பாதுகாப்பு செய்திகள்
மற்றுமொரு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மஹர பிரதேசத்தில் கடற்படையினரால் ஸ்தாபிப்பு
இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக நலத் திட்டங்களின் ஒரு பகுதியாக சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் மஹர, பக்மீகஹவத்தை பிரதேசத்தில் ஸ்தாபிக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் நேற்றைய தினம் (ஒக்டோபர் 10) பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
சந்தஹிருசேய புனித வஸ்த்துக்கள் செவ்வாயன்று கடம்பே ஸ்ரீ ரஜபவராமயவை சென்றடையும்
சந்தஹிருசேய தூபியின் சூடாமாணிக்கம் மற்றும் கோபுர கலசத்தை ஏந்திய வாகன பவனி நாளை (ஒக்டோபர், 12) கடம்பே ஸ்ரீ ரஜபவராமயவை சென்றடையவுள்ளது.
72 வது ஆண்டு நிறைவு விழாவின் நிறைவு விழாவில் பங்கேற்பதற்கான அதிமேதகு ஜனதிபதியின் வருகையோடு “கஜபா இல்லம்” புதிய வரலாற்றை பதிவு செய்கிறது
இலங்கை இராணுவத்தின் 72 வது ஆண்டு நிறைவு தின நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவிருந்த சில காலங்களுக்கு முன்னர் இலங்கை இராணுவத்தின் கஜபா படையணியின் அதிகாரியாக சேவையாற்றிய அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு வரவேற்பளிப்பதற்காக (ஒக்டோபர் 10) சாலியபுரவிலுள்ள “கஜபா இல்லம்” விழாக்கோலம் பூண்டிருந்ததோடு இராணுவ கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இராணுவ தினத்தை முன்னிட்டு 567 அதிகாரிகள் மற்றும் 10368 படைவீரர்களுக்கு தர உயர்வு
இலங்கை இராணுவத்தின் 72 வது ஆண்டு நிறைவு தினத்தை (ஒக்டோபர்,10) முன்னிட்டு 567 இராணுவ அதிகாரிகள் மற்றும் 10369 படைவீரர்கள் தரமுயர்த்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் பரிந்துரைக்கு அமைவாக அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த தரமுயர்வு வழங்கப்பட்டுள்ளது.
கிராமப்புற மக்களின் நலனுக்காக கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட 874வது குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக நலத் திட்டங்களின் ஒரு பகுதியாக சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் கருவலகஸ்வெவ, ரஜவிகம பிரதேசத்தில் ஸ்தாபிக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் நேற்றைய தினம் (ஒக்டோபர் 09) பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
சந்தஹிருசேய தூபி நிர்மாணப்பணிகள் ஜனாதிபதியினால் மீளாய்வு
அனுராதபுரத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் சந்தஹிருசேய தூபியின் நிர்மாணப்பணிகள் மற்றும் திட்டமிடப்பட்டுள்ள வேலைத் திட்டங்கள் என்பனவற்றை மீளாய்வு செய்யும் நோக்கில் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்றைய தினம் (ஒக்டோபர், 09) நகருக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இராணுவத்தினரால் மேலும் பல நீர்ப்பாசன குளங்கள் புனரமைப்பு
அரசாங்கத்தின் "வாரி செளபாக்யா" திட்டத்தின் கீழ் இலங்கை இராணுவத்தினரால் மகாவலி "எல்" வலயத்தில் காணப்படும் நீர்ப்பாசன குளங்களை புனரமைப்பு செய்யும் பணிகள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டன.
கொவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க விமானப்படையினரால் மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைப்பு
இலங்கை விமானப்படையினரால் தயாரிக்கப்பட்ட மேலும் இரண்டு ஒக்ஸிஜன் தெரபி உபகரணங்கள் அரச வைத்தியசாலைளில் பயன்படுத்துவதற்காக சுகாதார பிரிவினரிடம் நேற்று (ஒக்டோபர், 06) கையளிக்கப்பட்டதாக விமானப் படை தெரிவித்துள்ளது.
இந்திய இராணுவத்தின் மிகப் பெரிய விளையாட்டு குழு இலங்கை வருகை
இந்திய இராணுவம் மற்றும் இலங்கை இராணுவம் ஆகிய இரு தரப்பினர் மத்தியிலும் விளையாட்டு ஆர்வம் , இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு “இராணுவ விளையாட்டு பரிமாற்றம்” திட்டத்தின் கீழ் அடுத்த வாரம் இலங்கைக்கு வரவிருக்கும் 61 பேர் அடங்கிய இந்திய இராணுவ குழாம் நட்பு ஹாக்கி, கூடைப்பந்து, கைப்பந்து மற்றும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்தல்
2022 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களைபுதுப்பிப்பதற்கான திகதிகளை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
யாழ் குடாநாட்டில் கடற்படையினரால் கண்டல் தாவரங்கள் நடுகை
யாழ் தீபகற்பத்தில் உள்ள சதுப்புநிலத்தை பாதுகாத்தல் மற்றும் கடலோர அரிப்பை தடுக்கும் நோக்கில் இலங்கை கடற்படையினரால் அண்மமையல கிலாலி சதுப்பு நிலப்பகுதியில் கண்டல் தாவர கன்றுள் நடப்பட்டது.
இலங்கை மற்றும் இந்திய இராணுவங்களுக்கிடையிலான 'மித்ர சக்தி' கூட்டுப்பயிற்சி
எட்டாவது முறையாக இடம்பெறவுள்ள 'மித்ர சக்தி' கூட்டுப்பயிற்சியில் இந்திய இராணுவத்தின் சார்பில் பங்கேற்கவுள்ள 120 இராணுவ வீரர்கள் அண்மையில் மத்தளை சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். இலங்கை மற்றும் இந்திய இராணுவங்களுக்கிடையிலான வருடாந்த கூட்டுப்பயிற்சி இம்மாதம் 03ம் திகதி முதல் 17ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
வழிபாடுகளுக்காக சந்தஹிருசேய புனித வஸ்த்துக்களை ஏந்திய வாகன பவனி
சந்தஹிருசேய தூபியின் சூடாமாணிக்கம் மற்றும் கோபுர கலசத்தை ஏந்திய வாகன பவனி நாளை (ஒக்டோபர், 05) கதிர்காமம் பிரதேசத்தில் அமைந்துள்ள புராதன கிரி வெஹெரவை சென்றடையவுள்ளது.
அரச புலனாய்வு சேவை தனது 80 வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது
அரச புலனாய்வு சேவை தனது 80வது ஆண்டு நிறைவு விழாவை ஒக்டோபர் மாதம் 01ம் திகதியன்று மிக எளிமையான முறையில் கொண்டாடியது.
கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகம் அதன் கல்விதுறைகளை விஸ்தரிக்கிறது
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகம், பாகிஸ்தானின் காம்சாட்ஸ் பல்கலைக்கழகத்துடனான புரிந்துணர்வு ஆவணத்தில் அண்மையில் கையெழுத்திட்டது.





















