செயலாளர் செய்திகளைப் பாதுகாக்கவும்
சுதந்திர தின வைபவத்தை சுகாதார வழிமுறைகளுக்கமைய நடத்துவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி
இலங்கையின் 73ஆவது சுதந்திர தின பிரதான வைபவத்தை அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் சுகாதார வழிமுறைகளை முழுமையாக பின்பற்றி சுதந்திர சதுக்கத்தில் நடத்துவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன அமைச்சரும், பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
போதைப்பொருள் தொடர்பான பிரச்சினைகளை கையாள்வதற்கான சட்ட சீர்திருத்தங்கள் - பாதுகாப்பு செயலாளர்
போதைப் பழக்கத்திற்கு ஆளான சிறு குற்றவாளிகளை சிறைச்சாலைகளுக்குப் பின்னால் தக்கவைத்துக்கொள்வதற்குப் பதிலாக, அவர்களை புனவாழ்வு மையங்களுக்கு அனுப்புவதற்கு விரைவில் சட்ட சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) நேற்று (ஜன. 29) தெரிவித்தார்.
'பாதுகாப்பு மீளாய்வு 2020' வெளியிடப்பட்டது
தேசிய பாதுகாப்பு கற்கை நிலையத்தினால் இன்று வெளியிடப்பட்ட 'பாதுகாப்பு மீளாய்வு 2020' வெளியீட்டு நிகழ்வில் பிரதான உரை நிகழ்த்திய பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் கடல் பாதுகாப்பு உள்ளிட்ட தேசிய பாதுகாப்பு தொடர்பான பல முக்கிய கருப்பொருள் தொடர்பில் கலந்துரையாடி தற்காலத்தில் அவசியமாகும் பாரம்பரியமற்ற அச்சுறுத்தல்கள் மற்றும் நாடுகடந்த குற்றச் செயல்கள் எனும் தற்கலாலத்தில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய பல முக்கிய விடயங்கள் ஆராயும் ஒரு முக்கிய தளமாக அமைத்துள்ளதாக தெரிவித்தார்.
இராணுவம், சிவில் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் தீகவாபி தூபி மறுசீரமைப்பிற்கு தேவையான செங்கற்களை தயாரிக்க நடவடிக்கை.
தீகவாபி தூபி மறுசீரமைப்பு திட்டத்திற்கு நாளொன்றுக்கு 30,000 தரமான செங்கக்கற்கள் கோரப்படுவதால், இராணுவம், சிவில் பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்புடன் செங்கற்களை உற்பத்தி செய்வதற்கான வழிமுறை உருவாக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார்.
சந்தஹிரு சேய நிர்மாணப் பணியின் நிறைவு தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் ஆராய்வு
சந்தஹிரு சேய நிர்மாணப் பணிகளை ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட திகத்திலேயே நிறைவு செய்வதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு நிர்மாணப் பணியில் ஈடுபட்டு வரும் அனைத்து பங்குதாரர்களிடமும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) வேண்டுகோள் விடுத்தார்.
தீகவாபி தூபியின் முன்னைய பெருமை விரைவில் யதார்த்தமாகிவிடும் - பாதுகாப்பு செயலாளர்
முன்னர் தொடங்கப்பட்ட பயனற்ற முயற்சிகளைப் போலல்லாமல், இம்முறை தீகவாபி தூபியின் முன்னைய பெருமையை விரைவில் எம்மால் கண்டுகொள்ள முடியும் என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) நேற்று (ஜன. 13) பாதுகாப்பு அமைச்சில் ஊடகங்களிடம் உரையாற்றும் போது உறுதியளித்தார்.
தேர்ஸ்டன் கல்லூரி விழாவில் பாதுகாப்புச் செயலாளர் கலந்து கொண்டார்
பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷவினால் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது
புதிய இந்திய பிரதி பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு
புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன் கேர்ணல் புனித் சுசில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று சந்தித்தார்.
'தீக்கவாப்பி நிதியத்திற்கு' 1.6 மில்லியன் ரூபா நன்கொடை
தென்கொரியாவை தளமாகக் கொண்டு இயங்கும் 'ஸ்ரீலங்காராம பௌத்த சங்கம்' தீக்கவாப்பி நிதியத்திற்கு 1.6 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலையை நன்கொடையாக வழங்கி வைத்தது.
பங்களாதேஷ் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலருடன் சந்திப்பு
இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கொமொடோர் முஹம்மட் ஷபிஉல் பாரி பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று (ஜனவரி, 05) சந்தித்தார்.
அரசத் துறை நிறுவனங்கள் இராணுவத்தினால் கையகப்படுத்தவில்லை - பாதுகாப்பு செயலாளர்
இராணுவத்தால் பொறுப்பேற்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் திட்டமானது ஒரு தற்காலிக நடவடிக்கையாகும் எனவும் அரச நிதியை சேமிக்கும் பொருட்டு அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமையவே முன்னெடுக்கப்படுவதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார்.
ஆயுதம் ஏந்த எவருக்கும் அனுமதியில்லை – பாதுகாப்புச் செயலாளர்
பிரிவினைவாதத்திற்கோ தீவிரவாதத்திற்கோ ஒருபோதும் இடமில்லை என்றும் அடுத்த ஆண்டு முதல் இது போன்ற முயற்சிகளை தடுக்க மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) நேற்று (31, 2020) தெரிவித்தார்.
Tamil
கண்டியில் உள்ள புனித தந்தத்திற்கு பாதுகாப்பு செயலாளர் மரியாதை செலுத்தினார்
கண்டிக்கு விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, அங்கு வைக்கப்பட்டுள்ள புனித தந்தத்திற்கு இன்று (டிச 29 ) மரியாதை செலுத்தினார்.
பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஜெனரலாக தரமுயர்த்தப்பட்டார்
பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) சற்று முன்னர் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஜெனரலாக தரமுயர்த்தப்பட்டார்.
Tamil
பிரான்ஸ் தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவர் அதிமேதகு எரிக் லவர்து பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று (டிசம்பர்.23) சந்தித்தார்.
2021இல் சட்டவிரோத போதைப்பொருள் வலையமைப்பை கட்டுப்படுத்த விரிவான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் - பாதுகாப்பு செயலாளர் உறுதியளிப்பு
நாட்டில் சட்டவிரோத போதைப்பொருள் வலையமைப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் அடுத்த ஆண்டில் (2021) மேலும் பலப்படுத்தப்படும் என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) இன்று (டிசம்பர், 22) தெரிவித்தார்.
“நேரப் பற்றாக்குறை” எனும் சொல்லினை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாது
கால வரையறை என்பது ஒரு கலைப்படைப்பு / எழுத்தாக்கம் ஒன்றினை உருவாக்குவதற்கு எவ்விதத்திலும் ஒரு தடையாக அமையாது என பாதுகாப்பு செயலாளரும் தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளருமான மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார். தன்னால் இன்றுவரை எழுதி வெளியிடப்பட்ட புத்தகங்கள் தொடர்பான சொந்த தனது அனுபவங்களை பகிரும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இராணுவத்தின் 2020 -2025 ஆண்டுக்கான எதிர்கால வியூகம்
இராணுவத்தின் 2020 -2025 ஆண்டுக்கான திட்டங்கள் அடங்கிய இராணுவ வழி எதிர்கால வியூகம் 2020-2025 இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்த அங்குரார்ப்பண நிகழ்வு, பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் திரு. லலித் வீரதுங்கவின் முன்னிலையில் இடம்பெற்றது.
மனிதர்களால் ஏற்படுத்தும் அழிவோ, இயற்கை அழிவோ, எந்தவொரு அச்சுறுத்தல்களின் போதும் மக்களை பாதுகாக்க செயற்பட வேண்டும் - பாதுகாப்புச் செயலாளர்
இராணுவ தலைவர்கள் இன்று போன்று என்றுமே சகல துறைகளிலும் பங்களிப்பு செய்பவர்கள் என எதிர்பார்க்கப்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன (ஓய்வு) தெரிவித்தார்.
அயகம மண்சரிவு அபாயத்தை குறைக்கும் வேலைத்திட்டம் பாதுகாப்புச் செயலாளரினால் அங்குரார்ப்பணம்
தொடர்ச்சியாக மண்சரிவு அபாயம் ஏற்படும் அயகம பிரதேசத்திற்கு விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளர் (ஒய்வு) கமல் குணரட்ன, அயகம பிரதேசத்தில் மண்சரிவு அபாயத்தை குறைக்கும் வகையில் 418 மில்லியன் ...
அபாய முன்னெச்சரிக்கை மற்றும் அனர்த்தங்களை குறைத்துக்கொள்ளல் தொடர்பான சர்வதேச இணைய மூல கருத்தரங்கு நிறைவு
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மூன்று நாட்களாக இடம்பெற்று வந்த அபாய முன்னெச்சரிக்கை மற்றும் அனர்த்தங்களை குறைத்துக்கொள்ளல் தொடர்பான சர்வதேச இணைய மூல கருத்தரங்கு நேற்றையதினம் நிறைவுற்றது.
தீகவாபி தூபியின் புனர்நிர்மாண பணிகளை பாதுகாப்புச் செயலாளர் மீளாய்வு செய்தார்
தீகவாபி தூபியின் புனர்நிர்மாண பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரட்ன தலைமையில் மீளாய்வு செய்யப்பட்டது.