பாதுகாப்பு செய்திகள்
மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களை இராணுவத்தினர் மீட்பு
மாவனெல்லை, தெவனகல பகுதியில் தொடர்ச்சியான மழை மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
களனி கங்கை கரையோரப் பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை
நாட்டில் தொடர்ச்சியாக கிடைக்கப் பெற்று வரும் மழைவீழ்ச்சி காரணமாக களனி கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதுடன் அடுத்த 6 முதல் 16 மணி நேரத்திற்குள் ஹன்வெல்ல நீர்த் தேக்கத்தின் நீர்மட்டம் 9.0 மீட்டர் வரையும் நகலகம் வீதி தே நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 6.60 அடி வரையும் அதிகரிக்கும் சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிஞ்சாக்கேணிஆயுர்வேத வைத்தியசாலை இடைநிலை பராமரிப்பு நிலையமாக இராணுவத்தினரால் மாற்றியமைப்பு
திருகோணமலை குறிஞ்சாக்கேணி ஆயுர்வேத வைத்தியசாலை கொவிட் - 19 நோயாளர்களை பராமரிக்கும் இடைநிலை பராமரிப்பு நிலையமாக இராணுவத்தினராலும் அன்மையில் மாற்றி அமைக்கப்பட்டது.
முழங்காவில் மற்றும் நாச்சிக்குடா நகரங்கள் இராணுவத்தினரால் தொற்று நீக்கம்
நாட்டில் கொவிட்-19 பரவல் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் கூடும் இடங்களை தொற்று நீக்கும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கமைய முழங்காவில் பொலிஸ், பொது சுகாதார பிரிசோதகர்கள் மற்றும் பிரதேச சபை இராணுவத்தினருடன் இணைந்து முழங்காவில் மற்றும் நாச்சிக்குடா நகரங்களை தொற்று நீக்கம் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.
மழையுடன் கூடிய காலநிலை தொடரும் சாத்தியம்
நாட்டின் தென்மேற்கு பகுதியில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை தொடரும் சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிலாபத்தில் உலர்ந்த மஞ்சள் மற்றும் வெங்காயம் விதைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
சிலாபம் வட்டக்கல்லிய பிரதேசத்தில் நேற்றைய தினம் 362.95 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மற்றும் 571.4 கிலோ கிராம் வெங்காய விதை என்பன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
யாழில் தடுப்பு மருந்து ஏற்றல் நிகழ்வுக்கு இராணுவம் உதவி
யாழ்குடாநாட்டில் 36 நிலையங்களில் முன்னெடுக்கப்பட்ட கொவிட் - 19 தடுப்பு மருந்து ஏற்றல் நிகழ்விற்கு யாழ் பாதுகாப்பு படை தலைமையக இராணுவ வீரர்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.
கடற்படை மற்றும் தேசிய நீர்வாழ் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்குமான முகவர் நிலையம் சுற்றுச்சூழல் தொடர்பாக ஆராய்வு
இலங்கை கடற்படையின் நீரியல் ஆய்வு சேவையகத்தினால் இயக்கப்பட்ட தேசிய நீர்வாழ் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்குமான முகவர் நிலையத்தின் ஆய்வுக் கப்பல் மூலம் அண்மையில் தீ விபத்துக்குள்ளான கப்பலின் கடல் பகுதியில் இருந்து நீர் மற்றும் வண்டல் மாதிரிகளை சேகரித்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.
ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் இன்று (ஜூன் 3) ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.