ஜனாதிபதி செய்தி
கம்போடிய அரச மாளிகையில் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு
பொருளாதார, வர்த்தக மற்றும் சமூக ரீதியாகவும் பௌத்த சமய புத்தெழுச்சிக்காகவும் அனைத்து நடவடிக்கைகளிலும் கம்போடியா இலங்கையுடன் பலமாக கைகோர்த்திருப்பதாக கம்போடிய மன்னர் Preah Bat Samdech Preah Boromneath Norodom Sihamoni தெரிவித்தார்.
ஜனாதிபதி கம்போடியா பயணம்
இலங்கைக்கும் கம்போடியாவுக்குமிடையில் இருந்துவரும் நீண்டகால உறவுகளை புதிய துறைகளுக்கு விரிவுபடுத்தி பரஸ்பர நன்மைகளை மேலும் அதிகரிக்கும் நோக்குடன் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் கம்போடியாவுக்கு நான்கு நாள் அரசமுறைப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
பயங்கரவாதத்தை தடுப்பதற்கான சட்டத்தை ஆக்குவதற்கு முன்வராதவர்கள் மரணதண்டனையை ஒழிக்கும் சட்டத்தை பாராளுமன்றத்திற்கு கொண்டுவர முயற்சிக்கின்றார்கள் – ஜனாதிபதி்
ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற துரதிஸ்டவசமான சம்பவத்தின் பின்னர் பயங்கரவாதத்தை முற்றாக துடைத்தெரியும் புதிய சட்டங்களை கொண்டுவர வேண்டுமென இன, மத பேதமின்றி சமூகத்தில் கருத்து நிலவிய போதும் மூன்று மாதங்கள் கடந்த பின்னரும் அந்த சட்டத்தை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்காத சிலர் மரணதண்டனையை ஒழிப்பதற்கான சட்டங்களை விரைவாக பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கு முயற்சிப்பதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.
சமாதானம், ஐக்கியம், சகவாழ்வுக்கான தேசிய மாநாடு ஜனாதிபதி தலைமையில்
ஏப்ரல் 21ஆம் திகதிய சம்பவங்களினால் சிதைந்த உள்ளங்களை மீண்டும் ஒன்றிணைப்பதற்கு சமய தலைவர்கள் தலைமைத்துவத்தை வழங்க வேண்டும் என்பதுடன், குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரல்களை ஒதுக்கி அரசியல்வாதிகளும் இதற்காக தேசத்தின் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.
ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து கவனம்
ஜப்பானுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கு இலங்கை அக்கறை கொண்டிருப்பதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.
மகாவலி தொடர்பான இரு நூல்கள் ஜனாதிபதி தலைமையில் வெளியீடு
ரஜரட்டை, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு களுகங்கை நீர்த்தேக்கத்தின் நீரை திறந்து விடுவதற்கான ஆயத்தங்கள் தயார் நிலையில் உள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு
"சத்விரு அபிமன்" நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு
தாய் நாட்டில் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்துவதற்காக தமது உயிர்களையும் அவயவங்களையும் தியாகம் செய்த முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைகளுக்கான பாரிய நலன்புரி திட்டமான 'சத்விரு அபிமன்' நிகழ்வு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (ஜூலை, 22) இடம்பெற உள்ளது.
உலக வங்கி இலங்கைக்கு வழங்கும் உதவிகளை மேலும் விரிவுபடுத்தியுள்ளது
மூன்று புதிய செயற்திட்டங்களின் கீழ் இலங்கைக்கு வழங்கும் உதவிகளை மேலும் அதிகரிப்பதற்காக உலக வங்கியின் தெற்காசிய வலய உப தலைவர் ஹார்ட்விங் சேபர் (Hartwig Schafer) தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான தொழில்சார் ஆலோசனைக் குழு நியமனம்
தேசிய பாதுகாப்பு தொடர்பான தொழில்சார் ஆலோசனை குழுவொன்றை அமைக்க ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கான நிவாரணம் வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலினால் செயலிழந்துள்ள சுற்றுலாத்துறை மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட துறைகளின் வர்த்தகர்களுக்கான நிவாரணமளிக்கும் நடவடிக்கையை முறையாகவும் வினைத்திறனாகவும் மேற்கொண்டு குறித்த வர்த்தக சமூகத்தினரை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகுமென ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.
“நாட்டுக்காக ஒன்றினைவோம்” மொனராகலை மாவட்ட செயற்திட்டத்தின் நான்காவது தினம் இன்றும் வெற்றிகரமாக இடம்பெற்றது
பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றை தீர்ப்பதற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஜனாதிபதி செயலகத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” தேசிய செயற்திட்டத்தின் ஐந்தாவது செயற்திட்டம் கடந்த முதலாம் திகதி மொனராகலை மாவட்டத்தை மையப்படுத்தி ஆரம்பமானது.
நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்காகவே நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டேன் – ஜனாதிபதி
லங்கன் விமான சேவையில் இடம்பெற்ற ஊழல், மோசடிகளை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை இன்று தம்மிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த காலத்தில் அங்கு இடம்பெற்ற ஊழல், மோசடிகள் மற்றும் முறைக்கேடுகள் பற்றிய சகல விடயங்களும் அதில் உள்ளடக்கப்பட்டிருப்பதுடன், விரைவில் அது பாராளுமன்றத்திலும் மக்களிடமும் வெளிப்படுத்தப்படும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
நாட்டினதும் எதிர்கால தலைமுறையினரினதும் நன்மைக்காகவே உயிர் அச்சுறுத்தலை கருத்திற்கொள்ளாது போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்திற்கு தலைமைத்துவம் வழங்குகின்றேன். – ஜனாதிபதி
நாட்டையும் மக்களையும் அழிவுக்குள்ளாக்கி வரும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்காக கடந்த நான்கு வருட காலமாக நாம் முன்னெடுத்த பாரிய நிகழ்ச்சித்திட்டத்திற்கு கடுகளவேனும் உதவாதவர்கள் இன்று போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக கடுமையாக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தன்னை குற்றவாளியாக நாட்டுக்கு காட்டுவதற்கு முயற்சிப்பதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.
தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இறுதி நாள் மாநாடு நாளை ஜனாதிபதி தலைமையில்
போதையிலிருந்து விடுதலைபெற்ற நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தை மேலும் பலப்படுத்தும் வகையில் கடந்த 23ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இறுதிநாள் இன்றாகும்.
அரச தலைவர் என்ற வகையில் நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் கௌரவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான பணிகளை முன்னெடுப்பேன் – ஜனாதிபதி
தேர்தல்களை இலக்காகக்கொண்டு நாட்டில் இனங்களுக்கிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் அரசியல்வாதிகள் வெளியிடும் இனவாத கருத்துக்களை வெளியிட்டாலும் அரச தலைவர் என்ற வகையில் அனைத்து பிரஜைகளினதும் மரியாதையையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
கடற்படை வீரர்களின் வெளியேறல் நிகழ்வில் ஜனாதிபதி அவர்கள் பங்கேற்பு
திருகோணமலையில் உள்ள கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியில் (NMA) நேற்று (ஜுன், 22) இடம்பெற்ற கடற்படை வீரர்களின் வெளியேறல் நிகழ்வில் முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
கடற்படையின் 4வது அதிவிரைவு தாக்குதல் படகிற்கு ஜனாதிபதியினால் அதிகாரமளிப்பு
இலங்கை கடற்படையின் 4வது அதிவிரைவு தாக்குதல் படகிற்கு, முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் 4வது அதிவிரைவு ப்லோடில்லா என அதிகாரமளிக்கப்பட்டது. குறித்த படகிற்கு அதிகாரமளிக்கும் நிகழ்வு நேற்று மாலை (ஜுன், 22) திருகோணமலை கடற்படை தளத்தில் இடம்பெற்றது.
ஐ.நா சமாதான படையணிகளின் பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு
ஐ.நா அமைதிகாக்கும் பணிக்காக பொலிஸ் மற்றும் முப்படை அதிகாரிகளை விடுவிக்கின்றபோது மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் தடை நீக்க நடவடிக்கைகள் தாமதமடைவதன் காரணமாக ஏற்படும் பிரச்சினைகள் பற்றி ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் கவனம் செலுத்தியுள்ளார்.
ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பகத்தன்மையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் பற்றிய மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி தஜிகிஸ்தான் பயணம்
ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பகத்தன்மையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் பற்றிய மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி தஜிகிஸ்தான் பயணம்ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பகத்தன்மையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள்...
ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
2019 ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் சில இடங்களில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிவதற்காக ஜனாதிபதி அவர்களினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய விசேட விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கை இன்று (10) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
ஜனாதிபதியுடன் இந்திய பிரதமர் சந்திப்பு
பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையின் அடிப்படையில் இருநாட்டு தொடர்புகளை வலுவடையச் செய்வதற்கு அரச தலைவர்கள் இணக்கம்
இலங்கை கடற்படையின் புதிய கப்பலுக்கு ஜனாதிபதியால் அதிகாரமளிப்பு
அமெரிக்க அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட இலங்கை கடற்படையின் மிக நீளமான ஆழ்கடல் ரோந்து கப்பலான P 626 கப்பலுக்கு முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் எஸ் எல் என் எஸ் 'கஜபாகு' என அதிகாரமளித்து வைக்கப்பட்டது.
சிவில் பாதுகாப்பு படை திணைக்கள தலைமையக கட்டிடம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு
மொறட்டுவ, கட்டுபெத்த பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிவில் பாதுகாப்பு படை திணைக்கள தலைமையக கட்டிடம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் கடந்த செவ்வாய்க்கிழமையன்று திறந்து வைக்கப்பட்டது.