--> -->

பாதுகாப்பு செய்திகள்

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

டோஹா, கட்டாரிலிருந்து மேலும் சில இலங்கையர்கள் தாய்நாட்டிற்கு வருகை

டோஹா, கட்டாரிலிருந்து மேலும் 13 இலங்கையர்கள் நேற்றைய தினம் நாடு திரும்பியுள்ளனர்.இவர்கள் கட்டார் நாட்டின் விமான சேவைக்கு சொந்தமான QR 668 எனும் விமானத்தின் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் ஜனித் விதானபதிரண தெரிவித்தார்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான 'குடு அன்ஜு'வின் உதவியாளர் பொலிஸாரினால் கைது

பிரபல பாதாள உலககுற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான 'குடு அன்ஜு'வின் உதவியாளர் கொழும்பு பஞ்சிகாவத்தை பிரதேசத்தில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டார்.  


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வெலிகட சிறைச்சாலைக்கு ஹெரோயின் போதைப் பொருளை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட பூனை சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவினரால் பிடிக்கப்பட்டது

ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் சிம் அட்டைகளை வெலிக்கடை மெகசின் சிறைச்சாலைக்குள் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட பூனை ஒன்று சிறைச்சாலை அதிகாரிகளினால் நேற்றைய தினம் பிடிக்கப்பட்டது.





செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பூச மற்றும் கல்பிட்டிய கடற்படை தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 21 பேர் வீடு திரும்பினர்

பூச மற்றும் கல்பிட்டிய கடற்படை தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த 21 பேர் தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடல் மார்க்கமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட மஞ்சள் கடற்படையினர் வசம்

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட மஞ்சளுடன் சந்தேக நபர் ஒருவரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

களுத்துறை பகுதி சுற்றிவளைப்பின் போது பொலிஸார் எதனோல் ரக போதைப்பொருட்கள் கண்டுபிடிப்பு

தெற்கு களுத்துறை மகாஹீனிடிங்கள பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சுமார் 4,000 லீட்டர் எதனோல் ரக சட்டவிரோத போதைபொருட்களை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று (ஜூலை 29) கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வெளிநாடுகளில் உள்ள இலங்கை பிரஜைகளை மீள அழைக்கும் பணிகள் ஆரம்பம்

வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்ப எதிர்பார்த்திருக்கும் இலங்கை பிரஜைகளை நாட்டிற்கு மீள அழைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கமைய, ஜூலை 31, ஆகஸ்ட் 01ஆம் திகதிகளில் டுபாய் மற்றும் அபுதாபி நாடுகளில் இருந்து  275 பேர் கொண்ட இரண்டு குழுக்களை உள்ளடக்கிய இலங்கைப் பிரஜைகளுடன் இரு விமானங்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக ஜனாதிபதியின் வெளிநாட்டு விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் அட்மிரல் (ஒய்வு) ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

போதைப்பொருள் குற்றங்களுக்காக கலால் திணைக்கள சார்ஜென்ட் ஒருவரும் சிறைச்சாலை அதிகாரி ஒருவரும் கைது

பமுனுகம பகுதியில் தனியார் கம்பனி ஒன்றின் எதனோலினை கொண்டு சென்ற கலால் திணைக்களத்தில் சேவையாற்றும்  சார்ஜென்ட் ஒருவர் பொலிஸாரினால் நேற்று (ஜூலை 28) கைது செய்யப்பட்டுள்ளார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

விமானப்படையினரின் தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து 165 பேர் வீடுகளுக்கு அனுப்பிவைப்பு.

வன்னியில் இலங்கை விமானப்படையினரால் முகாமைத்துவம் செய்யப்படும் தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட165 பேர் இன்று காலை (ஜூலை, 29) வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பொதுமக்களிடமிருந்து தகவல்களை பெற பொலிஸாரினால் அவசர தொலைபேசி இலக்கம், தொலைநகல் மற்றும் மின்னஞ்சல் முகவரி என்பன அறிமுகம்

பொதுமக்கள் பொலிசாருக்கு இலகுவாக தகவல்களை வழங்குவதற்காக  துரித அழைப்பு தொலைபேசி இலக்கங்கள், மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் தொலைநகல் இலக்கம் என்பனவற்றை பொலிசார் அறிமுகப்படுத்தியுள்ளனர். இதற்கமைய "1997" மற்றும் "1917" ஆகிய இரண்டு  துரித அழைப்பு தொலைபேசி இலக்கங்கள், இதனோடிணைந்த மின்னஞ்சல் முகவரிகள் இரண்டு மற்றும் ஒரு தொலைநகல் இலக்கம் என்பன அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

யாழில் ‘நல்லிணக்க மையம்’ கோலாகலமாக திறந்து வைப்பு

அண்மையில் (ஜூலை 25) யாழ் சித்தங்கேணிப்பகுதியில்  ‘நல்லிணக்க மையம்’ ஒன்று கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

போதைப்பொருள் மோசடியாளர்களுக்கு உதவிய சிறைச்சாலை சார்ஜன் கைது

போதைப்பொருள் மோசடியாளர்களுக்கு உதவியமை தொடர்பில் கொழும்பு சிறைச்சாலையில் பணிபுரியும்  சார்ஜன் ஒருவர் பொலிஸாரினால் நேற்று (ஜூலை 27) கைது செய்யப்பட்டுள்ளார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பண மோசடியில் ஈடுபட்ட ஐந்து சந்தேக நபர்கள் கைது

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் மோசடி செய்த சந்தேக நபர்கள் ஐவரை நேற்று (ஜூலை 26) கிருலப்பனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையின்போது 2,057 சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது

பொலிசாரினால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 2, 057 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கரையோரப்பகுதிகளில் வெள்ளம் ஏற்பட சாத்தியம் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்தை அண்டிய பகுதிகளில் உயர் அலைகள் காரணமாக கடல் அலைகள் கரையை அண்டிய நிலப்பகுதிகளுக்கு வரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ருவன்வெல்ல பகுதியில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியா தகவலுக்கு அமைய ருவன்வெல்ல, இம்புலான பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விஷேட தேடுதல் நடவடிக்கைகளின்போது ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று (ஜூலை 25) கைதுசெய்யப்பட்டுள்ளார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பீ சீ ஆர் பரிசோதனைகளுக்காக கொவிட் -19 நிதியத்திலிருந்து 36 மில்லியன் ரூபா

பீ சீ ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக சுகாதார, சமூக, பாதுகாப்பு நிதியத்தியிலிருந்து 35,605,812.00 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தொல்பொருள் கட்டளைச் சட்டத்தை திருத்துவது குறித்து ஜனாதிபதி கவனம்

தொல்பொருள்களை பாதுகாத்து தேசிய மரபுரிமைகளை உறுதி செய்வதற்கு தொல்பொருள் கட்டளைச் சட்டத்தை திருத்துவது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஆழ்கடலில் தத்தளித்த கென்ய நாட்டு கப்பலுக்கு இலங்கை கடற்படை உதவி

மின்தடை காரணமாக ஆழ்கடலில் தத்தளித்து கொண்டிருந்த கென்ய நாட்டு கப்பல் ஒன்றை  இலங்கை கடற்படையின்  சிந்துறல  கப்பல் இன்று (24) மீட்டுள்ளது. இக்கப்பல் இலங்கையின் காலி கடற்பரப்பிலிருந்து சுமார்  170 கடல் மைல் தொலைவில்  (306 கிலோமீட்டர்) வைத்து மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையின் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.   


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

2,094 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடுதிரும்பயுள்ளனர்

இறுதியாக 17 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியதை அடுத்து, குணமடைந்து வீடு திரும்பியோரின் மொத்த எண்ணிக்கை  2094 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயாளர் பிரிவினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம் தெரிவிக்கப்படுகிறது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

'இடுகம' கொவிட் -19 நிதியத்தின் மீதி 1,511 மில்லியனையும் தாண்டியுள்ளது.

தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் 'இடுகம' கொவிட் -19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,511  மில்லியனையும் தாண்டியுள்ளது.