மாநில பாதுகாப்பு அமைச்சர்
மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மீதான பயங்கரவாத தாக்குதலை கண்டிக்கிறது
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மீதான பயங்கரவாத தாக்குதலுக்கு இலங்கை கண்டனம்
புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
அனைத்து இலங்கையர்களுக்கும் அமைதியான, மகிழ்ச்சியான, ஆரோக்கியமான மற்றும் வளமானதாக சிங்கள, தமிழ் புத்தாண்டு அமையட்டும் என பாதுகாப்பு அமைச்சின் சார்பில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் மற்றும் பொலிசாரின் பிரச்சினைகளை தீர்க்க ' பொலிஸ் குறை தீர்த்தல் தினம்
பொலிஸார் மீதான பொதுமக்களின் முறைப்பாடுகளுக்கும், பொலிஸார் மத்தியில் நிலுவையில் உள்ள நிர்வாகப் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகளுக்கு தீர்வு காணும் வகையில் ‘பொலிஸ் குறை தீர்த்தல் தினம்’ ஜனவரி 29ம் திகதி பத்தரமுல்லவில் உள்ள சுஹுரூபாயவில் நடைபெறவுள்ளது.
வெளிநாட்டுத் தலையீடுகளை அரசாங்கம் அனுமதிக்காது - பிரதமர் தெரிவிப்பு
நாட்டின் உள் விவகாரங்களில் சில வெளிநாட்டு அமைப்புக்கள் தலையிட முயற்சிப்பதாகவும், இதேவேளை இலங்கையின் தேசிய இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பு என்பவற்றை அரசாங்கம் பாதுகாக்கும். என்பதாகவும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு ஊடகப் பிரிவுகளை அரசாங்கம் சீரமைப்பு
இராணுவம் தொடர்பான செய்திகளை மேலும் திறம்பட பரவலாக்கம் செய்யும் வகையில் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள ஊடக பிரிவுகளை அரசாங்கம் சீரமைக்கவுள்ளது.
புதிய இராணுவத் தலைமையகம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு
ஸ்ரீ ஜயவர்த்தனபுர, பத்தரமுல்லை பகுதியில் அதிநவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய இலங்கை இராணுவத் தலைமையகத்தின் அங்குரார்ப்பன மற்றும் உத்தியோகபூர்வ கையளிக்கும் நிகழ்வு அதிமேதகு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று காலை (நவம்பர், 8) இடம்பெற்றது.
ஆப்கானிஸ்தான் தூதுவர் இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவர், அதிமேதகு திரு. எம் அஷ்ரப் ஹைடரி அவர்கள் வெகுஜன ஊடக அமைச்சரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (நவம்பர், 05) சந்தித்துள்ளார்.
“கோல் டயலொக் -2019” சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாடு கொழும்பில் ஆரம்பம்
இலங்கை கடற்படையின் பத்தாவது சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாடான “கோல் டயலொக் - 2019” இன்று (ஒக்டோபர், 21) ஆரம்பமானது.
சீன இணையவெளி நிர்வாக பிரதி அமைச்சர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
சீன இணையவெளி நிர்வாக பிரதி அமைச்சர் கௌரவ யாங் சியாஓவெய் அவர்களின் தலைமயிலான அதிதிகள் , பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களை நேற்று (ஒக்டோபர். 09) சந்தித்தனர்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் புதிய ‘மொபைல் செயலி’ வெளியீட்டு விழாவில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு
வெகுஜன ஊடக அமைச்சரும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் நேற்று மாலை (செப்டம்பர், 05) இடம்பெற்ற இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் புதிய ‘மொபைல் செயலி’ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.
ஆட்கடத்தல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான அவுஸ்திரேலிய தூதுக்குழு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோருடன் சந்திப்பு
இறையாண்மை எல்லைகள் நடவடிக்கை மற்றும் அவுஸ்திரேலிய கூட்டுப் படை தளபதி, மேஜர் ஜெனரல் கிரேய்க் புரினி அவர்கள் தலைமையிலான அவுஸ்திரேலிய அரச தூதுக்குழுவினர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களை நேற்று (செப்டெம்பர், 03) சந்தித்தனர்.
புதிய இராணுவத்தளபதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
புதிய இராணுவத்தளபதி, லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (செப்டெம்பர், 03) சந்தித்தார்.
ஜெனரல் ஹெமில்டன் வனசிங்க எனும் பெயரில் புதியவீதி திறந்து வைப்பு
ஓய்வு பெற்ற இராணுவ தளபதியானஜெனரல் ஹமில்டன் வன சிங்க அவர்கள் வசித்துவந்த மல்வானை மற்றும் தொம்பே ஆகிய பிரதேசங்களுக்கு இடையிலான வீதி ‘’ஜெனரல் ஹமில்டன் வன சிங்க மாவத்தை ‘’ என பெயரிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்ற ஒப்பந்தத்தில் இலங்கை மற்றும் ஜப்பான் கைச்சாத்து
பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன மற்றும் ஜப்பான் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் திரு. கென்ஜி ஹரடா ஆகியோர் இன்று (ஜூலை, 26) கைச்சாத்திட்டுள்ளனர்.
கரையோர பாதுகாப்பு தலைமைகளின் 15 வது செயற்குழு கூட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு
இலங்கை கரையோர பாதுகாப்பு படையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கரையோர பாதுகாப்பு தலைமைகளின் 15 வது செயற்குழு கூட்டம் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இன்று (ஜூலை, 09) இடம்பெற்றது. இன்று காலை இடம்பெற்ற இக்கூட்டத்தொடரின் அங்குரார்ப்பண நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தேசிய மாணவ சிப்பாய்கள் படையணியின் வருடாந்த விளையாட்டுப்போட்டி நிகழ்வில் கலந்து சிறப்பிப்பு
தேசிய மாணவ சிப்பாய்கள் படையணியின் மாகாணங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டுப்போட்டி நிகழ்வு கொழும்பு சுகததாச விளையாட்டு அரங்கில் நேற்று (ஜூலை, 06) ஆரம்பமானது.
இலங்கை விமானப்படையின் புதிய தளபதி அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
இலங்கை விமானப்படையின் 17வது தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (ஜூன், 12) சந்தித்தார்.
இலங்கை கடற்படையின் புதிய கப்பலுக்கு ஜனாதிபதியால் அதிகாரமளிப்பு
அமெரிக்க அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட இலங்கை கடற்படையின் மிக நீளமான ஆழ்கடல் ரோந்து கப்பலான P 626 கப்பலுக்கு முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் எஸ் எல் என் எஸ் 'கஜபாகு' என அதிகாரமளித்து வைக்கப்பட்டது.
சிவில் பாதுகாப்பு படை திணைக்கள தலைமையக கட்டிடம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு
மொறட்டுவ, கட்டுபெத்த பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிவில் பாதுகாப்பு படை திணைக்கள தலைமையக கட்டிடம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் கடந்த செவ்வாய்க்கிழமையன்று திறந்து வைக்கப்பட்டது.
அமேரிக்க தூதுக்குழுவினர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், அரசியல் இராணுவ விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் திரு. ஆர். கிளார்க் கூப்பர் மற்றும் இலங்கைக்கான அமேரிக்க தூதுவர் அதிமேதகு திருமதி.
ஜனாதிபதி ஊடக விருது விழாவில் ஜனாதிபதி அவர்கள் கலந்து சிறப்பிப்பு
ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் கொழும்பு பண்டார நாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (10) இடம்பெற்ற ஜனாதிபதி ஊடக விருது விழாவின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வில் வெகுசன ஊடக மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன அவர்களும் கலந்து கொண்டார்.
பிரித்தானிய கடற்படைக் கப்பலைப் பார்வையிட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விஜயம்
பிரித்தானிய கடற்படைக்குச் சொந்தமான எச்எம்எஸ் "மொன்ட்ரோஸ்" கப்பலை பார்வையிடுவதற்காக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள் கொழும்பு துறைமுகத்திற்கு இன்று (ஏப்ரல்,03)விஜயம் செய்தார்.
ரஷ்ய தூதுவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் அதிமேதகு யுரி மடேரி அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (மார்ச், 28)சந்தித்தார்.
அபுதாபி உலக விசேட ஒலிம்பிக் போட்டியின் வெற்றியாளர்கள் கெளரவிப்பு
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்ற மாற்றுத் திறன் கொண்ட விளையாட்டு வீரர்களுக்கான விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக கலந்து கொண்டு பதக்கங்களை பெற்றுக் கொண்ட வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த திங்களன்று இடம்பெற்றது.