செய்திகள்
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முறையான நடவடிக்கைகளை வகுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்
குறைகள் மற்றும் தவறுகளை கவனத்திற்கொண்டு கொரோனா வைரஸை ஒழிப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள செயத்திட்டங்க்களை வலுப்படுத்துவதன் ஊடாக அதனை வெற்றிகொள்ள வேண்டியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Tamil
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த போராடும் முப்படை வீரர்களுக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயற்பட வேண்டாம் - பாதுகாப்பு செயலாளர்
முப்படை வீரர்களுக்கும் விசேடமாக கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த போராடும் நடவடிக்கையின் போது பாதிக்கப்பட்ட இலங்கை கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட வேண்டாம் என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இராணுவத்திற்காக பாடசாலைகளை தனிமைப்படுத்தும் நிலையங்களாக மாற்றுதல் ஆதாரமற்றது - பாதுகாப்பு செயலாளர்
முப்படையினரை 14 நாட்கள் தனிமைப்படுத்தும் செயற்பாடுகளுக்கு பாடசாலைகள தனிமைப்படுத்தும் நிலையங்களாக அமைக்குமாறு எவ்வித ஆலோசனைகளும் வழங்கப்படவில்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
Tamil
Tamil
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட விடயங்கள் தொடர்பில் மதிப்பளிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு ஊடகங்களிடம் வேண்டுகோள்
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை சுகாதார அதிகாரிகள் பரிசோதனை செய்யும் சந்தர்ப்பங்களில் தொற்றுக்குள்ளானவர்களின் வதிவிடங்களை பதிவு செய்து அவற்றை கான்பிக்கும்போது அவர்களின் தனிப்பட்ட விடயங்களுக்கு மதிப்பளித்து செயற்படுமாறு அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களிடம் பாதுகாப்பு அமைசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
முப்படை அதிகாரிகள் மற்றும் படைவீரர்களின் அனைத்து விடுமுறைகளை பாதுகாப்பு அமைச்சினால் ரத்து
முப்படை அதிகாரிகள் மற்றும் படைவீரர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து விடுமுறைகளும் பாதுகாப்பு அமைச்சினால் ரத்து செய்யப்படுவதாகவும் எனவே, அனைத்து படைவீரர்களையும் தத்தமது முகாம்களுக்கு திரும்பி அறிக்கையிடுமாறு பணித்துள்ளது.
வெலிசர கடற்படைத் தளத்தில் உள்ள கடற்படை வீரர்களுக்கான பிசிஆர் பரிசோதனையை கடற்படை விரைவுபடுத்தியுள்ளது - கடற்படைத் தளபதி
வெலிசர கடற்படைத் தளத்தில் உள்ள கடற்படை வீரர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளும் பணிகளை விரைவுபடுத்த பட்டுள்ளதாகவும் மேலும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதி பூரணமாக முடக்கப்பட்டுள்ள தாகவும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா தெரிவித்துள்ளார்.
முகக்கவசங்கள் மற்றும் சேஜிகள் ஓவரோல் கிட் ஆகியவற்றை தொழில்துறை கற்கைகளுக்கான ஜீனியஸ் கல்லூரி மற்றும் எஸ் கே டி நிறுவங்களினால் பாதுகாப்பு அமைச்சுக்கு அன்பளிப்பு
குருணாகலிலுள்ள தொழில்துறை கற்கைகளுக்கான ஜீனியஸ் கல்லூரி மற்றும் ஜா எலயிலுள்ள எஸ் கே டி உற்பத்தி நிறுவங்களினால் 2,000 க்கும் மேற்பட்ட முகக்கவசங்கள் மற்றும் 250 சேஜிகள் ஓவரோல் கிட் என்பவற்றை பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்தனவிடம் நேற்று (23) கையளித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் இலங்கை இராணுவத்தின் செயற்பாடுகளுக்கு ஜப்பானிய அரசு பாராட்டு
நாட்டில் கொரோனா வைரஸை எதிர்த்து செயற்படுவதற்கு சுகாதார அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் இராணுவம் மற்றும் பொலிஸாரின் வகிபாகத்தை ஜப்பானிய அரசு பாராட்டியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஏனைய நாடுகளிடமிருந்து இராணுவ உதவி பெற வேண்டிய அவசியம் கிடையாது - பாதுகாப்புச் செயலாளர்
இலங்கையில் கொரோன வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மற்ற நாடுகளிடமிருந்து இராணுவ உதவி பெற எந்த ஒரு அவசியமும் கிடையாது என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல்(ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
Tamil
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் விரைவில் அரசினால் சட்டத்தின் முன் கொண்டு வரப்படுவார்கள்- பாதுகாப்பு செயலாளர்
சுமார் 270 க்கும் அதிகமானோரின் உயிரிழப்புக்கும் 500க்கும் அதிகமானனோரின் படுகாயத்திற்கும் காரணமான உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலை, திட்டமிட்டு, நிதியுதவியளித்து, ஆதரவளித்த அனைத்து குற்றவாளிகளையும் அரசாங்கம் வெளிக்கொண்டுவரும் என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு)கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
வீடுகளில் இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு ஞாபகார்த்த தின நிகழ்வுகள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான பொது நினைவு நாள் நிகழ்வுகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள கொழும்பு பேராயர் அதியுத்தம கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, அனைத்து நினைவு நாள் நிகழ்வுகளையும் பொதுமக்கள் பங்கேற்பின்றி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களுக்கு உதவும் வெளியுறவு அமைச்சு
உலர் உணவு விநியோகத்தை அதிகரிக்கவும், நாட்டுக்கு திரும்பி வரமுடியாத நிலையில் வெளிநாட்டில் வசிப்போரின் பிரச்சினைகள் தொடர்பாக முறையான செயற்பாடுகளை முன்னெடுக்கவும் திரைசேரியிலிருந்து கூடுதல் நிதி ஒதுக்கீட்டை வெளிவிவகார அமைச்சு கோரியுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் ரிஷாத்தின் சகோதரர் கைது
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டிருந்ததன் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவர் புத்தளத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய செனரத்ன தெரிவித்தார்.
சுவதேசி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தினால் படையினருக்கு கையளிக்க ஒரு தொகை சவர்க்காரம் மற்றும் கிருமி நீக்கும் திரவம் என்பன அன்பளிப்பு
வரையறுக்கப்பட்ட சுவதேசி இன்டஸ்ட்ரீஸ் வேர்க்ஸ் நிறுவனத்தினால் ஒரு தொகை சவர்க்காரம் மற்றும் கிருமி நீக்கும் திரவம் என்பன பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் ஓய்வு கமல் குணரத்னவிடம் கையளிக்கப்பட்டது.
கடல் மார்க்கமாக நுழையும் சட்டவிரோத குடியேற்றகாரர்களை கண்டறிய இலங்கை விமானப்படையினரார் வான்வழி கண்காணிப்பு
உலகளாவிய கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலைகளை சாதகமாக பயன்படுத்தி நாட்டுக்குள் பிரவேசிக்கும் சட்ட விரோத குடியேற்றக்காரர்களை கண்காணிக்கும் இலங்கை கடற்படையினரின் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் இலங்கை விமானப் படை, வான்வழி கண்காணிப்பினை ஆரம்பித்துள்ளது.
பரந்துபட்ட திட்டமிடல் காரணமாக இலங்கை கடற்படையினரால் போதைப்பொருள் கடத்தலை வெற்றிகரமாக முறியடிக்க முடிந்தது - கடற்படை தளபதி
நவீன தொழில்நுட்ப பயன்பாடு, சர்வதேச ஒத்துழைப்புகள் மற்றும் கடற்படை உளவுத்துறை செயற்பாடு உள்ளிட்ட ஒன்றிணைக்கப்பட்ட திட்டமிடல் நடவடிக்கைகளே, ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தலை வெற்றிகரமாக முறியடிக்க காரணம் என இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கொரியாவில் உள்ள இலங்கையர்கள் ரூ. 4 லட்சம் நன்கொடை
'அபி வெனுவென் அபி- 67வது குழு' ஐச் சேர்ந்த கொரியாவில் தொழில்புரியும் இலங்கையர்களால் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக 400,000 ரூபா அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் இருந்து நாட்டை பாதுகாக்க இராணுவ வீரர்கள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் - இராணுவத் தளபதி
கொரோனா வைரஸ் பரவல் இருந்து நாட்டை பாதுகாக்க இராணுவத்தினர் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் எனவும் அவர்கள் முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க குடும்ப உறுப்பினர்களுடன் புத்தாண்டை கொண்டாடுமாறு ஜனாதிபதி வேண்டுகோள்
நாட்டினையும் நாட்டு மக்களினையும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்க அரசாங்கத்தின் வழிகாட்டுதலுக்கு அமைய செயற்படுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்துள்ள சிங்கள தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கைகளுக்காக வரையறுக்கப்பட்ட ரக்ன ஆரக்ஷக லங்கா நிறுவனத்தினால் ரூ. 3 மில்லியன் நன்கொடை
பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் ஒன்றான நாட்டில் முதற்தர பாதுகாப்பு சேவை வழங்கும் வரையறுக்கப்பட்ட ரக்ன ஆரக்ஷக லங்கா நிறுவனத்தினால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கைகளுக்காக ரூ. 3 மில்லியன் நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக செயலாற்ற பாதுகாப்பு அமைச்சிற்கு ஹுவாவி நிறுவனம் டிஜிட்டல் தீர்வுகள் அளிப்பு
கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக செயலாற்ற உலகின் முதற்தர தகவல் தொடர்பாடல் நிறுவனமான ஹுவாவி நிறுவனம், பாதுகாப்பு அமைச்சிற்கு டிஜிட்டல் கருவிகளை வழங்கியது.