--> -->

பாதுகாப்பு செய்திகள்

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 708 கடற்படை வீரர்கள் குணமடைந்து வீடுதிரும்பினர்

நாட்டில் இதுவரைக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த  கடற்படை வீரர்கள் சுமார் 708  பேர் வைத்தியசாலைகளில் இருந்து  குணமடைந்து வீடுதிரும்பியுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய நடவடிக்கைகள் நிலையம் இன்று (ஜூன் 15) தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 222 பேர் இன்று வீடு திரும்பினர்

முப்படையினரால் நடாத்தி செல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் மூன்று வார காலம் தமது தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த 222  பேர் இன்று (ஜூன், 15) தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சொய்சாபுர துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி கைது

சொய்சாபுர துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு பயன்படுத்திய வாகனத்தின் சாரதி என் நம்பப்படும் சந்தேகநபர் புத்தளையில் வைத்து முச்சக்கரவண்டியுடன் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளார்.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

130 இலங்கையர்கள் பாகிஸ்தானிலிருந்து நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாகிஸ்தானில் சிக்கித்தவித்த இலங்கையர்கள்   130 பேர் கொண்ட குழுவினர் இன்று அதிகாலை (ஜூன் 15) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமானநிலைய பொறுப்பு முகாமையாளர் இரேஷா ஜயசூரிய தெரிவித்தார்.

 



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவம் மற்றும் விமானப்படையினரால் காட்டுத்தீ கட்டுப்பாட்டுக்குள்

பண்டாரவெல டோவா மகாவங்குவயில் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயினை  இலங்கை இராணுவம் மற்றும் விமானப்படை வீரர்கள் இணைத்து  இன்று (ஜூன் 14)  கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

77 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவுசெய்துள்ளனர்

இராணுவத்தினாரால் நடாத்தி செல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் மூன்று வாரம் தமது தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த 77 பேர் இன்று (ஜூன் 14) தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொழும்பு தேசிய வைத்தியசாலை கொள்ளையை முறியடித்த பொலிஸ் கான்ஸ்டபிள் விபத்தில் பலி

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்த அரச புலனாய்வு பிரிவில் சேவையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் சித்தும் அழகப்பெரும விபத்தில் உயிரிழந்துள்ளார்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஊரடங்கு சட்ட நேரங்களில் மாற்றம்

நாளை, ஜுன் 14 ஞாயிற்றுக் கிழமை முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் நல்லிரவு 12.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சட்டவிரோதமான முறையில் வாகனங்களை பறிமுதல் செய்ய இடமில்லை - ஜனாதிபதி

கடன் தவணைகளை செலுத்தத் தவறும் நபர்களின் வாகனங்களை சட்டவிரோதமான முறையில் பறிமுதல் செய்யவதற்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மொத்தமாக 682 கடற்படை வீரர்கள் குணமடைந்து வீடுதிரும்பினர்

இதுவரைக்கும் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த  கடற்படை வீரர்கள் மொத்தமாக 682  பேர் வைத்தியசாலையில் இருந்து  குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மூவர் மாத்திரமே பதிவு

கடந்த 48 மணித்தியாலங்களுக்குள் 11 நோயாளர்கள் பதிவாகியதுடன், அவற்றில் கொவிட் 19 கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மூவர் மாத்திரமே நேற்று (12) அடையாளம்காணப்பட்டனர். இப்பதிவானது நாட்டில் கொரோனா தொற்றாலர்கள் குறைவடைந்து செல்வதை இப் புள்ளிவிபரங்கள் காண்பிக்கின்றன.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 165 பேர் இன்று வீடு திரும்பினர்

இராணுவத்தினாரால் நடாத்தி செல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த 165 பேர் இன்று (ஜூன் 13) தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர்.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஜனாதிபதி அலுவலகத்திற்கு ‘ஒம்புட்ஸ்மன்’ குறைகேள் அதிகாரியொருவர் நியமிப்பு

ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  திரு எஸ்.எம். விக்ரமசிங்க ஜனாதிபதி அலுவலகத்திற்கு ஒம்புட்ஸ்மன் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஹேய்லீஸ் நிறுவனத்தினால் இராணுவத்திற்கு துணிகள் அன்பளிப்பு

வரையறுக்கப்பட்ட ஹேய்லீஸ் குழுமத்தினால் நிருவகிக்கப்படும் தனியாருக்கு சொந்தமான முன்னணி ஹேய்லீஸ் ஆடை உற்பத்தி நிறுவனம் பாதுகாப்பு அமைச்சிடம் ஒரு தொகை துணி வகைகளை அன்பளிப்பு செய்துள்ளது.

 



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடற்படையினரால் சட்டவிரோத சந்தனக்கடத்தல் முறியடிப்பு

இலங்கை கடற்படையினர்  ஹம்பாந்தோட்டை பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட விஷேட தேடுதல் நடவடிக்கைகளின்போது ஒரு தொகை   சந்தன மரக்கட்டைகளை  சட்டவிரோதமான முறையில் கடத்திச்செல்லும்போது நேற்று (ஜூன் 11) கைப்பற்றியுள்ளனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

223இலங்கையர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து நாடுதிரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் சிக்கித்தவித்த இலங்கையர்களில் குழந்தை உட்பட  223 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை (ஜூன் 11) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைதனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சொய்சாபுர துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தபடட் ட டீ 56 ரக துப்பாக்கி மீட்பு

மேல்மாகாண குற்றப்புலனாய்வு பிரிவினரால் சொய்சாபுரம் கல்கிஸ்ஸை துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் மலபே பகுதியில் வைத்து நேற்று (ஜூன், 11) கைது செய்துள்ளனர்.  


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஆர்பாட்டக்காரர்களை கலைக்க நீதிமன்ற உத்தரவு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் பொலிஸார் செயல்பட்டனர் - பாதுகாப்பு செயலாளர்

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்ட கண்டிப்பான தனிமைப்படுதல் சட்டவிதிகளுக்கு அமைவாகவும் நீதிமன்ற உத்தரவின் பேரிலுமே முன்னணி சோசலிஸ கட்சியைச் சேர்ந்த ஆர்பாட்டக்காரர்களை கலைக்க போலீசார் நடவடிக்கை எடுத்ததாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.