம்
வழிபாட்டுத் தலங்களை தரிசிக்கும் நோக்கில் அனுராதபுரத்திற்கு வருகை தந்த பாதுகாப்புச் செயலாளரும், கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் பாரம்பரியங்களை முகாமைத்துவம் செய்யும் ஜனாதிபதி செயலணியின் தலைவருமான ஜெனரல் கமல் குணரத்ன இன்று (ஜனவரி 23) மிஹிந்தலை மிஹிந்து மகா சேயவிற்கு விஜயம் செய்தார்.
கடற்படை தொண்டர் படையின் வருடாந்த முகாம் நிறைவு
வெலிசறையில் உள்ள கடற்படையின் லங்கா அணிவகுப்பு மைதானத்தில் வியாழக்கிழமையன்று (ஜனவரி, 20) இடம்பெற்ற கடற்படை தொண்டர் படையின் வருடாந்த முகாமினை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன பார்வையிட்டார்.
மறைந்த முன்னாள் விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் பி.எச்.மென்டிஸின் இறுதிச் சடங்கு முழு இராணுவ மரியாதையுடன் இடம்பெற்றது
செவ்வாய்க்கிழமை (ஜனவரி 18) காலமான இலங்கை விமானப்படையின் முன்னாள் தளபதி எயார் சீப் மார்ஷல் பி.எச்.மென்டிஸின் பூதவுடல் பூரண இராணுவ மரியாதையுடன் புதன்கிழமை (ஜனவரி, 19) நல்லடக்கம் செய்யப்பட்டது. தெஹிவளை - கல்கிசையில் உள்ள ‘நிசல செவன’ மயானத்தில் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றதாக விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பங்களாதேஷ் கடற்படை தளபதி பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு
பங்களாதேஷ் கடற்படை தளபதி அட்மிரல் எம் ஷஹீன் இக்பால், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை இன்று சந்தித்தார். இந்த சந்திப்பு ஸ்ரீ ஜெயவர்தனபுர, கோட்டேயில் அமைந்துள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் இன்று (ஜனவரி 19) இடம்பெற்றது.










.jpg)








