--> -->
சட்டவிரோத போதைப்பொருள் வலையமைப்புக்களை முடக்குவதற்காக இலங்கை அரசசு பாதுகாப்பு அமைச்சினூடாக தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.
170 கிலோ 866 கிராம் போதைப்பொருளை கொண்டு சென்ற வெளிநாட்டு கப்பல் ஒன்றினை இலங்கை கடற்படை கைப்பற்றியதுடன் அதனை இன்று காலை (செப்டம்பர், 18) கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வந்தது.
சப்ரகமுவ, மேல், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தனது விவசாயத் திட்டங்கள் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ள சிவில் பாதுகாப்புப்படை திணைக்களம் இன்று (செப்டம்பர், 13) அதன் 15 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.
பாதுகாப்பு அமைச்சும், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சும் மேற்கொண்ட திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலமாக கடந்த ஒன்றரை வருட காலப்பகுதிக்குள் ஹெரோயின் உட்பட பாரியளவிலான பல்வேறு போதைப் பொருள்களும், பெருமளவிலான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார்.
தொற்றுநோய் நிலைமைகள் தொடர்கின்ற போதிலும் தேசத்தினை நெருக்கடி நிலைக்குள்ளாக்காமல், தேசிய பாதுகாப்பை உறுதி செய்து, அபிவிருத்தி இலக்குகளுடன் கூடிய ஸ்திரதன்மை அடைய நாம் எப்போதும் பணியாற்ற வேண்டும் என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) இன்று (செப்டம்பர்,09) தெரிவித்தார்.
கொழும்பு துறைமுகத்திற்கு ஜனாதிபதியின் பிரதிநியாக வருகை தந்த பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), இலங்கையின் தென் பிராந்தியத்திற்கு அப்பால் உள்ள சர்வதேச கடற்பரப்பில் வைத்து சுமார் ரூ.3,100 மில்லியன் ரூபா பெறுமதியான 336 கிலோகிராம் ஹெராேயின் போதைப்பொருளை கொண்டு வந்த வெளிநாட்டு மீன்பிடி படகினை இன்றைய தினம் (செப், 04) கைப்பற்றிய இலங்கை கடற்படை, பொலிஸ் மற்றும் புலனாய்வு சேவைகளுக்கு ஜனாதிபதி பாராட்டுக்களை தெரிவித்ததாக குறிப்பிட்டார்.
இராணுவத்தின் ஏற்பாட்டில் முப்படையினர் ஒன்றினைந்து மேற்கொள்ளும் களமுனைப்போர் பயிற்சியான 'நீர்க்காக கூட்டுப்பயிற்சி XI - 2021 மின்னேரியாவில் நேற்று (செப், 03) ஆரம்பமானது,
இலங்கை விமானப் படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சுகாதார பணிகளில் ஒரு பகுதியாக விமானப்படையினரால் தயாரிக்கப்பட்ட மேலும் இரண்டு ஒக்ஸிஜன் தெரபி உபகரணங்கள் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை மற்றும் அங்கோடைதேசிய தொற்று நோய்களுக்கான நிறுவனம் ஆகியவற்றுக்கு நேற்று (ஆகஸ்ட், 31) கையளிக்கப்பட்டன.
பிரதான வைத்தியசாலைகளில் இரத்த மாதிரிகளுக்கு ஏற்பாட்டுள்ள தட்டுப்பாட்டினை பூர்த்தி செய்யும் வகையில் பனாகொட ஸ்ரீ போதிராஜாராமயாவில் நேற்று (ஆகஸ்ட் 31) இரத்த தானம் வழங்கும் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
கொழும்பில் உள்ள சர்வதேச விபஸ்ஸனா தியான நிலையம் கொவிட்-19 பாதிக்கப்பட்ட பெளத்த பிக்குகளின் சிகிச்சைக்காக முதல் இடைநிலை பராமரிப்பு மையம் இலங்கை இராணுவத்தினரால் நேற்றைய தினம் (ஓகஸ்ட், 30) ஸ்தாபிக்கப்பட்டது.
இலங்கை கடற்படையினரால் ஆழ் கடல்களில் நடத்தப்பட்ட விஷேட சோதனை நடவடிக்கையின் போது ஐந்து சந்தேக நபர்களுடன் பல நாள் மீன்பிடி படகில் இருந்து 290 கிலோ மற்றும் 200 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டு இன்று காலை (ஓகஸ்ட்,31) கரைக்கு கொண்டு வரப்பட்டது.
Tamil
திட்டமிடப்பட்டவாறு சந்தஹிருசேய தூபியின் நீர்மாண பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனவா என்பதை ஆராயும் நோக்கில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) அனுராதபுரத்திற்கு இன்று (ஓகஸ்ட் 29) விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இலங்கை விமானப் படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சுகாதார பணிகளில் ஒரு பகுதியாக, விமானப்படையினரால் தயாரிக்கப்பட்ட ஒக்ஸிஜன் தெரபி உபகரணங்கள் கல்கமுவ ரணவிரு உபஹார ஆதார வைத்தியசாலைக்கு நேற்று (28,ஓகஸ்ட்) கையளிக்கப்பட்டன.
இலங்கை பாதுகாப்பு படைகளுக்கு வழங்குவதற்காக சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 300,000 டோஸ் சினோபார்ம் தடுப்பூசியை இலங்கைக்கான சீன தூதகரத்தின் பாதுகாப்பு இணைப்பாளர் சிரேஷ்ட கேர்ணல் வான் டோங், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவிடம் (ஓய்வு) உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களுக்கமைய கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் 250 கட்டில்களுடன் மேலும் மூன்று புதிய வார்டுகள் இராணுவத்தினரால் ஸ்தாபிக்கப்பட்டு நேற்றையதினம் (ஆகஸ்ட் 26) சுகாதார அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.
சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பெங் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் இலங்கைக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவினால் (ஓய்வு) விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க இலங்கை பாதுகாப்பு படையினருக்காக சீன மக்கள் குடியரசின் தேசிய பாதுகாப்பு அமைச்சினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ள மூன்று இலட்சம் சினபார்ம் தடுப்பூசிகள் சனிக்கிழமை (28, ஓகஸ்ட்) இலங்கையை வந்தடையவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் சில நாட்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை இராணுவத்தின் நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டம் பயனாளிகளிமிருந்து அமோக வரவேற்பை பெற்றுக்கொண்டுள்ளது.
2021 பெரும்போக நெற்செய்கைக்காக தேவைப்படும் சுமார் 3,600 மெட்ரிக் தொன் சேதனப் பசளையை இராணுவத்தினர் உற்பத்தி செய்யவுள்ளனர்.