--> -->

பாதுகாப்பு செய்திகள்

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஐஸ் போதைப்பொருளுடன் கலால் திணைக்கள அதிகாரி உட்பட எட்டுப்பேர் கைது

200 கிராம் ஐஸ் ரக போதைப்பொருளுள் வைத்திருந்த நன்கு பெண்கள் மற்றும் கலால் திணைக்கள அதிகாரி ஒருவர் உட்பட எட்டுப்பேரை பொலிஸார் இன்று (ஜூலை 22) புத்தளப் பகுதியில் கைது செய்துள்ளனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதாள உலக குற்றவாளிகளை அழைத்துவர பொலிஸார் சர்வதேச பொலிசாரின் உதவியை எதிர்பார்ப்பு

கைதுசெய்வதில் இருந்து தப்பிக்கும் வகையில் வெளிநாடுகளில் அடைக்கலம் கோரியுள்ள  பதின்மூன்று பாதாள உலக குற்றவாளிகளை நாட்டுக்கு  அழைத்து வருவதற்கு இலங்கை பொலிஸ் திணைக்களம் சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பை கோரியுள்ளனர். 



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மீனவ சமூகம் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புக்களில் காற்றின் வேகமானது மணிக்கு 40 - 50 கிலோ மீட்டர் வரை அதிகரிக்க கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையின்போது 1,630 சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது

பொலிசாரினால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 1,630 சந்தேகநபர்கள் இன்று (21) கைது செய்யப்பட்டுள்ளனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வடக்கு கடற்படை கட்டளையகத்தினால் மரமுந்திரிகை நடும் திட்டம்

இலங்கை கடற்படையினர் இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்துடன் இணைந்து காங்கேசன்துறை துறைமுக வளாகத்தில் மரமுந்திரிகை நடும் திட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். இதன்பிரகாரம் வடக்கு கடற்படை கட்டளையக்த்தினால் முதல் கட்டமாக 100 மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளன.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வலஸ்முள்ள பகுதியில் ஆயுதங்கள் உட்பட இராணுவ சீருடைகள் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் மீட்பு

வலஸ்முள்ள பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் ஒரு தொகை இராணுவ சீருடைகள், ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கி ரவைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இலங்கை கடற்படை வீரர்கள் அனைவரும் பூரண குணமடைவு

வெலிசர கடற்படை முகாமில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த கடற்படை வீரர்கள் மூவரும் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான அனைத்து கடற்படை வீரர்களும் குணமடைந்துள்ளதாகவும் இதற்கமைய கடற்படைக்குள் காணப்பட்ட வைரஸ் தொற்று முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இலங்கை கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கட்டுநாயக்க மற்றும் இரத்மலானை விமான நிலையங்களில் பயணப்பொதிகளை பரீட்சிக்க நவீன சோதனை கருவிகள்

பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையம் மற்றும் இரத்மலானை விமான நிலையம் ஆகியவற்றில் பயணப்பொதிகளை பரீட்சிக்கும் வழிமுறைகள், நவீன தொழிநுட்பத்திற்கமைய மேம்படுத்தப்படவுள்ளதாக இலங்கை சிவில் விமானப்போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதாள உலக குற்றச் செயல்களுக்கெதிரான பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்கின்றன; கடந்த 48 மணித்தியாலங்களில் நால்வர் கைது

கடந்த 48 மணித்தியாலங்களில் குற்றத்தடுப்பு பொலிஸார் மற்றும் போதைபொருள் ஒழிப்பு பிரிவினர் இணைந்து நாடு தழுவிய சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இதன்போது பாரியளவிளான குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்த நான்கு பிரதான சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஆயுத பயிற்சி நடவடிக்கைகளுக்காக ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான மத்திய நிலையத்தினால் 'ப்ளூ கன்' தயாரிப்பு

மற்றுமொரு வெற்றிகரமான ஆராய்ச்சித் திட்டத்தை நிறைவு செய்துள்ள பாதுகாப்பு அமைச்சின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான மத்திய நிலையம் அண்மையில் இலங்கை இராணுவத்தின் விசேட படையணிக்காக  'ப்ளூ கன்' உற்பத்தி முறைமையை அறிமுகப்படுத்தியுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மழையுடன் கூடிய வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு

நாட்டின் வளிமண்டலத்தில் நிலவும் தாழமுக்கம் காரணமாக மேற்கு, சபரகமுவ, மத்திய, தெற்கு
மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை அடுத்த 24 மணி நேரத்திற்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக  தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் கேகாலை ஆகிய   ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையினை  விடுத்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

‘சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் புலமைச் சொத்துக்கள் விசாரணை பிரிவு’ விரைவில் அமைக்கும் பொலிஸ்

குற்றச்செயல்களில் ஈடுபடுவோரினால் சட்டவிரோதமாக பெறப்பட்ட சொத்துக்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு ‘சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் புலமைச் சொத்துக்கள் விசாரணை பிரிவு’ எனும் பெயரரில் விஷேட பிரிவொன்று, கொழும்பு 1, சத்தம் வீதியில் அமைந்திருக்கும் சென்றல் பொயின்ட் எனும் இடத்தில் வெகு விரைவில் நிறுவப்படவுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிசாரினால் கைது

பாரிய போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 34 வயதான சந்தேகநபரை 1 கிராம் மற்றும் 170 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பேலியகொடை பொலிஸார் கைது செய்தனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 3 கடற்படை வீரர்களே வைத்தியசாலையில்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெரும்பாலான கடற்படை வீரர்கள் சிகிச்சையின் பின் வெளியேறியுள்ளனர். இதற்கேற்ப வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த வீரர்களில் மூவர் மாத்திரமே தற்பொழுது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேடுதல் நடவடிக்கையின்போது 1,563 சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது

மேல் மாகாணத்தில் நேற்றைய தினம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 1,563 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையின்போது 1,824சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது

பொலிசாரினால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 1,824 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவ சீருடை மற்றும் வெடிபொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது

இராணுவ சீருடைகள், ஐந்து கிராம் ஹெரோயின், இரண்டு துப்பாக்கி ரவைகள், நான்கு வெற்று மெகசின்கள், சட்ட விரோதமான இரண்டு கூர்மையான கத்திகள் மற்றும் முச்சக்கர வண்டியுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்றைய தினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ராஜாங்கனையைச் சேர்ந்த 12 வயது சிறுவனுக்கு மட்டுமே வைரஸ் தொற்று உறுதி

ராஜாங்கனை பிரதேசத்தில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட 139 பேருக்கான பிசிஆர் பரிசோதனையில் 12 வயது சிறுவன் ஒருவனுக்கு மட்டுமே வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அணில் ஜாசிங்க தெரிவித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

அனுமதிக்கப்படாத வாகன தரிப்பிடங்களில் நிறுத்தப்படும் வாகனங்கள் தொடர்பில் பொலிஸார் தீவிர கண்காணிப்பு

அனுமதிக்கப்படாத தரிப்பிடங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதற்கு எதிராக கடுமையான சட்டத்தை இன்று (ஜூலை,17) முதல் அமுல்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சிறைச்சாலை அதிகாரிகளினால் 53 தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டது

வெலிக்கடை, கொழும்பு மற்றும் களுத்துறை சிறைச்சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சிறைச்சாலை அதிகாரிகளினால் 53 கையடக்க தொலைபேசிகள் அவற்றுக்கு பயன்படுத்தப்படும் பெட்டரிகள் மற்றும் சிம் காட்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கந்தக்காட்டிற்கு விஜயம் செய்த 114 பார்வையாளர்களுக்கு தொற்று ஏற்படவில்லையென உறுதி

கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்வையிடச் சென்ற குடும்ப உறுப்பினர்கள் 114 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போது அவர்களுக்கு தொற்று ஏற்பட வில்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையின்போது 1,642 சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது

பொலிசாரினால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 1,642 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.